6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

Table of Contents

6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

வேதகாலம் என்றால் என்ன

  • ஆரியர்களின் வருகையால் துவங்கிய காலம் = வேதகாலம்.
  • வேதகாலம் என்பது கி.மு (பொ.ஆ.மு) 1500 – 600 வரையிலான இடைப்பட்ட காலம் ஆகும்.
  • வேதங்கள்” என்ற வார்த்தையில் இருந்து இச்சொல் பெறப்பட்டது.

ஆரியர்கள் என்போர் யார்

  • ஆரியர்கள் பேசிய மொழி = இந்தோ ஆரிய மொழி.
  • ஆரியர்களின் முதன்மைத் தொழில் = கால்நடை மேய்த்தல்.
  • ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர் = மத்திய ஆசியாவில் இருந்து, இந்துகுஷ் மலையின் “கைபர் கணவாய்” வழியாக இந்தியா வந்தனர்.
  • ஆரியர்களின் பின்பற்றிய வேளாண்மை முறை = அழித்து எரித்து சாகுபடி செய்யும் முறை (slash and burn agriculture).

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

அழித்து எரித்து சாகுபடி செய்யும் முறை என்றால் என்ன

  • நிலத்தில் உள்ள மரம், செடி மற்றும் கொடிகளை வெட்டி எரித்து, அந்நிலத்தின் மீது சாகுபாடி செய்யும் முறை.
  • வேளாண்மை முடித்த பிறகு அந்நிலம் கைவிடப்பட்டு வேறொரு நிலத்தில் சாகுபடி செய்வர்.

வேதகாலத்தின் காலம், பரப்பு, சான்றுகள்

  • வேதகாலத்தின் புவியியல் பரப்பு = வடஇந்தியா
  • வேதகாலத்தின் காலம் = இரும்புக்காலம்
  • வேதகாலத்தின் கால அளவு = கி.மு (பொ.ஆ.மு) 1500 – 600
  • வேதகால சான்றுகள் = வேதகால இலக்கியங்கள்
  • வேதகால நாகரிகத்தின் இயல்பு = கிராம நாகரிகம்.
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

  • வேதகாலம் இரண்டு காலகட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
    1. தொடக்க வேதகாலம் அல்லது ரிக் வேதகாலம் = கி.மு (பொ.ஆ.மு) 1500 – 1000 வரை
    2. பிந்தைய வேதகாலம் = கி.மு (பொ.ஆ.மு) 1000 – 600 வரை

ஆரியர்களும் இந்தியாவில் அவர்களின் வாழ்விடங்களும்

  • ரிக்வேதகால ஆரியர்கள் = நாடோடிகள்.
  • ரிக்வேதகால ஆரியர்களின் முக்கிய சொத்து = கால்நடைகள்.
  • ரிக்வேதகால ஆரியர்களின் வாழ்விடம் = பஞ்சாப் (ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி எனப் பொருள்படும் “சப்த சிந்து” பகுதி).
  • கி.மு (பொ.ஆ.மு) 1000 காலக்கட்டத்தில் ஆரியர்கள் கங்கைச் சமவெளி பகுதி நோக்கி குடியேறினர்.
  • இரும்புக் கோடரி, இரும்பினால் ஆன கலப்பையை பயன்படுத்தினர்.

வேதகால இலக்கியங்கள்

  • வேதகால இலக்கியங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
    1. சுருதிகள் = நான்கு வேதங்கள் + பிராமணங்கள் + ஆரண்யங்கள் + உபநிடந்தங்கள்.
    2. ஸ்மிருதிகள் = இதிகாசங்கள் + புராணங்கள் + ஆகமங்கள் + தாந்தரீகங்கள் + சூத்திரங்கள்.
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

சுருதிகள் என்றால் என்ன

  • சுருதிகள் என்பது = புனிதமானவை, நிலையானவை, கேள்விகள் கேட்க முடியாத உண்மைகள் என்று பொருள்.
  • சுருதிகள் யாவை = நான்கு வேதங்கள் + பிராமணங்கள் + ஆரண்யங்கள் + உபநிடந்தங்கள்
  • சுருதி என்பதன் பொருள் = கேட்டல் (அல்லது எழுதப்படாதது).
  • வாய்மொழியாக அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுவது = சுருதிகள் ஆகும்.

ஸ்மிருதிகள் என்றால் என்ன

  • ஸ்ம்ரிதிகள் நிலையானவை அல்ல. தொடர்ந்து மாற்றம் பெறுவது ஆகும்.
  • ஸ்ம்ரிதிகள் = இதிகாசங்கள் + புராணங்கள் + ஆகமங்கள் + தாந்தரீகங்கள் + சூத்திரங்கள்.
  • மதம் குறித்த போதனைகளை கொண்ட நூல் = ஸ்ம்ரிதி.
  • ஸ்ம்ரிதி என்பதன் பொருள் = இறுதியாக எழுதப்பட்ட பிரதி.

சத்யமேவ ஜெயதே

  • “சத்யமேவ ஜெயதே” என்ற சொல் எங்கிருந்து எடுக்கப்பட்டது = முண்டக உபநிடதம்.
  • “சத்யமேவ ஜெயதே” என்ற சொல்லின் பொருள் = வாய்மையே வெல்லும்.

ரிக் வேதகால அரசியல்

  • ரிக்வேதகால அரசியலின் அடிப்படை = ரத்த உறவுகள் அடிப்படையானது.
  • ரிக்வேதகால அரசியலின் அடிப்படை அலகு = குலம் (clan).
  • ரிக்வேதகால “குலத்தின்” தலைவர் = குலபதி.
  • கிராமத்தின் தலைவர் = கிராமணி.
  • பல கிராமங்கள் சேர்ந்த தொகுப்பு = விஸ் (குலம்)
  • விஸ் தொகுப்பின் தலைவர் = விசயபதி.
  • “ஜனா” எனப்படும் இனக்குழுவின் தலைவர் = ராஜன்.
  • இனக்குழுவின் தலைவரான ராஜனை, “ஜனஸ்யகோபா” (மக்களின் பாதுகாவலர்) என்று அழைப்பர்.
  • ரிக் வேத காலத்தில் பரதர், மத்யசர், புரு போன்ற பல்வேறு அரசுகள் (ராஷ்டிரம்) இருந்தன.

வேதகால சபா சமிதி

  • அரசரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் அமைப்புகள் = விதாதா, சபா, சமிதி, கணா.
  • ரிக்வேதகாலத்தில் மிகப்பழமையான இனக்குழுவின் பொதுக்குழு எது = விதாதா.
  • விதாதா = இனக்குழுவின் பொதுக்குழு
  • சபா = மூத்தோர்களைக் கொண்ட மன்றம்
  • சமிதி = மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு.

ரிக் வேதகால அரசர்கள்

  • அரசருக்கு உதவி செய்பவர் = புரோகிதர் (தலைமை குரு)
  • அரசியல், பொருளாதாரம், ராணுவம் போன்ற விசயங்களில் அரசருக்கு உதவுபவர் = சேனானி (படைத்தளபதி).
  • அரசர்கள் தங்களது நிலையை வலுப்படுத்திக் கொள்ள பல “சடங்குகளையும், யாகங்களையும்” நடத்தினர்.
  • பல்வேறு ஜனாக்கள் (அல்லது) இனக்குழுக்கள் சேர்ந்து உருவானது = ஜனபதங்கள் (ராஷ்டிரங்கள்).
  • சபா, சமிதி ஆகியவை தங்கள் முக்கியத்துவத்தை இழந்த காலம் = பிந்தைய வேதகாலம்.
  • பிந்தைய வேதகாலத்தில் இல்லாமலே போன மன்றம் = விதாதா.

பாலி என்பதன் பொருள்

  • அரசனுக்கு, மக்களே தாமாக முன்வந்து கொடுத்த காணிக்கை = பாலி (bali).
  • பிந்தைய வேதகாலத்தில் “பாலி”, ஒரு வரியாக மாற்றம் பெற்று முறையாக வசூலிக்கப்பட்டது.
  • இது ஒரு வரி ஆகும்.
  • தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கை வரியாக செலுத்த வேண்டும்.

வேதகால சமூக அமைப்பு

  • ரிக்வேதகால சமூக அமைப்பு = தந்தை வழி சமூக அமைப்பு.
  • வெள்ளை நிற தோல் கொண்ட ஆரியர்கள், கருப்பு நிற தோல் கொண்ட ஆரியர் அல்லாத மக்களை “தசயுக்கள், தாசர்கள்” என்று அழைத்தனர்.
  • தொடக்க வேத காலத்தில் இருந்த சமுதாய அமைப்புகள் = மூன்று பிரிவுகள் (treyi). அவை,
    1. விஸ் எனப்படும் பொதுமக்கள்
    2. சத்ரியர்கள் (போர் வீரர்கள்)
    3. பிராமணர்கள் (மதகுருமார்கள்)
  • பிந்தைய வேத காலத்தில் இருந்த சமுதாய அமைப்புகள் = நான்கு பிரிவுகள் (வர்ணாஸ்ரம முறை). அவை,
    1. பிராமண மதகுருக்கள்
    2. சத்திரிய போர் வீரர்கள்
    3. வைசியர்கள் (நில உடமையாளர்கள்)
    4. சூத்திரர் (வேலை செய்பவர்கள்)

ரிக் வேத காலத்தில் பெண்களின் நிலை

  • பெண்களுக்கு சுதந்திரம் இருந்தது.
  • குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல் இல்லை.
  • கைம்பெண்கள் மறுமணம் செய்துக்கொள்ள தடைகள் இல்லை.
  • ஆனால் பெற்றோர்களின் சொத்தில் உரிமை வழங்கப்படவில்லை.
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

பிந்தைய வேதகாலத்தில் பெண்களின் நிலை

  • சமூகம், குடும்பம் ஆகிய இரண்டிலும் பெண்களின் நிலை குறைந்தது.
  • பலதார மணம் அதிகளவில் நடைபெற்றது.
  • கைம்பெண் மறுமணம் ஊக்கப்படுத்தப்படவில்லை.
  • கல்வி மறுக்கப்பட்டது.
  • கலப்புத் திருமணம் ஆதரிக்கப்படவில்லை.

ரிக் வேதகால பொருளாதாரம்

  • கால்நடை மேய்ச்சல் முக்கிய தொழில் ஆகும்.
  • “பழுப்பு மஞ்சள் நிற மண்பாண்டங்கள்” எக்காலத்தை சேர்ந்தவை? = ரிக் வேதகாலத்தை சேர்ந்தவை.
  • நதிப்பகுதிகளில் குடியேறிய பிறகு வேளாண்மை செய்தனர்.
  • ரிக் வேதகாலத்தில் முதன்மை பயிராக இருந்தது = யவா (பார்லி)
  • சிந்த்வெளி மக்கள் பயிரிட்ட “கோதுமை, பருத்தி” பற்றிய குறிப்புகள் ரிக்வேத காலத்தில் இல்லை.

பிந்தைய வேதகாலத்தில் பொருளாதாரம்

  • யானைகளை பழக்கப்படுத்தத் துவங்கினர்.
  • “சாம்பல் நிற மட்பாண்ட பண்பாடு” எக்காலத்தை சேர்ந்தது? = பிந்தைய வேதகாலம்.
  • பிந்தைய வேதகாலத்தில் பயிரிடப்பட்டவை = நெல், கோதுமை, பார்லி.
  • பண்டமாற்றுமுறை புழக்கத்தில் இருந்தது.
  • பிந்தைய வேதகாலத்தில் புழக்கத்தில் இருந்த தங்க நாணயங்கள் = நிஷ்கா, சத்மனா.
  • பிந்தைய வேதகாலத்தில் புழக்கத்தில் இருந்த வெள்ளி நாணயம் = கிருஷ்ணாலா.

ரிக் வேதகால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள்

  • ஹிரண்யா எனப்படும் “தங்கம்”.
  • சியாமா எனப்படும் “இரும்பு”.
  • அயாஸ் எனப்படும் “தாமிரம் / செம்பு”.

ரிக் வேதகாலக் கடவுள்கள்

  • நிலம் மற்றும் ஆகாய கடவுள்களை வணங்கினர்.
  • ரிக் வேதகால நிலக்கடவுள் = பிருத்வி.
  • ரிக் வேதகால நெருப்புக் கடவுள் = அக்னி.
  • ரிக் வேதகால காற்றுக் கடவுள் = வாயு.
  • ரிக் வேதகால மழைக் கடவுள் = வருணன்.
  • ரிக் வேதகால இடி கடவுள் = இந்திரன்.
  • ரிக் வேதகால மதம் = சடங்குகளை மையமாகக் கொண்டது.
  • குழந்தைகள் (பிரஜா), பசு (கால்நடைகள்), செல்வம் (தனா) = ஆகியவற்றின் நலனுக்காக தெய்வங்களை வணங்கினர்.
  • ரிக் வேதகால புனிதமான விலங்கு = பசு.
  • ரிக் வேதகாலத்தில் கோவில்களும், சிலை வழிபாடும் இல்லை.

ரிக் வேதகால பெண் தெய்வங்கள்

  • அதிதி = நித்தியக் கடவுள்.
  • உஷா = விடியற்காலை தோற்றம்.

பிந்தைய வேதகால மதம்

  • இந்திரனும், அக்னியும் முக்கியத்துவத்தை இழந்தனர்.
  • பிந்தைய வேதகால முக்கியக் கடவுள்கள்,
    1. பிரஜாபதி = படைப்பவர்.
    2. விஷ்ணு = காப்பவர்.
    3. ருத்ரன் = அழிப்பவர்.
  • வேள்விகள், சடங்குகள் முக்கியத்துவம் பெற்றது.
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு
6TH HISTORY வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு

குருகுலக் கல்வி முறை

  • பழங்கால கற்றல் முறை = குருகுலக் கற்றல் முறை.
  • குருகுலம் என்பது குரு மற்றும் குலம் என்னும் இரண்டு சம்ஸ்கிருத வார்த்தையில் இருந்து பெறப்பட்டது.
    1. குரு = ஆசிரியர்
    2. குலம் = குடும்பம் அல்லது வீடு.
  • வாய்மொழிக் கற்றல் முறை மற்றும் மனப்பாடம் செய்யும் முறை.
  • கற்றுத்தரப்பட்ட பாடங்கள் = வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கணம், ஜோதிடம், கணிதம், இராணுவ உத்திகள்.
  • “இரு பிறப்பாளர்கள்” (Dvijas) = மட்டுமே கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர்.
  • பெண்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை.

நான்கு ஆசிரமங்கள் (வயதின் அடிப்படையில்)

  • நான்கு ஆசிரமங்கள் என்ற கோட்பாடு உருவான காலம் = பிந்தைய வேதகாலம்.
    1. பிரம்மச்சரியம் = மாணவப் பருவம்.
    2. கிரகஸ்தம் = திருமண வாழ்க்கை.
    3. வனப்பிரஸ்தம் = காடுகளுக்கு சென்று தவம் செய்தல்.
    4. சன்னியாசம் = வீடுபேறு அடைவதற்காக துறவற வாழ்க்கை மேற்கொள்ளுதல்.

 

 

 

 

Leave a Reply