8TH TAMIL உயர்க்குணங்கள்

8TH TAMIL உயர்க்குணங்கள்

8TH TAMIL உயர்க்குணங்கள்

8TH TAMIL உயர்க்குணங்கள்

  • ஒவ்வொரு மனிதனிடமும் பலவகையான பண்புகள் குவிந்து கிடக்கின்றன.
  • அவற்றுள் நற்பண்புகளும் உண்டு; தீய பண்புகளும் உண்டு
  • தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றை வளர்த்து வாழ்வாங்கு வாழ்வதே மனிதனின் கடமையாகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • நிறை = மேன்மை
  • பொறை = பொறுமை
  • பொச்சாப்பு = சோர்வு
  • மையல் = விருப்பம்
  • ஓர்ப்பு = ஆராய்ந்து தெளிதல்
  • அழுக்காறு = பொறாமை
  • மதம் = கொள்கை
  • இகல் = பகை
  • மன்னும் = நிலைபெற்ற
8TH TAMIL உயர்க்குணங்கள்
8TH TAMIL உயர்க்குணங்கள்

ஆண்டாளின் திருப்பாவை

  • மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக்கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு.
  • இதனைப் பாவை நோன்பு என்பர்.
  • அவ்வாறு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூலே திருப்பாவை.

மாணிக்கவாசகரின் திருவெம்பாவை

  • சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை.
  • இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.

இறையரசன் ஆசிரியர் குறிப்பு

  • இறையரசனின் இயற்பெயர் சே. சேசுராசா என்பதாகும்.
  • கல்லூரி ஒன்றில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
  • ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, “கன்னிப்பாவை” என்னும் நூலை எழுதியுள்ளார்.
  • “கன்னிப்பாவை” என்ற நூலின் ஆசிரியர் = இறையரசன்.

Leave a Reply