TNPSC INDIAN POLITY – NATIONAL EMBLEM – தேசிய சின்னம்

TNPSC INDIAN POLITY – NATIONAL EMBLEM – தேசிய சின்னம்

TNPSC INDIAN POLITY – National Emblem 

TNPSC INDIAN POLITY

  • இந்திய அரசின் தேசியக் சின்னமானது, அசோகரின் சாரநாத் சிங்கத் தூணில் இருக்கும் சிங்கங்களின் உருவமாகும்
  • தேசிய சின்னம் = உலக அமைதி மற்றும் நல்லெண்ணம் கொண்ட பண்டைய இந்தியாவின் உறுதிப்பட்டை, தற்போதைய சமகால இந்தியாவின் சின்னமாக குறிக்கப்படுகிறது
  • தேசியச் சின்னமாக இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = 1950 ஜனவரி 26
  • நமது தேசியச் சின்னத்தில் நான்கு சிங்கங்கள் முதுகோடு முதுகு சேர்ந்த நிலையில், வட்டமான பீடத்தில் மேலே அமைக்கப்பட்டுள்ளது. பார்பதற்கு மூன்று சிங்கங்கள் மட்டுமே தெரியும். பின்புறம் ஒரு சிங்கம் என மொத்தம் நான்கு சிங்கங்கள் இருக்கும்.

TNPSC INDIAN POLITY

  • சிங்கங்களின் கீழே உள்ள அடித்தட்டுப் பீடத்தில் அடியில் இடப்புறம் குதிரையும், மத்தியில் சக்கரமும், வலதுபுறம் காளையும் உள்ளது
    • சிங்கம் = ஆற்றல், அதிகாரம், கம்பீரத்தை குறிக்கிறது
    • குதிரை = ஆற்றல், வேகத்தை குறிக்கிறது
    • காளை = கடின உழைப்பு, உறுதியை குறிக்கிறது
    • சக்கரம் = தர்மத்தையும், அறவழியையும் குறிக்கிறது
  • இது தர்மசக்கரம் ஆகும். அதாவது சட்டத்தின் சக்கரம் ஆகும்.
  • சிங்கத்தூணில் உள்ள விலங்குகள் பாதுகாக்கும் திசைகள்,
    • சிங்கம் = வடக்கு
    • யானை = கிழக்கு
    • குதிரை = தெற்கு
    • காளை = மேற்கு
  • இதன் கீழே தேவநாகிரி மொழியில், “சத்யமேவஜெயதே” என்னும் வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் “வாய்மையே வெல்லும்” ஆகும்.
  • “சத்யமேவஜெயதே” என்னும் வார்த்தை “முண்டக உபநிடதத்தில்” இருந்து எடுக்கப்பட்டது.

புத்தர்

  • புத்தரின் முதல் போதனையை குறிப்பிடும் வகையில் அசோகர் இந்த சாரநாத் தூணை உருவாக்கினார்
    • TNPSC INDIAN POLITYயானை = புத்தர் கருத்தரித்த பொழுது, அவரின் தாயாருக்கு வெள்ளை யானை கனவில் தோன்றியது
    • சிங்கம் = அறிவொளி
    • குதிரை = புத்தர் கோட்டையில் இருந்து குதிரையில் வெளியேறியது
    • காளை = புத்தரின் ராசியின் சின்னம். ரிஷப ராசி

குறிப்பு

  • கவுதம புத்தரின் முதல் சொற்பொழிவை நினைவுபடுத்தும் விதமாக கி.பி.3-ம் நூற்றாண்டில் அசோகா மன்னரால் சிங்கத்தூண் பொறிக்கப்பட்டது

TNPSC INDIAN POLITY

  • மனிவடிவ தாமரை, தேசியச் சின்னத்தில் சேர்க்கப்படவில்லை (Bell Shaped Lotus, has been Omitted)
  • இந்திய தேசிய சீனத்தை அரசு முத்திரை சின்னமாக உருவாக்கியவர் = நந்தலால் போஸ் மற்றும் அவரின் மாணவர் “தினநாத் பார்கவா”
  • சாரநாத் தூணை வடிவமைக்க, அசோகர் மதுரா மற்றும் சுனாரில் இருந்து கற்களை கொண்டுவந்தார்
  • ஒவ்வொரு தூணும் 40 – 50 அடி உயரமும், 5௦ டன் அளவிற்கான எடையும் கொண்டது
  • மொத்தம் 25 தூண்கள்.
    • 6 தூண்கள் = விலங்குகள் முத்திரை
    • 19 தூண்கள் = எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன

Leave a Reply