TNPSC

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் மரமும் பழைய குடையும்

மரமும் பழைய குடையும் சொற்பொருள்: கோட்டு மரம் – கிளைகளை உடைய மரம் பீற்றல் குடை –பிய்ந்த குடை ஆசிரியர் குறிப்பு: அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில் பிறந்தவர். இவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு. நூல் குறிப்பு: ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது “சிலேடை” எனப்படும். இதனை “இரட்டுறமொழிதல்”(இரண்டு + உற + மொழிதல்) என்றும் கூறுவர். இரண்டு பொருள்படப் பாடுவது 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: […]

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் மரமும் பழைய குடையும் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் செம்மொழித் தமிழ்

செம்மொழித் தமிழ் உலக மொழிகள்: உலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சு மொழிகளே. “எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே” என்று வள்ளலார் அருள்கிறார். செம்மொழிகள்: திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும். கிரேக்கம், இலத்தின், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றை செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம். திருக்குறள் பற்றி டாக்டர் கிரௌல்: டாக்டர் கிரௌல், “ தமிழ்மொழி

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் செம்மொழித் தமிழ் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு

புறநானூறு நெல்லும் உயிரன்றே; நீரும்உயி ரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதனால் யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே; – மோசிகீரனார் சொற்பொருள்: அறிகை – அறிதல் வேண்டும் தானை – படை கடனே – கடமை ஆசிரியர் குறிப்பு: மோசிகீரனார், தென்பாண்டி நாட்டிலுள்ள “மோசி” என்னும் ஊரில் வாழ்தவர். “கீரன்” என்னும் குடிப்பெயரை உடையவர். உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியபோது, “சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை” என்ற அரசனால் கவரிவீசப்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஊரும் பேரும்

ஊரும் பேரும் குறிஞ்சி நில ஊர்கள்: மலை, கரடு, பாறை, குன்று, குறிச்சி, கிரி மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப் பெயர்கள் உள்ளன. ஓங்கியுயர்ந்த நிலபகுதி – மலை மலையின் உயரத்தில் குறைந்தது – குன்று குன்றின் உயரத்தில் குறைந்தது – கரடு, பாறை குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப்பெற்றன. மலையைக் குறிக்கும் வடசொல், “கிரி” என்பதாகும். சிவகிரி, கிருஷ்ணகிரி, நீலகிரி,

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஊரும் பேரும் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரு.வி.க

திரு.வி.க பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி பெண்மையில் தாய்மை வைத்த பெரியனே போற்றி போற்றி வண்மையை உயிரில் வைத்த வள்ளலே போற்றி போற்றி உண்மையில் இருக்கை வைத்த உறவனே போற்றி போற்றி – திரு.வி.க சொற்பொருள்: பண் – இசை வண்மை – கொடைத்தன்மை போற்றி – வாழ்த்துகிறேன் ஆசிரியர் குறிப்பு: திரு.வி.கலியாணசுந்தரனார்(திருவாரூர் விருதாச்சலனார் மகனார் சுருக்கமே திரு.வி.க என்பது) பெற்றோர் = விருதாச்சலனார் – சின்னம்மையார் பிறந்த ஊர் = காஞ்சிபுரம் மாவட்டத்தில்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரு.வி.க Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள் சொற்பொருள்: புரை – குற்றம் பயக்கும் – தரும் சுடும் – வருத்தும் அன்ன – அவை போல்வன எய்யாமை – வருந்தாமல் அகம் – உள்ளம் ஆசிரியர் குறிப்பு: திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர். சிறப்பு பெயர்கள்: நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் நூல் குறிப்பு: மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள். இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவாரூர் நான்மணிமாலை

திருவாரூர் நான்மணிமாலை என்பணிந்த தென்கமலை ஈசனார் பூங்கோவில் முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் – அன்புஎன்னாம் புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார் மண்சுமந்தார் என்றுருகு வார். – குமரகுருபரர் சொற்பொருள்: என்பணிந்த – எலும்பை மாலையாக அணிந்த தென்கமலை – தெற்கில் உள்ள திருவாரூர் பூங்கோவில் – திருவாரூர் கோவிலின் பெயர் புண்ணியனார் – இறைவன் ஆசிரியர் குறிப்பு: ஆசிரியர்: குமரகுருபரர் பெற்றோர்: சண்முகசிகாமணிக் கவிராயர் – சிவகாமசுந்தரி அம்மையார் ஊர்: திருவைகுண்டம் இயற்றிய நூல்கள்: நீதிநெறிவிளக்கம், முத்துகுமாரசுவாமி

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவாரூர் நான்மணிமாலை Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் மெய்பொருள் கல்வி

மெய்பொருள் கல்வி கற்பிப்போர் கண்கொடுப் போரே! – அந்தக் கணக்காயர் உரையினில் இருசெவி சேரே! நற்பெயர் எடுத்திட வேண்டும்! – நாளும் நன்றாகப் படித்துநீ முன்னேற வேண்டும்! – வாணிதாசன் சொற்பொருள்: பதுமை – உருவம் மெய்பொருள் – நிலையான பொருள் கணக்காயர் – ஆசிரியர் ஆசிரியர் குறிப்பு: இயற்பெயர்: எத்திராசலு (எ) அரங்கசாமி பெயர்: வாணிதாசன் பிறந்த இடம்: புதுவையை அடுத்த வில்லியனூர் பெற்றோர்: அரங்க திருக்காமு – துளசியம்மாள் சிறப்பு: “கவிஞரேறு, பாவலர்மணி” என்னும்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் மெய்பொருள் கல்வி Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தூங்கா நகர்

தூங்கா நகர் மதுரை நகரின் சிறப்புப் பெயர்கள்: தூங்கா நகர், திருவிழா நகர், கோவில் நகர், பழம்பெரும் தமிழரின் நாகரீக தொட்டில், தென்னிந்தியாவின் ஏதென்ஸ், கூடல் நகர், ஆலவாய் மதுரை – பெயர்க்காரணம்: “மதுரை” என்னும் சொல்லுக்கு “இனிமை” என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. மதுரை பற்றி புலவர்கள் கூறும் போதெலாம் தமிழோடு சேர்த்தே கூறினர். புறநானூறு தமிழ்கெழு கூடல் சிறுபாணாற்றுப்படை: “தமிழ்நிலை பெற்ற தாங்கறு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” -சிறுபாணாற்றுப்படை(நல்லூர்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தூங்கா நகர் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஏர்முனை

ஏர்முனை நெத்தி வேர்வை சிந்தினோமே முத்துமுத்தாக – அது நெல்மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக்கொத்தாக பக்குவமாய் அறுத்துஅதைக் கட்டுக்கட்டாக – அடிச்சுப் பதறுநீக்கித் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக!வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல்உனக்கு வெட்கமா? – தலை வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின்பக்கமா – இது வளர்ந்துவிட்ட தாய்க்குத் தரும்ஆசை முத்தமா? – என் மனைக்கு வாக்காத் திருக்கும் நீஎன் சொத்தம்மா -மருதகாசி சொற்பொருள்: மாறி – மழை சேமம் – நலம் தேசம் – நாடு முட்டு – குவியல்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஏர்முனை Read More »