இந்திய அரசியல் அமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப் பட்ட தினமான 1949, நவம்பர் 26-ம் தேதியே சில முக்கிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன.
அவ்வாறு நவம்பர் 26, 1949 அன்று நடைமுறைக்கு வந்த சட்டங்கள் = 5, 6, 7, 8, 9, 60, 324, 366, 367, 379, 380, 388, 391, 392, 393 மற்றும் 394
மீதம் உள்ள அரசியலமைப்பு சட்டத்தின் பெரும்பகுதியானது, 195௦ ஜனவரி 26-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இத்தினமே இந்திய அரசியல அமைப்பு சட்டம் செயல்பாட்டிற்கு வந்த தினமாகும். இதுவே குடியரசுத் தினமாக கொண்டாடப்படுகிறது.
இரத்து செய்தல்
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு, “இந்தியச் சுதந்திரச் சட்டம் 1947” (Indian Independence Act, 1947) மற்றும் இந்திய அரசு சட்டம் 1935 (Government of India Act, 1935) ஆகிய சட்டங்கள், அச்சட்டங்களால் ஏற்பட்ட மாற்றங்கள், திருத்தங்கள் போன்றவை அனைத்தும் இரத்து செய்யப்பட்டன.
குறிப்பு
பிரிவு கவுன்சில் அதிகார ஒழிப்பு சட்டம் 1949 (Abolition of Privy Council Jurisdiction Act, 1949) மட்டும் தொடர்ந்து நடைமுறையில் இருந்தது.
ஜனவரி 26
1929-ம் வருடம், ஜவஹர்லால் நேரு தலைமையில் லாகூர் அருகே உள்ள ராவி நதிக்கரையில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி “பூரண சுயராஜ்ய” (Purna Swaraj) நாளாகக் கொண்டாட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது
இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-தேதி, பூரண சுயராஜ்ஜிய தினமாக கொண்டாடப்பட்டு