சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவருட் பிரகாச வள்ளலார்

திருவருட் பிரகாச வள்ளலார்

திருவருட் பிரகாச வள்ளலார்
திருவருட் பிரகாச வள்ளலார்

திருவருட் பிரகாச வள்ளலார்

  • பத்தொன்பதாம் நூற்றாண்டை தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்பர்.
  • அக்காலத்தே புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பை பெற்றவர் வள்ளலார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

வருவிக்க உற்றவர்

  • கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூரில் 05.10.1823இல் இராமையா, சின்னம்மை இனையார்க்கு ஐந்தாவது மகவாக இராமலிங்கர் பிறந்தார்.
  • ஆலய அந்தணர் இவர் குழந்தையாக இருந்த பொழுது, இவரை “இறையருள் பெற்ற திருக்குழந்தை” என்று பாராட்டினார்.
  • “அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்து” என இறைவன் தம்மை வருவிக்க உற்றதாகக் கூறுவார்.
  • இவர் சபாபதி என்பவரிடம் கல்வி கற்றார்.
  • ஒன்பது வயதிலேயே பாடல் புனையும் திறன் பெற்றிருந்தார்.

உத்தம மனிதர்

  • திகம்பர சாமியார், இவரை “ஓர் உத்தம மனிதர்” என்றார்.

ஒருமையுணர்வு

  • சென்னையில் உள்ள கந்தக்கோட்டத்து இறைவனை இராமலிங்கர் வணங்கி பாடிய பாடல்களின் தொகுப்பே “தெய்வமணிமாலை”.
  • “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்று பாடினார் இராமலிங் அடிகள்.
  • இராமலிங்கர், “வடிவுடை மாணிக்கமாலை” என்னும் நூலையும், திருவெற்றியூர் சிவபெருமான் மீது “எழுந்தரியும் பெருமான் மாலை” என்னும் நூலையும் பாடினார்.
  • இவர் பொதுமை உணர்வுடன் பிற தெய்வங்களின்மீதும் பாடல்களைப் பாடியுள்ளார்.
  • இப்பாடல்கள் எளிய, இனிய பாடல்கள்; கல்லார்க்கும் கற்றவர்க்கும் எளிதில் பொருள் விளங்கும் கருத்துநிறை பாடல்கள்.
திருவருட் பிரகாச வள்ளலார்
திருவருட் பிரகாச வள்ளலார்

புரட்சித் துறவி

  • “புரட்சித் திரவி” என்று அழைக்கப்படுபவர் = இராமலிங்க அடிகள்.
  • ஒருமைவாழ்வு, ஒருமையரசு, ஒருமையுலகம் காண விரும்பினார்.
  • ஆணும் பெண்ணும் சமம் என்றார்.
  • “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக” எனப் பாடினார்.
  • “ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்” என வற்புறுத்தினார்.
  • “சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்” என்றார்.
  • இவையெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு என்றும் இகழ்ந்தார்.
  • “பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி” என ஆணும் பெண்ணும் சமமென்று அன்றே உரைத்தார்.

பசிப்பிணி மருத்துவர்

  • “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பயிர்வாடத் தாம் வாடினார்.
  • வடலூரில் “சத்திய தருமச்சாலை” நிறுவி அனைவர்க்கும் உணவளித்தார்.
  • வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்தவரையும், நீடியபிணியால் வருந்துவோரையும், ஈடில் மானிகளாய், ஏழைகளாய் நெஞ்சு இளைத்தோரையும் கண்டு வருத்தத்தால் உயிர் இளைத்தார் வள்ளற்பெருமான்.

வள்ளலார் காட்டும் உயர்நெறி

  • ஆணும் பெண்ணும் சமம் என்பதனையும், மக்கள் அனைவரும் சாதி, சமயம், கோத்திரம், குலம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேறுபாடற்றுச் சமரச மனப்பான்மைகொண்டு, மனிதநேயத்துடன் வாழவேண்டுமென்றும் மன்பதைக்கு உணர்த்தினார் வள்ளலார்.

பேரின்ப வீட்டின் திறவுகோல்

  • “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்றார் வள்ளலார்.
  • கடவுளின் பெயரால் உயிர் கொலை செய்வதனை அறவே வெறுத்தார்.
  • பலிகொள்ளும் சிறுதெய்வக் கோவிலைக் கண்டு நடுங்கினார்; போரினால் உண்டாகும் கொடுமைகளை அறிந்து வருந்தினார்;
  • போரில்லா உலகை படைக்க விழைந்தார்.
  • வள்ளலார் அன்பின் ஊற்று; அன்பே அவர் உயிர்; அன்பே அவர் வடிவம்;
  • “அப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்” என்று உளமுருக வேண்டினார்.
திருவருட் பிரகாச வள்ளலார்
திருவருட் பிரகாச வள்ளலார்

பொதுமை நெறி

  • வள்ளலார், இறைவன் ஒருவனே; அவன் ஒளி வடிவினன் என்பதனையும் அருட்பெருஞ்சோதியாக விளங்கும் இறைவனை அடைவதற்குத் தனிப்பெருங்கருணையே கருவி என்பதனையும் உலகோர்க்கு உணர்த்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினை வடலூரில் நிறுவினார்.
  • சாதி, மத, சமய, இன வேறுபாடு கூடாது; எவ்வுயிரையும் கொல்லலாகாது; புலால் புசித்தல் கூடாது;

புதுநெறி கண்ட புலவர்

  • ஆறு தொகுதிகள் கொண்ட இவரது பாடல்களைத் “திருவருட்பா” என மக்கள் போற்றுகின்றனர்.
  • இவர் உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்றச் செய்தார்.
  • அதற்காகவே வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார். மேலும், மக்கள் அறியாமை நீங்கி அறிவு ஒளிபெற, அங்கே சோதி தரிசனப் புதுமையைப் புகுத்தினார்.
  • பாரதியார் இவரை “புதுநெறி கண்ட புலவர்” எனப் போற்றினார்.

தமிழ்ப்பற்று

  • தமிழ் மொழியே இறவாத நிலை தரும் என்றார்.
  • பயில்வதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக் கல்வியை மிகவும் எளிமையாக அறிவிப்பதாய், திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம்பற்றச் செய்து, அத்தென்மொழியால் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்” என்று உண்மை உரைத்தார்.

இறைநிலை அடைதல்

  • 1874ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாள் அன்று இறவாநிலை எய்தினார்.

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

  • தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
  • குருவை வணங்கக் கூசி நிற்காதே.
  • வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே.
  • மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
  • நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே.
  • பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே.
  • ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
  • பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
  • இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே.
  • தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்

  • சிறந்த சொற்பொழிவாளர்
  • போதகாசிரியர்
  • உரையாசிரியர்
  • சித்த மருத்துவர்
  • பசிப்பிணி போக்கிய அருளாளர்
  • பதிப்பாசிரியர்
  • நூலாசிரியர்
  • இதழாசிரியர்
  • இறையன்பர்
  • ஞானாசிரியர்
  • அருளாசிரியர்

வள்ளலார் பதிப்பித்த நூல்கள்

  • சின்மய தீபிகை
  • ஒழிவிலொடுக்கம்
  • தொண்டமண்டல சதகம்

வள்ளலார் இயற்றிய உரைநடை நூல்கள்

  • மனுமுறை கண்ட வாசகம்
  • ஜீவகாருண்ய ஒழுக்கம்
  • திருவருட்பா ( ஆறு திருமுறைகள் )

Leave a Reply