சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் காந்தியம்

காந்தியம்

காந்தியம்
காந்தியம்

காந்தியம்

  • இஸ்ரேல் – எகிப்து நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்ற பொழுது, இஸ்ரேல் நாட்டிற்கு சென்றார் அமெரிக்காவை சேர்ந்த இதழ் ஆசிரியர் இபான்.
  • குண்டுகள் விழுந்துக் கொண்டிருந்த நேரத்திலும், ஒரு பெண் காந்தியடிகளின் “சத்திய சோதனை” என்னும் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்ததை கண்ட இபான், அப்பெண்ணிடம் கேள்விகளை கேட்டார்.
  • அப்பெண், “இந்தப் புத்தகத்தில் தான் உலகம் உய்ய உற்றவழி இருக்கின்றது” என்றார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

விளையும் பயிர்

  • காந்தியடிகள் சிறுவனாக இருந்தப்போது கேட்ட குஜராத்தி பாடல் மூலம் அவருக்கு இன்னா செய்யாமை (அஹிம்சை) என்னும் கருத்து அவருள் வேரூன்றியது.
  • “சிரவண பிதுர்பத்தி” என்னும் நாடக நூலைப் படித்தான் மூலம் பெற்றோரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருள் வந்தது.
  • அரிச்சந்திரன் நாடகம் பார்த்த பின் அவருக்கு பொய் பேசக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது.
  • இயேசுநாதரின் மலைச்சொற்பொழிவை பற்றிய நூலைப் படித்தப் போது அதன் கருத்துகள் அவரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.
  • பகவத் கீதையை படித்ததன் மூலம் மனவுறுதியைப் பெற்றார்.
  • ரஷ்ய அறிஞர் தால்சுதாய் எழுதிய “உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு” என்னும் நூலில் “இன்னாசெய்தார்க்கும்” என்னும் திருக்குறளை மொழிபெயர்த்து எழுதியிருந்தார். அந்நூலினை படிக்கும் பொது திருக்குறள் மீதும், தமிழ் மீதும் பற்று ஏற்பட்டது.

அறவழி விடுதலைப்போர்

  • போராட்ட முறைகள் இரண்டு வகைப்படும்.
  • ஒன்று = போர் முறையில் உரிமையை நிலைநாட்டுவது.
  • மற்றொன்று = அறவழியில் உரிமைப்போர் செய்து வெற்றி பெறுவது.
  • “மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும் தூய்மையாகவும் இருந்தால் மட்டும் போதாது. அதனை அடையும் வழிமுறைகளும் தூயமையானதாகப் பிறருக்குத் துன்பம் தராததாக இருக்கவேண்டும்” என்று கூறியவர் = காந்தியடிகள்.
  • “வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது” என்று கூறியவர் = காந்தியடிகள்.
  • “நெருப்பை நீரால்தான் அணைக்கமுடியும். வன்முறையை அன்பு, அருள் ஆகிய அறவழிகளில்தான் தடுக்க முடியும். அறவழியைப் பின்பற்றிப் பெறுகிற விடுதலையே நிலைக்கும்” என்று கூறினார் காந்தியடிகள்.
  • “வலிய போரில் சாகின்றவர்களின் எண்ணிக்கையைவிட, அறவழிப்போரில் இறப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்றும், மற்ற உலக நாடுகள் இதனை ஏற்காவிடினும் இந்தியா அதனை ஏற்றுநடத்தி, ஏனைய நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழவேண்டும்” என்று விரும்பியவர் = காந்தியடிகள்.
  • “அற வழியை உலகுக்கு எடுத்துக் காட்டவேண்டியது இந்தியரின் கடமை” என்று கூறியவர் = காந்தியடிகள்.
காந்தியம்
காந்தியம்

எளிமை ஒரு அறம்

  • ஆசிரமத்தில் தாமே சமையல் செய்து அனைவருக்கும் கொடுத்தார்.
  • கழிப்பறை கழுவுதல் ஒரு கலை என்று கூறியவர் = காந்தியடிகள்.
  • தம் கழிவுகளை தாமே அகற்றியவர் காந்தியடிகள்.
  • எளிமையை ஒரு அறமாகவே போற்றினார்.
  • சிறு காகிதத்தையும் வீணாக்காமல் அதில் கடிதங்களுக்கு மறுமடல் எழுதியவர் = காந்தியடிகள்.
  • பகட்டான வாழ்க்கையைப் பாவம் என்று கருதியவர் = காந்தியடிகள்.
  • காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த பொது, ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியத்தை கண்டு தாமும் அன்று முதல் மேலாடை அணிவதை நிறுத்திக்கொண்டார்.
  • அரையாடையுடன் இங்கிலாந்தில் நடந்த வட்டமேசை மாநாட்டில் கலந்துக்கொண்ட காந்தியடிகளை “அரை நிருவாணப் பக்கிரி” என்று ஏளனம் செய்தார் அப்போதைய இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில்.

மனித நேயம்

  • மனிதரோடு மனிதராக வாழ்ந்து மகாத்மாவாக உயர்ந்தவர்.
  • மனிதனின், பெருமையை மனிதனுக்கு உணர்த்தி, எளியவர்களிடம் மறைந்திருக்கும் அருமையை உணர்த்தி அவர்களை வரலாற்று நாயகர்களாக மாற்றியவர் = காந்தியடிகள்.
  • என்னைப் பொறுத்தவரை தேசாபிமானமும் மனிதாபிமானமும் ஒன்று தான் என்றார் காந்தியடிகள்.
  • நான் ஒரு தேசபக்தன். அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்கு மேல் மனிதாபிமானியாக இருப்பதும் தான் என்றார்.
  • காந்தியடிகள் ராமரைப் போற்றியதர்கான காரணம் = அவன் மனிதனாகப் பிறந்து, மனிதப் பண்புகளால் உயர்ந்து, மானுடரோடு மற்ற உயிரினங்களையும் உடன்பிறந்தவர்களாக ஏற்று, உலகம் உய்ய வழி காட்டியதனால்தான்.
  • மனிதர் மொழியாலும் நாட்டாலும் உணர்தப்படுவதை காட்டிலும் மனிதத்தன்மையால் பிறருக்கு உணர்த்தப் படுவதே சிறந்து என்றார் காந்தியடிகள்.
  • “நான் மொழியால் குஜராத்தியன்; நாட்டால் இந்தியன்; உலக நிலையில் உலகன்; ஆனால், மனிதனாக இருத்தல் வேண்டும். குஜராத்தியனாக இருப்பதனைக் காட்டிலும், இந்தியனாக இருப்பதனைக் காட்டிலும், மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது என்று எண்ணவேண்டும்” என்றார் காந்தியடிகள்.
  • “உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல சமுதாயமாக உருவாகும்” என்றார்.

இன்னா செய்யாமை

  • தென்னாப்ப்ரிகாவில் இந்தியர்களுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களைக் காந்தியடிகள் கொளுத்தியதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • சிறையில் சிறப்பாக ஒரு ஜோடி செருப்பை தைத்தார். அதனை தன்னை சிறையில் அடைத்த ஆளுநர் ஸ்மட்ஸ் என்பவருக்கு அளித்தார்.
  • அவரும் இவருக்கு விவிலியம் சார்ந்த இரு நூல்களை பரிசாக கொடுத்தார்.
  • ஸ்மட்ஸ் தம்முடைய இரங்கல் செய்தியில், “காந்தி சிறையில் தாமே தயாரித்த காலணியை, எனக்கு அன்பளிப்பாக அளித்தார். அதனை ஆர்வத்தோடு வாங்கி அணிந்தேன்; என் கால்கள் நடுங்கின; நிற்க முடியவில்லை. உடனே, அதனை எடுத்துச்சென்று என் பூசை அறையில் வைத்து வணங்கி வருகிறேன்” என்று குறிப்பிட்டார்.
  • ஸ்மட்ஸ், காந்தியடிகள் இறந்த பொழுது, அவர் கொடுத்த காலனியை தன் பூசை அறையில் வைத்து வணங்கி வருவதாக கூறினார்.

இளைஞர்களின் கடமை

  • நமது நாட்டிற்கே உரிய கிராமத் தொழில்களையும் நாட்டுப்புறக் கலைகளையும் வளர்க்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார்.
  • நாட்டில் வளர்ந்து வரும் அனைத்து வறுமை நிலைகளையும் ஆராய்தல் வேண்டும். இளைஞர்களின் உள்ளத்தில் நாட்டுப்பற்று, தெய்வப்பற்று, மொழிப்பற்று வளரும்வகையில் கல்வி அமைதல் வேண்டும் என்றார் காந்தியடிகள்.
  • இந்தியாவின் வாழ்வு என்பது இலட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வுதான்; அந்தக் கிராமங்களின் வாழ்வு, அந்த நாட்டின் உழவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கைகளில்தான் உள்ளது என்றார் காந்தியடிகள்
  • “தன்னாட்டுப் பொருள் இயக்கமான சுதேசி இயக்கத்தை வளர்க்கும் கடமை இளைஞர்களுக்கே உரியது” என்றார்.
  • தீண்டாமைக் கொடுமையை வலுவுடன் எதிர்த்து நிற்குமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார்.
காந்தியம்
காந்தியம்

காந்தியடிகளும் திருக்குறளும்

  • “சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால், திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்.” என்று கூறினார் காந்தியடிகள்.

 

Leave a Reply