10TH TAMIL புறப்பொருள்

Table of Contents

10TH TAMIL புறப்பொருள்

10TH TAMIL புறப்பொருள்

10TH TAMIL புறப்பொருள்

  • புறப்பொருள் எனப்படுவது, வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறுவது.
  • அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

புறத்திணை எத்தனை வகைப்படும்

  • புறம்பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை.
  • புறத்திணைகள் வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும். அவை,
    1. வெட்சித்திணை
    2. கரந்தைத் திணை
    3. வஞ்சித் திணை
    4. காஞ்சித் திணை
    5. நொச்சித் திணை
    6. உழிஞைத் திணை
    7. தும்பைத் திணை
    8. வாகைத் திணை
    9. பாடாண் திணை
    10. பொதுவியல் திணை
    11. கைக்கிளைத் திணை
    12. பெருந்திணை

வெட்சித் திணை என்றால் என்ன

  • பகைநாட்டின் மீது போர் தொடங்குமுன், அந்நாட்டிலுள்ள ஆநிரைகளுக்குத் தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன், தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்து வரச்செய்வது வெட்சித்திணை.
  • அவ்வீரர்கள் வெட்சிப்பூவைச் சூடிச் செல்வார்கள்.

கரந்தைத் திணை என்றால் என்ன

  • வெட்சி வீரர்களால் கவர்ந்துசெல்லப்பட்ட தம் ஆநிரைகளைக் கரந்தைப் பூவைச் சூடிச்சென்று மீட்பது, கரந்தைத்திணை.

வஞ்சித் திணை என்றால் என்ன

  • மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது, வஞ்சித்திணை.

காஞ்சித் திணை என்றால் என்ன

  • தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித்திணை.

நொச்சித் திணை என்றால் என்ன

  • பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே, வெளியே இருக்கும் பகையரசனோடு நொச்சிப்பூவைச் சூடிப் போரிட்டு, அம்மதிலைக் காப்பது நொச்சித்திணை.

உழிஞைத் திணை என்றால் என்ன

  • உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் மாற்றரசன் கோட்டைக்குள் புகுந்து மதிலைச் சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை.

தும்பைத் திணை என்றால் என்ன

  • பகைவேந்தர் இருவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தம் வீரர்களுடன் போரிடுவது தும்பைத் திணை. இவ்வீரர்கள் தும்பைப் பூவைச்சூடிப் போரிடுவர்.

வாகைத் திணை என்றால் என்ன

  • வெற்றிபெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது, வாகைத்திணை.

பாடாண் திணை என்றால் என்ன

  • பாடுதற்குத் தகுதியுடைய ஓர் ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது, பாடாண்திணை.
  • (பாடு + ஆண் + திணை = பாடாண்திணை)

பொதுவியல் திணை என்றால் என்ன

  • வெட்சிமுதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது, பொதுவியல் திணை.

கைக்கிளைத் திணை என்றால் என்ன

  • கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். இஃது ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று என இருவகைப்படும்.

பெருந்திணை என்றால் என்ன

  • பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். இதுவும் ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று என இருவகைப்படும்.

புறப்பொருள் வெண்பாமாலை பாடல்

10TH TAMIL புறப்பொருள்

வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம்,

வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் உட்கா(து)

எதிரூன்றல் காஞ்சி, எயில்காத்தல் நொச்சி,

அதுவளைத்த லாகும் உழிஞை, – அதிரப்

பொருவது தும்பையாம், போர்க்களத்து மிக்கார்

செருவென் றதுவாகை யாம்.

–           புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் தொடர்பான வினாக்கள்

  1. புறத்திணைகள் __________ வகைப்படும்? = பனிரெண்டு.
  2. நிரைகவர்தல் என்பது _______ ?= வெட்சி.
  3. மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது __________ ? = வஞ்சித்திணை.
  4. பாடாண்திணை என்பது ____________ கூறுவது? = ஆண்மகனின் ஒழுக்கலாறுகள்.
  5. ஒருதலைக் காமம் என்பது __________ ? = கைக்கிளை.
  6. தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது _________ ஆகும்? = காஞ்சித் திணை.

புறத்திணை என்பது யாது?

  • புறம்பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை.
  • புறத்திணைகள் வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும்.

புறத்திணைகள் நான்கனை எழுதுக?

  • புறத்திணைகள் வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும். அவை,
    • வெட்சித்திணை
    • கரந்தைத் திணை
    • வஞ்சித் திணை
    • காஞ்சித் திணை
    • நொச்சித் திணை
    • உழிஞைத் திணை
    • தும்பைத் திணை
    • வாகைத் திணை
    • பாடாண் திணை
    • பொதுவியல் திணை
    • கைக்கிளைத் திணை
    • பெருந்திணை

மதில்போர் பற்றிய புறத்திணைகள் யாவை?

  • மதிப்போர் பற்றிய புறத்திணைகள் இரண்டு = நொச்சித் திணை, உழிஞைத் திணை.
  • நொச்சித் திணை = பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே, வெளியே இருக்கும் பகையரசனோடு நொச்சிப்பூவைச் சூடிப் போரிட்டு, அம்மதிலைக் காப்பது நொச்சித்திணை.
  • உழிஞைத் திணை = உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் மாற்றரசன் கோட்டைக்குள் புகுந்து மதிலைச் சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை.

வாகைத் திணை என்பது யாது?

  • வெற்றிபெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது, வாகைத்திணை.

பொருந்தாக் காமம் பற்றிய திணை யாது?

  • பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். இதுவும் ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று என இருவகைப்படும்.

Leave a Reply