10TH TAMIL பெரியபுராணம்

10TH TAMIL பெரியபுராணம்

10TH TAMIL பெரியபுராணம்

10TH TAMIL பெரியபுராணம்

  • அப்பூதியடிகள் பிறந்த ஊர் = திங்களூர்.
  • திருநாவுக்கரசரிடம் பேரன்புடையவர் = அப்பூதியடிகள்.
  • தன் வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் = அப்பூதியடிகள்.
  • அப்பூதியடிகளின் மகனின் பெயர் = திருநாவுக்கரசு.
  • பாம்பு கடித்து இறந்த அப்பூதியடிகளின் மகனை எப்பதிகம் பாடி திருநாவுக்கரசர் உயிர் பிழைக்கச் செய்தார் = “ஒன்றுகொலாம்” என்னும் பதிகம்.
  • அப்பூதியடிகளிடம் “உணர்வில்லாத சிறுமையேன் யான்” என்று கூறியவர் = திருநாவுக்கரசர்.
  • சூலை நோயால் ஆட்கொள்ளப்பட்டு சைவ சமயத்திற்கு மாறியவர் = திருநாவுக்கரசர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சேக்கிழார் ஆசிரியர் குறிப்பு

  • பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார்.
  • இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர்.
  • சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்.
  • சேக்கிழார் யாரிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார் = அநபாயச்சோழனிடம்.
  • “உத்தமசோழப் பல்லவர்” என்னும் பட்டம் பெற்றவர் = சேக்கிழார்.
  • “தெய்வச் சேக்கிழார்” என்று போற்றப்படுகிறார் இவர்.
  • “தொண்டர்சீர் பரவுவார்” என்று அழைக்கப்படுபவர் = சேக்கிழார்.
  • சேக்கிழாரின் காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு.
10TH TAMIL பெரியபுராணம்
10TH TAMIL பெரியபுராணம்

சேக்கிழார் சிறப்பு பெயர்கள்

  • உத்தமசோழப் பல்லவர்
  • தெய்வச் சேக்கிழார்
  • தொண்டர்சீர் பரவுவார்

பெரியபுராணம் நூல் குறிப்பு

  • தனியடியார்கள் மொத்தம் = 63.
  • தொகையடியார்கள் மொத்தம் = 9.
  • சிவனடியார்கள் மொத்தம் = 72.
  • தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவர்.
  • அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் “பெரியபுராணம்” என்னும் பெயர் பெற்றது.
  • பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் = “திருத்தொண்டர் புராணம்”.
  • தில்லை நடராசப்பெருமான், “உலகெலாம்” என்று அடியெடுத்த்துக் கொடுக்கப் சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்ததாக கூறப்படுகிறது.

பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ

  • “பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” என்று பாடியவர் = மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்.
  • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், “பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்கிறார்.

உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம்

  • உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான், “பெரியபுராணம்” என்பார் திரு.வி.க.
10TH TAMIL பெரியபுராணம்
10TH TAMIL பெரியபுராணம்

சொற்பொருள்

  • காய்ந்தார் – நீக்கினார்
  • ஆ – பசு
  • நிறைகோல் – துலாக்கோல் (தராசு)
  • மந்தமாருதசீதம் – குளிர்ந்த காற்றுடன் கூடிய நீர்
  • ஈறு – எல்லை
  • புவனம் – உலகம்
  • தெருளும் – தெளிவில்லாத
  • கமலம் – தாமரை
  • திருநீற்றுக்காப்பு – திருநீறு
  • பொற்குருத்து – இளமையான வாழைக்குருத்து
  • மல்லல் – வளமான
  • வால் – கூரிய
  • அல்லல் – துன்பம்
  • உதிரம் – குருதி
  • மறைநூல் – நான்மறை
  • பூதி – திருநீறு
  • பணிவிடம் – பாம்பின் நஞ்சு
  • மனை – வீடு
  • மேதி – எருமை
  • தடம் – தடாகம்
  • சந்தம் – அழகு
  • கல்மிதப்பு – கல்லாகிய தெப்பம்
  • சூலை – கொடிய வயிற்றுநோய்
  • கரம் – கை
  • மிசை – மேல்
  • நேர்ந்தார் – இசைந்தார்
  • ஒல்லை – விரைவு
  • ஆம் – அழகிய
  • அரா – பாம்பு
  • அங்கை – உள்ளங்கை
  • மேனி – உடல்
  • சேய் – குழந்தை
  • மெய் – உண்மை
  • சவம் – பிணம்
  • வாகீசர் – திருநாவுக்கரசர்.

இலக்கணக்குறிப்பு

  • செலவொழியா வலி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • உறுவேனில் – உரிச்சொற்றொடர்
  • பந்தர் – கடைப்போலி
  • பொங்குகடல் – வினைத்தொகை
  • அறிந்து, அடைந்து – வினையெச்சம்
  • பொழிந்திழிய – வினையெச்சம்
  • வந்தவர் – வினையாலணையும் பெயர்
  • தாய்தந்தை – உம்மைத்தொகை
  • தீண்டிற்று – ஒன்றன்பால் வினைமுற்று
  • பூதி சாத்த – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • நோக்கி – வினையெச்சம்
  • பணிவிடம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • வழிக்கரை – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • நீர்த்தடம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
  • அணைந்த வாகீசர் – பெயரெச்சம்
  • பெருமையறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • கரகமலம் – உருவகம்
  • தேசம் – இடவாகு பெயர்
  • நற்கறிகள், இன்னமுதம் – பண்புத்தொகை
  • மல்லலம் குருத்து – உரிச்சொற்றொடர்
  • துளங்குதல் – தொழிற்பெயர்
  • அங்கணர் – அன்மொழித்தொகை
  • எழுந்து, சென்று – வினையெச்சம்
  • கேளா – செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம்

பிரித்தறிதல்

  • செலவொழியா = செலவு + ஒழியா
  • வழிக்கரை = வழி + கரை
  • வந்தணைந்த = வந்து + அணைந்த
  • எம்மருங்கும் = எ + மருங்கும்
  • எங்குரைவீர் = எங்கு + உறைவீர்
  • கண்ணருவி = கண் + அருவி
  • உடம்பெல்லாம் = உடம்பு + எல்லாம்
  • திருவமுது = திரு + அமுது
  • மனந்தழைப்ப = மனம் + தழைப்ப
  • நற்கரிகள் = நன்மை + கறிகள்
  • இன்னமுது = இனிமை + அமுது
  • வாளரா = வாள் + அரா
  • அங்கை = அம் + கை
  • நான்மறை = நான்கு + மறை
  • பாவிசை = பா + இசை

 

 

 

 

Leave a Reply