11TH TAMIL ஓவியப்பா

11TH TAMIL ஓவியப்பா

11TH TAMIL ஓவியப்பா
11TH TAMIL ஓவியப்பா

நால்வகை புலவர்கள்

  • கவிபாடும் திறமைக்கு ஏற்ப புலவர்களை நான்கு வகையாக பிரிப்பர். அவை,
    • ஆசுகவி
    • மதுரகவி
    • சித்திரக்கவி
    • வித்தாரக்கவி

ஆசுகவி என்றால் என்ன

  • பொருளடி, பாவணி முதலியன தந்து, மற்றொருவன் பாடுக என்ற உடனே பாடுவோன் ஆசுகவி ஆவான்.

மதுரகவி என்றால் என்ன

  • பொருட்செல்வம், சொற் செல்வம், தொடை விகற்பம் செறிய, உருவகம் முதலிய அலங்காரத்தோடு இனிய ஓசையுடன் அமுதமுறப் பாடுவோன் மதுரகவி ஆவான்.

சித்திரக்கவி என்றால் என்ன

  • மாலைமாற்று, சுழிகுளம், நாகபந்தம், சக்கரம், எழுகூற்றிருக்கை முதலிய மிளிர கவி பாடுவோன் சித்திரகவி.

வித்தாரக்கவி என்றால் என்ன

  • மாலை, யமகம், கலம்பகம், தசாங்கம், புராணம் முதலியன விரித்துப் பாடுவோன் வித்தாரகவி.

பனுவர் என்றால் யார்

  • ஆசுகவி, மதுரக்கவி, வித்தாரக்கவி, சித்திரக்கவி ஆகிய கவிகளைப் பாடுவோர் பனுவர் எனப்பட்டனர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS  

download1

11TH TAMIL ஓவியப்பா

  • சித்திரகவியை ‘ஓவியப்பா’ என்றும் கூறுவர்.
  • சித்திரகவி என்பது தமிழில் காணப்படும் இலக்கிய வகைமைகளுள் ஒன்று.

சித்திரக்கவியின் தோற்றுவாய்

  • சித்திரக்கவியின் தோற்றுவாய் எனப்படுவது = தொல்காப்பியம் குறிப்பிடும் ‘வண்ணங்கள்’ ஆகும்.
  • ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரக்கவி நூல் = திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட ‘திருவெழுகூற்றிருக்கை’.
  • திருமங்கையாழ்வாரை பின்பற்றி சித்திரக்கவி பாடியவர் = அருணகிரிநாதர்
  • சித்திரக்கவி படைத்த மற்றொருவர் = பாம்பன் சுவாமிகள்

நாகபந்தம் என்றால் என்ன

  • ஓவியப்பாவின் வகைகளுள் ‘நாகபந்தம்’ என்பதும் ஒன்று.
  • நாகப்பிணை என இதனைத் தனித்தமிழ்ச் சொற்களால் குறிப்பிடலாம்.
  • இரண்டு, நான்கு, எட்டு என நாகப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருப்பது போலப் படம் வரையப்படும்.
  • பாடல் ஒன்றின் எழுத்துகள் நாகங்களின் தலையிலிருந்து வால் வரையில் உள்ள கட்டங்களில் எழுதப்பட்டிருக்கும்.
  • எந்த நாகத்தின் தலையிலிருந்து படித்தாலும் அதே பாடல் வரும்படி பாடலின் அமைப்பு இருக்கும்.
  • இவ்வாறு அமைக்கும்போது, கவிதையின் மொத்த எழுத்துகளும் சித்திரத்திற்குள் சுருங்கித்தோன்றும்.
  • சொல்வளம் மிக்கவர் பாடுவது = நாகபந்தம்.
11TH TAMIL ஓவியப்பா
11TH TAMIL ஓவியப்பா

இரட்டை நாகபந்தம் என்றால் என்ன

  • இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்புணர்ந்து விளையாடுவன போலச் சித்திரம் வரைந்து, அப்பாம்பின் உருவங்களில் கணக்கிட்ட அறைகள் வகுத்துச் சந்திகளில் நின்ற அறைகளில் பொதுவான எழுத்துகளமையப் பாடப்படுவது, இரட்டை நாகபந்தம் ஆகும்.
  • இரட்டை நாகபந்தத்தில் பாம்பின் தலைப்பகுதியிலிருந்து தொடங்கி வால் பகுதி வரைசென்று பொருள்காண வேண்டும்.

Leave a Reply