12 TAMIL புறநானூறு

12 TAMIL புறநானூறு

12 TAMIL புறநானூறு

 

12 TAMIL புறநானூறு

  • வாழ்வின் அணியாக விளங்குவது கல்வி.
  • கற்றோர் எந்நிலையிலும் சிறந்தே இருப்பர். தாலும் நிலை வரினும் கலங்காது இருப்பார்.

அருஞ்சொற்பொருள்

  • வாயிலோயே –  வாயில் காப்போனே
  • வள்ளியோர் –  வள்ளல்கள்
  • வயங்குமொழி –  விளங்கும் சொற்கள்
  • வித்தி –  விதைத்து
  • உள்ளியது –  நினைத்தது
  • உரன் –  வலிமை
  • வறுந்தலை –  வெறுமையான இடம்
  • காவினெம் –  கட்டிக்கொள்ளுதல்
  • கலன் –  யாழ்
  • கலப்பை –  கருவிகளை வைக்கும் பை
  • மழு –  கோடரி

இலக்கணக்குறிப்பு

  • வயங்குமொழி –  வினைத்தொகை
  • அடையா –  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • அறிவும் புகளும் –  எண்ணும்மை
  • சிறாஅர் –  இசைநிறை அளபெடை

பாடாண் திணை

  • ஒருவருடைய புகழ், வலிமை, கோடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடான் திணையாகும்

பரிசில் துறை

  • “பரிசு வேண்டி வாயிலில் நிற்பது” – பரிசில் துறை

பாடல் விவரம்

  • இப்பாடலில் பயின்று வந்த பா வகை = நேரிசை ஆசிரியப்பா
  • இப்பாடலில் பயின்று வந்த திணை = பாடாண் திணை
  • இப்பாடலில் பயின்று வரும் துறை = பரிசில் துறை

பாடலில் வந்த உவமைகள்

  • பரிசிலர்க்குச் = சிறுவரும்
  • கல்விக்கு = கோடரியும்
  • போகும் திசைக்கு = காடும்
  • உணவுக்கு = காட்டில் உள்ள மரங்கள்

புறநானூறு நூல் குறிப்பு

  • சிற்றரசனான “அதியமான் நெடுமான் அஞ்சி” பரிசில் தராமல் காலம் நீட்டித்த போது ஔவையார் பாடிய பாடல் இது
  • இப்பாடல் இடம்பெற்றுள்ள புறநானூறு, எட்டுத்தொகை நூல்களில் ஒன்று.
  • புறநானூறு புறப்பொருள் பற்றியது
  • புறநானூறின் வேறு பெயர்கள் = புறம், புறப்பாட்டு
  • இந்நூல், தமிழர்களின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

ஔவையார்

  • அதியமானிடம் நட்புப் பாராட்டிய ஔவை அவருக்காகத் தூது சென்றவர்.
  • அதியமானின் அரசவைப் புலவராக இருந்தவர்
  • இவர் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

 

 

Leave a Reply