6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

  • இந்தியாவில் புதிய பிராந்திய அரசுகள் உருவான காலம் = கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு.
  • வட இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சி தோன்றிய காலம் = கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு.
  • இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் = புத்தர், மகாவீரர்.
6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

சமூக மாற்றத்தில் இரும்பின் பங்கு

  • சமூக மாற்றத்தில் இரும்பின் பங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.
  • கங்கைச் சமவெளியின் வளமான மண், இரும்பினாலான கொழுமுனையின் பயன்பாடு ஆகியவற்றால் வேளாண் உற்பத்தி அதிகரித்தது.
  • கைவினைப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவியது = இரும்பு.
  • அதிக வேளாண் உற்பத்தி, அதிக கைவினைப்பொருட்கள் உற்பத்தி காரணமாக வணிக மற்றும் பரிமாற்ற மையங்கள் தோன்றின.
  • இதனால் நகரங்களும், பெருநகரங்களும் உருவாகின.
  • இரும்பை பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற மகாஜனபதம் = மகதம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கணசங்கங்கள் என்றால் என்ன

  • “கணா” என்னும் சொல்லின் பொருள் = சரிசமமான சமூக அந்தஸ்தை கொண்ட மக்கள்.
  • “சங்கா” என்னும் சொல்லின் பொருள் = மக்கள்.
  • கணசங்கங்கள் சிறிய நிலப்பகுதியில் மேட்டுக்குடி மக்களைக் கொண்ட குழுவால் ஆளப்பட்டது.
  • கணசங்கங்கள் பின்பற்றிய மரபு = சமத்துவ மரபு.

முடியாட்சி என்றால் என்ன

  • முடியாட்சி அரசு என்பது, ஒரு நிலப்பகுதியை அரசனோ அல்லது அரசியோ ஆள்வது ஆகும்.
  • இம்முறையில் ஒரு குடும்பம் நீண்ட காலம் ஆட்சி செய்யும் போது அது அரச வம்சமாக மாறுகிறது.
  • முடியாட்சி அரசு பின்பற்றும் மரபு = வைதீக வேத மரபு.

கணசங்கங்களும் முடியாட்சி அரசுகளும்

  • கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் இரண்டு வகையான அரசுகள் இருந்தன.
    1. கணசங்கங்கள் = முடியாட்சி முறைக்கு முன்னால் மேட்டுக்குடி மக்கள் அடங்கிய குழுவின் ஆட்சி.
    2. முடியாட்சி = மன்னராட்சி முறையில் அமைந்தவை.

ஜனபதங்கள்

  • மக்கள் குழுவாக குடியேறிய தொடக்கக்கால இடங்களே ஜனபதங்கள் எனப்படும்.
  • பின்னர் ஜனபதங்கள் குடியரசுகளாகவோ, சிற்றரசுகளாகவோ ஆனது.

மகாஜனபதங்கள்

  • கங்கைச் சமவெளியில் இரும்பின் பரவலான பயன்பாட்டால், பெரிய அளவில் மக்கள் வாழும் பகுதிகள் தோன்றின.
  • இதனால் ஜனபதங்கள், மகாஜனபதங்களாக மாற்றம் பெற்றன.
  • மகாஜனபதங்கள் என்பதன் பொருள் = பெரிய அரசுகள்.

16 மகாஜனபதங்கள் யாவை

  • கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளி பகுதியில் 16 மகாஜனபதங்கள் இருந்தன. அவை,
    1. குரு
    2. பாஞ்சாலம்
    3. அங்கம்
    4. மகதம்
    5. வஜ்ஜி
    6. காசி
    7. மல்லம்
    8. கோசலம்
    9. அவந்தி
    10. சேதி
    11. வத்சம்
    12. மத்சயம்
    13. சூரசேனம்
    14. அஸ்மகம்
    15. காந்தாரம்
    16. காம்போஜம்

முக்கிய மகாஜனபதங்கள்

  • முக்கியமான நான்கு மகாஜனப்பதங்கள்,
    1. மகதம் = பீகார்.
    2. அவந்தி = உஜ்ஜயினி.
    3. கோசலம் = கிழக்கு உத்திரப்பிரதேசம்.
    4. வத்சம் = கோசாம்பி, அலகாபாத்.
  • இந்நான்கு அரசுகளில், “மகதம்” பேரரசாக உருவெடுத்தது.
  • நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு = மகதம்.

மகதத்தை ஆண்ட நான்கு வம்சங்கள்

  • நான்கு அரச வம்சங்கள் மகதத்தை ஆண்டன. அவை,
    1. ஹரியங்கா வம்சம்.
    2. சிசுநாக வம்சம்.
    3. நந்த வம்சம்.
    4. மௌரிய வம்சம்.
6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

ஹரியங்கா வம்சம் குறிப்பு

  • மகதத்தின் படிப்படியான வளர்ச்சி யாருடைய ஆட்சிக்காலத்தில் துவங்கியது = ஹரியங்க வம்சத்தின் பிம்பிசாரர் ஆட்சிக்காலத்தில்.
  • பிம்பிசாரர் எந்த முறைகளில் ஆட்சியை விரிவுபடுத்தினார் = படையெடுப்பு, திருமண உறவு முறை.
  • பிம்பிசாரரின் மகன் = அஜாதசத்ரு.
  • புத்தரின் சமகாலத்தவர் = அஜாதசத்ரு.
  • முதல் பௌத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் = ராஜகிருகம்.
  • முதல் பௌத்த சமய மாநாட்டை கூட்டியவர் = அஜாதசத்ரு.
  • அஜாதசத்ருவின் மகன் = உதயன்.
  • பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகரை உருவாக்கியவர் = உதயன்.
  • பாடலிபுத்திரம் என்பது = இன்றைய பாட்னா.

சிசுநாக வம்சம் குறிப்பு

  • மகதத்தின் தலைநகரை ராஜகிருகத்தில் இருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றியவர் = சிசுநாக அரசர் காலசோகன்.
  • இரண்டாம் புத்த மத மாநாடு நடைபெற்ற இடம் = வைசாலி.
  • இரண்டாம் புத்த மத மாநாட்டை வைசாலியில் நடத்தியவர் = சிசுநாக அரசர் காலசோகன்.

நந்த வம்சம் குறிப்பு

  • இந்தியாவில் முதன் முதலில் பேரரசை உருவாக்கியவர்கள் = நந்தர்கள்.
  • இந்தியாவில் முதன் முதலில் பேரரசை உருவாக்கிய வம்சம் = நந்த வம்சம்.
  • நந்த வம்சத்தை தோற்றுவித்தவர் = மகாபத்ம நந்தர்.
  • அவரைத் தொடர்ந்து அவரின் எட்டு மகன்களும் ஆட்சி செய்தனர்.
  • மகாபத்ம நந்தர் மற்றும் அவரின் மகன்கள் எட்டு பேரையும் சேர்த்து “நவ நந்தர்கள்” என்று அழைத்தனர்.
  • நந்த வம்சத்தின் கடைசி அரசன் = தனநந்தன்.
  • நந்த வம்சத்தின் கடைசி அரசனான தனநந்தரை, சந்திரகுப்த மௌரியர் வெற்றி கொண்டார்.

மௌரியப் பேரரசு தொடர்பான சான்றுகள்

தொல்லியல் சான்றுகள்முத்திரை பதிக்கப்பட்ட நாணயங்கள்
கல்வெட்டுகள்அசோகரின் கல்வெட்டு பேராணைகள், ஜூனாகத் கல்வெட்டு.
மதச்சார்பற்ற இலக்கியங்கள்கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், விசாகதத்தரின் முத்ராராட்சசம், மாமூலனாரின் அகநானூறு பாடல்.
மதம் சார்ந்த இலக்கியங்கள்சமண, பௌத்த நூல்கள், புராணங்கள்.
வெளிநாட்டுச் சான்றுகள்தீபவம்சம், மகாவம்சம், இண்டிகா (ஆசிரியர் – மெகஸ்தனிஸ்).

இந்தியாவின் முதல் பேரரசு

  • இந்தியாவின் முதல் பேரரசு = மௌரியப் பேரரசு.
  • மௌரியர்களின் தலைநகரம் = பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா).
  • மௌரியர்களின் அரசு முறை = முடியாட்சி முறை.
  • மௌரியப் பேரரசின் காலம் = கி.மு (பொ.ஆ.மு) 322 முதல் 187 வரை.
  • மௌரியப் பேரரசின் முக்கிய அரசர்கள் = சந்திரகுப்த மௌரியர், பிந்துசாரர், அசோகர்.
  • ராஜகிருகம், மகத்தின் தொடக்கக்காலத் தலைநகராக இருந்தது.

சந்திரகுப்த மௌரியர்

  • இந்தியாவின் முதல் பெரிய பேரரசு = மௌரியப் பேரரசு.
  • இந்தியாவின் முதல் பெரிய பேரரசை நிறுவியவர் = சந்திரகுப்த மௌரியர்.
  • இந்தியாவின் முதல் பெரிய பேரரசு அமைந்த இடம் = மகதம்.
  • சந்திரகுப்த மௌரியரை தென்இந்தியாவிற்கு அழைத்து வந்த சமணத் துறவி = பத்திரபாகு.
  • சந்திரகுப்த மௌரியர் உயிர் துறந்த இடம் = சரவணபெலகொலா (கர்நாடகா).
  • சந்திரகுப்தர், சரவணபெலகொலாவில், சமணச் சடன்கானா “சல்லேகனா” செய்து உயர் துறந்தார்.
    • சல்லேகனா என்றால் என்ன = உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல்.

பிந்துசாரர்

  • சந்திரகுப்த மௌரியரின் மகன் = பிந்துசாரர்.
  • பிந்துசாரரின் இயற்பெயர் = சிம்ஹசேனா.
  • கிரேக்கர்கள் பிந்துசாரரை எவ்வாறு அழைத்தனர் = “அமிர்தகதா”.
  • அமிர்தகதா என்பதன் பொருள் = எதிரிகளை அழிப்பவன்.
  • பிந்துசாரரின் மகன் = அசோகர்.
  • அசோகர் முதன் முதலில் எங்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார் = உஜ்ஜைன்.

அசோகர்

  • மௌரிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் = அசோகர்.
  • “தேவனாம்பிரியர்” என்று அழைக்கப்பட்ட அரசர் = அசோகர்.
  • தேவனாம்பிரியர் என்பதன் பொருள் = கடவுளுக்கு பிரியமானவன்.
  • அசோகர் கலிங்கத்தின் மீது போர் தொடுத்த ஆண்டு = கி.மு (பொ.ஆ.மு) 261.
  • கலிங்க போரின் பயங்கரத்தை பற்றி அசோகர் தன்னுடைய எந்த பாறைக் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார் = 13 ஆம் பாறைக் கல்வெட்டு.
  • “அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார்” என்று கூறிய வரலாற்று அறிஞர் = H.G.வெல்ஸ்.

சந்த அசோகர் தம்ம அசோகர்

  • சந்த அசோகர் என்பதன் பொருள் = கொடிய அசோகர்.
  • தம்ம அசோகர் என்பதன் பொருள் = நீதிமான் அசோகர்.
  • எந்த போருக்கு பின்னர் அசோகர் புத்த மதத்திற்கு மாறினார் = கலிங்கப் போர்.
  • தர்மத்தை பரப்ப அசோகர் மேற்கொண்ட பயணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = தர்மயாத்திரைகள் (Dharmayatras).
  • அசோகர் எந்த தூண் கல்வெட்டில் தர்மத்தின் பொருள் பற்று குறிப்பு உள்ளது = இரண்டாம் தூண் கல்வெட்டில்.
  • அசோகர் மகன் = மகிந்தா.
  • அசோகரின் மகள் = சங்கமித்திரை.
  • புத்த மதத்தை பரப்பும் நோக்கில் இலங்கைக்கு தனது மகனையும், மகளையும் அனுப்பி வைத்தார்.
  • புத்த மதத்தை பரப்ப அசோகர் நியமித்த அதிகாரிகள் = தர்ம-மகாமாத்திரர்கள்.
  • மூன்றாம் புத்த சமய மாநாடு நடைப்பெற்ற இடம் = பாடலிபுத்திரம்.
  • மூன்றாம் புத்த சமய மாநாட்டை நடத்தியவர் = அசோகர்.

அசோகரின் ஆணைகள்

  • அசோகரின் ஆணைகள் மொத்தம் எத்தனை = 33.
  • அசோகரின் ஆணைகள், மக்களின் மீது அவர் கொண்ட அக்கறையையும், நேர்மையையும் விவரிக்கின்றன.
  • பேராணை என்றால் என்ன = அரசரால் அலல்து உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம் ஆகும்.
6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

13 ஆம் பாறைக் கல்வெட்டு

  • அசோகரின் எந்த பாறைக் கல்வெட்டுகள் மூவேந்தர்களையும், சத்யபுத்திரர்களையும் குறிப்பிட்டுள்ளன = இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள்.

அசோகர் கல்வெட்டுகளில் எழுத்துமுறை

  • சாஞ்சி கல்வெட்டில் உள்ள எழுத்துமுறை = பிராமி.
  • காந்தகார் கல்வெட்டில் உள்ள எழுத்துமுறை = கிரேக்கம் மற்றும் அராமிக்.
  • வடமேற்குப் பகுதிகளில் உள்ள எழுத்துமுறை = கரோஸ்தி.

ஜூனாகத் கல்வெட்டு / கிர்னார் கல்வெட்டு

  • ஜூனாகத் கல்வெட்டை அமைத்தவர் = ருத்ரதாமன்.
  • கிர்னார் கல்வெட்டை அமைத்தவர் = ருத்ரதாமன்.
  • ருத்ரதாமனின் ஜூனாகத் / கிர்னார் கல்வெட்டு “சுதர்சனா ஏரி” எனும் நீர்நிலை உருவாக்கப்பட்டதை பதிவு செய்துள்ளது.
  • சுதர்சனா ஏரி பணிகள் சந்திரகுப்த மௌரியர் காலத்தில் துவங்கியது.
  • சுதர்சனா ஏரியின் பணிகள் அசோகரின் காலத்தில் நிறைவு பெற்றது.

மௌரிய நிர்வாகம்

  • மௌரியர்களின் நிர்வாகம் = மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் ஆகும்.
  • மௌரியப் பேரரசின் அதிகாரம் மிக்க நபர் = அரசர்.
  • மௌரியப் பேரரசில் அரசருக்கு உதவிய அமைச்சரவை = மந்திரிபரிஷத்.
  • மந்திரிபரிஷத் என்ற அமைச்சரவையில் உள்ள உறுப்பினர்கள் = ஒரு புரோகிதர், ஒரு சேனாதிபதி, ஒரு மகாமந்திரி மற்றும் இளவரசன்.

மௌரிய அரசின் வருவாய் முறை

  • “பாலி” மற்றும் “பாகா” என்னும் இரண்டு வரிகளை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எங்கு உள்ளது = லும்பினியில் உள்ள அசோகரின் கல்வெட்டு.
  • லும்பினியில் உள்ள அசோகரின் கல்வெட்டு, எந்த இரண்டு வரிகளை பற்றி குறிப்பிட்டுள்ளது = பாகா, பாலி.
  • பாகா என்பது ஒரு வகை நில வரி ஆகும். இது மொத்த விளைச்சலில் 1 / 6 பங்கு வரியாக வசூலிக்கப்படும்.
  • உப்பு மற்றும் நீர் பாசனம் ஆகியவற்றுக்கும் வரி விதிக்கப்பட்டது.
  • அரசு வருவாயில் பெரும்பகுதி ஊழியர்கள், ராணுவ வீரர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்டது.

மௌரிய அரசின் நீதி நிர்வாகம்

  • நீதித்துரையின் தலைவர் = அரசர்.
  • மேல்முறையீட்டு நீதிமன்றமும் அரசரே ஆவார்.
  • அரசர் தனக்கு கீழே பல துணை நீதிபதிகளை நியமித்தார்.
  • தண்டனைகள் கடுமையாக இருந்தன.

மௌரிய அரசின் இராணுவ நிர்வாகம்

  • படைகளின் தலைமைத் தளபதி = அரசர்.
  • முப்பது நபர்களைக் கொண்ட குழு, ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஆறு குழுவாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
  • ஒரு குழுவில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை = ஐந்து.
  • ஒவ்வொரு குழுவும், கடற்படை, ஆயுதங்கள், காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை ஆகியவற்றை நிர்வாகம் செய்தது.

மௌரிய அரசின் நகராட்சி நிர்வாகம்

  • ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்கள் உருவாக்கப்பட்டிருந்தது.
  • நகர நிர்வாகத்தை கவனிக்கும் அதிகாரி = “நகரிகா”.
  • நகர நிர்வாகத்தை கவனிக்கும் “நகரிகா” என்னும் அதிகாரிக்கு உதவி செய்த அதிகாரிகள் = ஸ்தானிகா, கோபா.
6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

மௌரிய பேரரசின் நாணயம்

  • அரசு பணியாளர்களுக்கு பணம் ஊதியமாகவே வழங்கப்பட்டது.
  • முத்திரை பதிக்கபப்ட்ட வெள்ளி நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = பனா (panas).
  • மௌரிய பேரராசின் வெள்ளி நாணயங்களில் பொறிக்கப்பட்டிருந்த உருவங்கள் = மயில், மலை வடிவம்.
  • மௌரிய பேரரசு காலத்தில் புழக்கத்தில் இருந்த பிறைவடிவ செப்பு நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = மஸகாஸ்.
  • “மஸகாஸ்” எனப்படுவது = மௌரியர் கால பிறைவடிவ செப்பு நாணயங்கள்.

மௌரியர் கால வணிகம்

  • கிரேக்கம் (ஹெலனிக்), மலேயா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுடன் பெருமளவு வணிகம் நடைபெற்றது.
  • சிறப்பு மிக்க துணிகள் எங்கு உற்பத்தி செய்யப்பட்டன என அர்த்தசாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது = காசி (பனாரஸ்), வங்கா (வங்காளம்), காமரூபம் (அஸ்ஸாம்) மற்றும் மதுரை (தமிழ்நாடு).

மௌரியர் காலத்தில் ஏற்றுமதி இறக்குமதி

ஏற்றுமதி பொருட்கள்இறக்குமதி பொருட்கள்
நறுமணப் பொருட்கள், முத்துக்கள், வைரங்கள், பருத்தி இழை துணி, தங்கத்தினால் ஆன பொருட்கள், சங்குகள், சிப்பிகள்குதிரைகள், தங்கம், கண்ணாடி பொருள்கள், பட்டு (லினன்)

கலை கட்டிடக்கலை

  • மௌரியர் கால கலையை இரண்டு வகைகளாக பிரிப்பர். அவை,
    1. உள்ளூர் கலை
    2. அரச கலை
உள்ளூர் கலைஅரச கலை
யக்சன், யக்சி உருவச் சிலைகள்அரண்மனைகள் மற்றும் பொது கட்டிடங்கள், ஒற்றைக்கால் தூண்கள், பாறை குடைவரைக் கட்டிடக்கலை, ஸ்தூபிகள்
  • யக்சன் என்றால் என்ன = நீர், வளம், மரங்கள், காடுகள், காட்டுச் சூழலோடு தொடர்புடைய கடவுள்.
  • யக்சி என்றால் என்ன = யக்சன் கடவுளின் பெண் வடிவம்
6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

ஸ்தூபி என்றால் என்ன

  • செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டுள்ள அரைக்கோள வடிவமுடைய குவிமாடம் போன்ற அமைப்பாகும்.
  • புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
  • சாஞ்சி ஸ்தூபி எங்கு உள்ளது = மத்தியப்பிரதேச மாநிலத்தின் போபாலுக்கு அருகே உள்ளது.

சாரநாத் ஒற்றைக்கல் தூண்

  • சாரநாத் ஒற்றைக்கல் தூணின் சிகரப்பகுதியில் (தலைப்பகுதியில்) தர்மசக்கரம் உள்ளது.

சிங்கமுகத் தூண்

6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
6TH HISTORY குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
  • சாரநாத்தில் உள்ள அசோகருடைய தூணின் சிகரப் பகுதியில் அமைந்துள்ள சிங்க உருவங்கள் இந்திய தேசிய சின்னமாகவும், வட்ட வடிவ அடிப்பகுதியில் இடம் பெற்றுள்ள சக்கரம் இந்தியாவின் தேசியக் கொடியின் மையச் சக்கரமாகவும் சேற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பாறைக் குடைவரைக் கலையின் தொடக்கம்

  • இந்தியாவில் பாறைக் குடைவரை கலையின் தொடக்கம், மௌரியப் பேரரசு காலத்தில் இருந்து துவங்கியது.
  • பராபர் குன்றுகள் = இங்குள்ள குன்றில் மூன்று குகைகளில் அசோகரின் அர்ப்பணிப்பு (யாருக்காக வழங்கினார்) பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நாகார்ஜுனா கொண்டாவில் உள்ள மூன்று குகைகளில் “தசரத மௌரியரின்” கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன.
  • அசோகரின் பேரன் = தசரத மௌரியர்.

மௌரியப் பேரரசு வீழ்ச்சிக்கான காரணங்கள்

  • அசோகருக்கு பின் வந்த அரசர்கள் வலிமை குன்றியவர்களாக இருந்தனர்.
  • பேரரசின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த கலகங்கள்.
  • பாக்டீரிய நாட்டை சேர்ந்த கிரேக்கர்களின் படையெடுப்பு.
  • மௌரியப் பேரரசின் கடைசி அரசன் = பிருகத்ரதா.
  • பிருகத்ரதாவின் படைத்தளபதி = புஷ்யமித்ர சுங்கன்.
  • மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவருடைய படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.
  • சுங்க வம்சத்தை நிறுவியவர் = புஷ்யமித்ர சுங்கன்.
  • சுங்க வம்சத்தின் முதல் அரசர் = புஷ்யமித்ர சுங்கன்.

பாடலிபுத்திரத்தின் பிரம்மாண்டம்

  • மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு 64 நுழைவு வாயில்களும் 570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்தன.

நாளந்தா பல்கலைக்கழகம்

  • நாளந்தா பல்கலைக்கழகம், பண்டைய மகத நாட்டில் இருந்த புத்த மடாலயம் ஆகும்.
  • குப்தர்களின் காலத்தில் இது மிகப் புகழ் பெற்ற கல்வி நிலையமாக திகழ்ந்தது.
  • நாளந்தா என்பது “சம்ஸ்கிருத” சொல் ஆகும்.
  • நா + அலம் + தா = மூன்று சம்ஸ்கிருத சொல்லின் கூட்டுச் சொல் “நாளந்தா”.
  • இம்மூன்று சொற்களின் பொருள் = வற்றாத அறிவை அளிப்பவர்.

ஊர்களின் புதிய பெயர்கள்

பண்டைய பெயர்தற்போதைய பெயர்
ராஜகிருகம்ராஜ்கிர்
பாடலிபுத்திரம்பாட்னா
கலிங்காஒடிசா

மெகஸ்தனிஸின் “இண்டிகா”

  • கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதவர் = மெகஸ்தனிஸ்.
  • செலுக்கஸ் நிகேட்டரின் தூதவராக சந்திர குப்த மௌரியரின் அவைக்கு வந்தவர் = மெகஸ்தனிஸ்.
  • மெகஸ்தனிஸ் இந்தியாவில் இருந்த ஆண்டுகள் = 14 ஆண்டுகள்.
  • “இண்டிகா” என்னும் நூலின் ஆசிரியர் = மெகஸ்தனிஸ்.
  • மௌரியப் பேரரசு பற்றி நாம் தெரிந்த கொள்ள உதவும் நூல் = இண்டிகா.

சீனப்பெருஞ்சுவர்

  • இது பழங்காலத்தில் கட்டப்பட்ட தொடர்ச்சியான பல கோட்டைச் சுவராகும்.
  • குன்-சி-ஹங் என்னும் பேரரசர் தனது பேரரசின் வட எல்லையை பாதுகாப்பதற்காக கி.மு.(பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டில் இந்தச் சுவர்களை இணைத்தார்.

ஒலிம்பியாவின் ஜியஸ் கோவில்

  • கிரிஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் கி.மு (பொ.ஆ.மு) ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் ஜியஸ் என்ற கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.

 

 

Leave a Reply