6TH HISTORY TERM1 BOOK BACK QUESTIONS UNIT 1

6TH HISTORY TERM1 BOOK BACK QUESTIONS UNIT 1 வரலாறு என்றால் என்ன

6TH HISTORY TERM1 BOOK BACK QUESTIONS UNIT 1

6TH HISTORY TERM1 BOOK BACK QUESTIONS UNIT 1

ஆறாம் வகுப்பு முதல் பருவ வரலாறு பாடமான “வரலாறு என்றால் என்ன” என்ற பாடத்தின் புத்தக வினாக்களுக்கு விடையளிக்கப் பட்டுள்ளது. மாணவர்கள் தேர்விற்கு பயன்பட ஏதுவாக எளிமையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

சரியான விடையைத் தேர்வு செய்யவும்

  1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேரிக்க மேற்கொண்ட நடவடிக்கை?

அ. வணிகம்

ஆ. வேட்டையாடுதல்

இ. ஓவியம் வரைதல்

ஈ. விலங்குககள் வளர்த்தல்

விடை = ஆ. வேட்டையாடுதல்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

 

கூற்றையும் காரணத்தையும் பொருத்துக: சரியான விடையை குறியிட்டு காட்டுக

  1. கூற்று : பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர்.
  2. காரணம் : குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தும்.

அ. கூற்று சரி , காரணம் தவறு

ஆ. கூற்று சரி , கூற்றுக்கான காரணமும் சரி

இ. கூற்று தவறு , காரணம் சரி

ஈ. கூற்று தவறு , காரணம் தவறு

          விடை =  ஆ. கூற்று சரி , கூற்றுக்கான காரணமும் சரி

  1. பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழாய்வுகள் மூலமாக தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அப்பொருட்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ளப் பாதுகாக்கப்படுகின்றன. இக்கூற்றுடன் தொடர்புடையது எது?

அ. அருங்காட்சியகங்கள்

ஆ. புதைபொருள் படிமங்கள்

இ. கற்கருவிகள்

ஈ. எலும்புகள்

        விடை = அ. அருங்காட்சியகங்கள்

 

தவறான இணையைக் கண்டுபிடி

அ. பழைய கற்காலம் – கற்கருவிகள்

ஆ. பாறை ஓவியங்கள் – குகைச் சுவர்கள்

இ. செப்புத்தகடுகள் – ஒரு வரலாற்று ஆதாரம்

ஈ. பூனைகள் – முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு

விடை = ஈ. பூனைகள் – முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு (மனிதனால் முதன் முதலில் பழக்கப்பட்ட விலங்கு = நாய்)

6TH HISTORY TERM1 BOOK BACK QUESTIONS UNIT 1
6TH HISTORY TERM1 BOOK BACK QUESTIONS UNIT 1

மற்ற தொடர்களிலிருந்து வேறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி

அ) பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

ஆ) வேட்டையாடுதலை குறிப்பதாக ஓவியங்கள் இருந்தன.

இ) பழங்கால மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டையாடுதலை எடுத்துரைப்பதற்காக வரைந்திருக்கலாம்

ஈ) பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

விடை = ஈ) பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

 

கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் ________________ = குகைகள்.
  2. வரலாற்றின் தந்தை ________________ = ஹெரோடோஸ்.
  3. பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு ________________ = நாய்.
  4. கல்வெட்டுகள் ________________ ஆதாரங்கள் ஆகும் = தொல்பொருள்.
  5. அசோகச் சக்கரத்தில் ______ ஆரக்கால்கள் உள்ளன =  24.

சரியா? தவறா?

  1. பழைய கற்காலத்தைச் சார்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன?

விடை :  சரி

  1. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன

விடை : சரி

  1. அசோகரது காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது

விடை : சரி

பொருத்துக

6TH HISTORY TERM1 BOOK BACK QUESTIONS UNIT 1
6TH HISTORY TERM1 BOOK BACK QUESTIONS UNIT 1
பாறை ஓவியங்கள்வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது
எழுதப்பட்ட பதிவுகள்செப்பேடுகள்
அசோகர்மிகவும் புகழ்பெற்ற அரசர்
மதச் சார்புள்ள இலக்கியம்தேவாரம்

 

 

ஓரிரு வார்த்தைகளில் விடையளிக்கவும்

  1. நாட்குறிப்பு எழுதுவதன் பயன்கள் இரண்டைக் கூறு?

மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களது செயல்பாடுகளையும் அறிய முடிகிறது.

  1. வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு அறிந்து கொள்கிறோம்?

கற்கருவிகள், புதைபடிமங்கள், பாறை ஓவியங்கள்.

  1. கல்வெட்டுகள் , ஓர் எழுதப்பட்ட வரலாற்றுச்சான்றா?

ஆம், எழுதப்பட்ட வரலாற்றுச்சான்று

  1. வரலாற்று தொடக்கக் காலம் (Proto History) என்றால் என்ன?

வரலாற்று ஆவணங்கள் இல்லாத காலம் வரலாற்றின் தொடைக்க காலம்.

  1. ஏதேனும் ஒரு காப்பியத்தின் பெயரை எழுதுக?

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி.

 

 

பின்வரும் வினாக்களுக்கு விடையளி

  1. வரலாறு என்றால் என்ன?

வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் கால வரிசைப் பதிவு ஆகும்.

  1. வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி எழுதுக.

வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது கற்கருவிகள் பயன்படுத்திய காலத்திற்கும் வரலாறு எழுதப்பட்ட காலத்திற்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.

  1. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி அறிய உதவும் சான்றுகள் எவை?

வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் ஆதாரங்கள்: கற்கருவிகள், பாறை ஓவியங்கள், உயிரினங்களின் எஞ்சிய பகுதிகள் மற்றும் தொல்பொருட்கள்.

  1. வரலாற்றுக்கு முந்தைய காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் யாவை?

வடமதுரை, அதிராம்பாக்கம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர்.

  1. அருங்காட்சியகத்தின் பயன்கள் யாவை?

வரலாற்று ஆய்வுக்கு பயன்படும் தொல்பொருட்களை பாதுகாத்து, வரலாறு எழுதுவதற்கு உதவி புரியும் நிறுவனமே அருங்காட்சியகங்கள் ஆகும்.

  1. பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகள் சிலவற்றை கூறு.

கற்கருவிகள், மரக்கிளைகள், எலும்புகள் மற்றும் விலங்குகளின் கொம்புகள் போன்ற கருவிகளைப் பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்தினான்.

  1. பாறைகளில் ஓவியங்கள் ஏன் வரையப்பட்டன?

பழங்கால மக்கள் தாங்கள் வேட்டைக்குச் சென்றபோது அங்கு நடந்த பல்வேறு செயல்பாடுகளைப் பதிவு செய்ய விரும்பினர். இதைப் பிறருக்குத் தெரிவிக்கவே ஓவியங்கள் வரையப்பட்டன.

  1. தொல் கைவினைப் பாெருட்கள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.

மட்பாண்டங்கள் மற்றும் பொம்மைகள்.

 

 

உயர் சிந்தனை வினாக்கள்

  1. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மக்களுக்கு நாய் எவ்வாறு பயனுள்ளதாக இருந்தது?
    • பழங்கால மனிதர்கள் வாழ்ந்து வந்த குகைகளுக்குள் கொடிய விலங்குகள் நுழைந்து விடும், அவை எதிர்பாராமல் வரும்போது மனிதர்களால் அவற்றை அறிய முடியாமற் போனதுண்டு.
    • ஆனால் அவர்களுடன் திரிந்து கொண்டிருந்த நாய்கள் தமது கூரிய மோப்ப உணர்வினால் விலங்குகளின் வருகையை அறிந்து கொண்டு குரைத்தன.
    • இதைக்கண்ட மனிதர்கள் நாய்களைப் பழக்கி தங்கள் பாதுகாப்பிற்காகவும் வேட்டையாடுவதற்காகவும், வேட்டையாடப் போகும் போது உடன் அழைத்துச் செல்லத் தொடங்கினர்.
  1. பழைய கற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்?
பழைய கற்கால மனிதன்தற்கால மனிதன்
நாடோடி வாழ்க்கை வாழ்ந்தான்.ஓரிடத்தில் நிலையான வாழ்க்கை வாழ்ந்தனர்.
வேட்டையாடுதல் முதன்மையான தொழிலாக இருந்தது.விவசாயம் முதன்மையான தொழிலாக உள்ளது.
பச்சையான இறைச்சி மற்றும் காய்கறிகளை உணவாக உண்டான்.வேக வைத்த உணவினை உண்டான்.
உணவினைத் தேடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அலைந்து திரிந்தான்.உணவு உற்பத்தி செய்வதை தெரிந்து வைத்திருந்தான்.
இடி, மின்னல், மரங்களை தெய்வமாக வணங்கினான்உருவ வழிபாடு பின்பற்றப்பட்டது.

 

 

 

கட்டக வினாக்கள்

  1. அன்று மனிதர்கள் என் மீது கிறுக்கினார்கள்; வண்ண மை காெண்டு ஓவியம் வரைந்தனர். இன்று என்னை உடைத்து வீடுகள் , சாலைகள் அமைக்கின்றனர். நான் யார்?

குகைப் பாறைகள்

  1. ஏதேனும் இரு தொல்பொருள் ஆதாரங்களைக் கூறு.

நாணயங்கள், கல்வெட்டுகள்

  1. இலக்கியச் சான்றுகளின் வகைகளைக் கூறு.

சமயம் சார்ந்த, சமயம் சாரா இலக்கியங்கள்

  1. பொ.ஆ.மு – இதன் விரிவாக்கம் என்ன?

பொது ஆண்டுக்கு முன்

  1. ‘இஸ்டோரியா’ என்னும் கிரேக்கச் சாெல்லுக்கு என்ன பாெருள்?

விசாரித்துக் கற்றல்

  1. பொ.ஆ– இதன் விரிவாக்கம் என்ன?

பாெது ஆண்டு

  1. கல்வெட்டுக்கு குறிப்புகளைப் பற்றி ஆராயும் துறை ?

கல்வெட்டியல்

  1. நாணயங்களை ஆராயும் முறை ?

நாணயவியல்

  1. நீங்கள் பேச, பார்க்க, கேட்க, எழுத, படிக்க உதவுபவன். நானின்றி இவ்வுலகம் இல்லை. நான் யார்?

இணையதளம், ஆசிரியர்.

 

 

Leave a Reply