TNPSC DAILY CURRENT AFFAIRS – 18 AUGUST 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS – 18 AUGUST 2021

       TNPSC DAILY CURRENT AFFAIRS – 18 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

கொங்கன் கடற்பயிற்சி 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் கடல் பகுதியில், இந்தியா மற்றும் ஐக்கிய இங்கிலாந்து நாடுகளின் கடற்படையினர் மேற்கொண்ட “கடல்சார் கொங்கன் பயிற்சி 2021” நடைபெற்றது
  • இந்தியாவின் சார்பில் ஐ.என்.எஸ் தபார் போர்க்கப்பல் இதில் பங்கேற்றது

ஹிந்துஸ்தான் – 228 விமானம்

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • அரசு நிறுவனமான “இந்துஸ்தான் விமானவியல் நிறுவனம்” சார்பில், முதல் முறையாக வணிகப் பயன்பாட்டிற்கான விமானமாக “ஹிந்துஸ்தான் – 228 விமானம்” உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விமானம் வெற்றிகரமாக தனது சோதனையை நிறைவு செய்துள்ளது
  • நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக கான்பூரில் உள்ள அந்நிறுவன வசதி மையத்தில் HAL கிரவுண்ட் ரன் மற்றும் லோ ஸ்பீட் டாக்ஸி சோதனைகளை (LSTT) வெற்றிகரமாக நடத்தியது.

பால்சம் (காசித்தும்பை) செடி

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • கேரளாவில் 3 புதிய காட்டு வகை பால்சம் (காசித்தும்பி) செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
  • புதிய இனங்கள் பால்சமினேசி குடும்பத்தின் கீழ் வரும் இம்பாட்டியன்ஸ் இனத்தைச் சேர்ந்தவை
  • இந்த 3 இனங்களுக்கு “இம்பாட்டியன்ஸ் அச்சுதானந்தினி”, “இம்பாட்டியன்ஸ் சைலஜே” மற்றும் “இம்பாட்டியன்ஸ் தானி” எனப் பெயரிடப்பட்டுள்ளது

ஸ்மார்ட் சுகாதார அட்டை வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலம்

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • இந்தியாவில் முதல் முறையாக ஸ்மார்ட் சுகாதார அட்டைக்ள வழங்கிய முதல் மாநிலம் என்ற சிறப்பை, ஒடிசா பெற்றுள்ளது. அம்மாநிலத்தின் 96 லட்சம் குடும்பங்களுக்கு இந்த அட்டை வழங்கப்பட உள்ளது
  • போனா பழங்குடியினத்தைச் சேர்ந்த சுக்ரி தங்கிடி மஜ்ஜி என்ற பெண்மணி இந்த நிகழ்வில் முதல்வரிடம் முதல் ஸ்மார்ட் ஹெல்த் கார்டைப் பெற்றார்.

பாகிஸ்தானின் முதல் பெண் தலைமை நீதிபதி

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • பாகிஸ்தானின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற சிறப்பை, “ஆயிஷா மாலிக்” என்ற பெண் நீதிபதி பெற்றுள்ளார்
  • இவர் லண்டன் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர் ஆவார்.

உத்திரப்பிரதேச அரசின் “லங்கடா நடவடிக்கை”

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • உத்திரப் பிரதேச மாநில அரசின் காவல்துறை சார்பில், “லங்கடா நடவடிக்கை” என்ற பெயரில் அம்மாநிலத்தில் கடுமையான குற்றங்களை செய்பவர்களை சுட்டுப் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
  • இதன் படி, அம்மாநிலத்தில் 8742 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டு, 3302 குற்றவாளிகள் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்.

சுடோக்கு விளையாட்டின் தந்தை காலமானார்

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • உலகப்புகழ் பெற்ற எண் விளையாட்டான சுடோக்கு விளையாட்டினை உலகிற்கு அறிமுகம் செய்த ஜப்பானின் “மாக்கி காஜி” காலமானார்
  • சுடோக்கு விளையாட்டின் தந்தை எனப்படும் இவர், ஜப்பானில் முதல்முறையாக சுடோக்கு இதழை துவக்கினார்

13 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயந்துள்ள இந்தியாவின் 2-வது நிறுவனம்

  • 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக இந்தியாவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ் உயர்ந்துள்ளது
  • இந்த நிலையை எட்டியுள்ள இந்தியாவின் 2-வது நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது டி.சி.எஸ். இதற்கு முன்னர் இந்த மதிப்பினை அடைந்த இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற சிறப்பை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது

2024 க்குள் 6 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி

  • மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் வருகின்ற 2024 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் சுமார் 6 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி சேவை ஏற்படுத்தப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • தற்போது வரை நாட்டில் 2.8 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது

 

Leave a Reply