இசைக்கலை

இசைக்கலை

இசைக்கலை
இசைக்கலை

இசைக்கலை

  • பாட்டு என்பது பரந்துபட்ட ஓசை உடையது. பாட்டுக்குப் பண் உண்டு. பண்ணை இராகம் என்பர்.
  • பண்கள் நூற்று மூன்று ஆகும் என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன.
  • பருந்தும் அதன் நிழலும் போலப் பாட்டும் பண்ணும் இயைந்து செல்ல வேண்டும் என்பர்.
  • பண்ணுக்குரிய அடிப்படையைச் சுரம் என்றும் கோவை என்றும் கூறுவர்.
  • இக்காலத்தில் சரிகமபதநி என்ற ஏழு சுரங்கள் உள்ளன.
  • இசை என்னும் சொல் “இயை” என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது
  • இசையானது “கந்தருவ வேதம்” என்று அழைக்கப்படும் சிறப்பினை உடையது
  • இன்னிசை, ஒத்திசை, தொகுப்பிசை என மூன்றாகப் பிரிப்பர்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • ஒற்றைச் சுரங்கள் இனிமையாகச் சேர்வது இன்னிசை. இந்திய இசை இன்னிசை வகையைச் சேர்ந்தது
  • ஒத்த சுரங்களின் சுர அடுக்குகள் தம்முள் ஒத்திசைப்பது “ஒத்திசை” எனப்படும். மேலைநாட்டு இசை இந்த வகையைச் சார்ந்ததாகும்
  • ஒவ்வோர் சுரத்திற்கும் வேறோர் இணைச்சுரம் சேர்க்கப்பட்டு இரண்டும் ஒன்றாக இசைப்பது தொகுப்பிசை ஆகும்
  • இசையின் ஒலிக்குறிப்பு சுரம் எனப்படும்
  • சுரம் என்பதற்கு இனிமை உடையது என்று பொருள்
  • இசைத்தல் என்பதும் பொருள்
  • இசைத்தல் என்பதற்கு பொருந்துதல், ஒன்றாதல் என்று பொருள்
  • “இசையே புணர்ச்சி” என்பது தொல்க்காப்பிய உரியியல் நூற்பா
  • இந்தியாவில் இந்துஸ்தானி இசை, கருநாடக இசை என்ற இரு பிரிவுகள் உள்ளன
இசைக்கலை
இசைக்கலை

இசைக்கலை ஏழு சுரங்கள்

  • இவை ஏழு சுரங்கள் எனப்படும்
  • ஏழு சுரங்களும் ஒன்றைவிட மற்றது வலியது என்ற வரிசையில் ஒலிப்பது ஆரோசை (ஆரோகணம்) ஆகும்
  • ஏழு சுரங்களும் இறங்கு வரிசையில் ஒலிப்பது அமரோசை (அவரோகணம்) ஆகும்
  • சுரம் என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் “நரம்பு” என்பதாகும்
  • சுரங்கள் சேர்ந்தது “ராகம்” ஆகும்
  • ராகம் என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் “பண்” என்பதாகும்
  • இந்திய இசை ராகத்தை அடிப்படையாக கொண்டது
  • பூபாளம், முகாரி, நீலாம்பரி போன்ற பல ராகங்கள் உண்டு
  • விடியலில் பாட வேண்டிய ராகம் கேதாரம், தன்னியாசி
  • முற்பகலில் பாடவேண்டிய ராகம் சாவேரி, தேவமனோகரி
  • நண்பகலில் பாடவேண்டிய ராகம் ஸ்ரீராகம், மத்தியமாவதி
  • பிற்பகலில் பாடவேண்டிய ராகம் முகாரி, பேகடை
  • மாலையில் பாடவேண்டிய ராகம் கல்யாணி, வசந்தம்
  • எல்லா நேரங்களிலும் பாடப்படும் ராகம் பைரவி, சங்கராபரணம், காம்போதி, ஆரபி
  • தேவாரப்பாடல்களின் இசையைப் பகற்பண், இராப்பண், பொதுப்பண் என மூன்றாகப் பிரித்துள்ளனர்

சுரம்

தமிழ்ச்சொல் வடசொல்
குரல்

சட்ஜமம்

ரி

துத்தம் ரிஷபம்
கைக்கிளை

காந்தாரம்

உழை மத்திமம்
இளி

பஞ்சமம்

விளிரி தைவதம்
நி தாரம்

நிஷாதம்

இசைக்கலை
இசைக்கலை

இசைக்கலை – இசைக்கருவிகள்

  • பண்டைக்காலத்து இசைக் கருவிகள் புல்லாங்குழலும் யாழும் ஆகும். மாடுகளை மேய்த்த ஆயன் காட்டில் மூங்கிலில் வண்டுகள் உண்டாக்கிய துளைகளில் காற்றுப் புகுந்து உண்டாக்கும் ஓசை கேட்டுப் புல்லாங்குழலை உருவாக்கிக் கொண்டான்; மரக்கிளைகளில் கொடிகள் படர்ந்திருக்க அவற்றின் இடையே காற்றுப் புகுந்து வெளிப்பட்டபோது உண்டான ஓசை கேட்டு ‘யாழ்’ என்னும் இசைக் கருவியைப் படைத்துக் கொண்டான்.
  • உலகில் இசைக்கப்படும் எல்லா இசைக் கருவிகளும் அடிப்படையான இசைக்கருவிகள் எல்லாம் கிழக்கு நாடுகளில் தோன்றின
  • தமிழ்நாட்டில் இசைக்கருவிகளை நான்கு வகையாகப் பிரிப்பர்
  • தோல்கருவி 2. துளைக்கருவி 3. நரம்புக்கருவி 4. கஞ்சக்கருவி
  • கஞ்சக் கருவி என்பது உலோகக் கருவிகளைக் குறிக்கும்
  • தோல் கருவிகள் = பேரிகை, படகம், இடுக்கை, உடுக்கை, மத்தளம், சல்லி, கரடி
  • துளைக் கருவிகள் = வங்கியம், கொம்பு, தாரை, குழல், காளம், சங்கு
  • நரம்புக் கருவிகள் = யாழ, வீணை, கின்னரி
  • கஞ்சக் கருவிகள் = கைமணி, தாளம், கஞ்சதாளம், கொண்டி
  • பஞ்சமரபு என்ற பண்டைய இசைத்தமிழ் நூல் பாடகர் பாடுவது மிடற்றுக் கருவி எனக் கூறுகிறது
  • இன்று மேலைநாட்டு இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன
  • முதல் சங்கத்தில் பெருநாரை, பெருகுருகு (முதுநாரை, முதுகுருகு) என்ற நூல்கள் இருந்தன
  • பெருநாரை என்பது இசைப்பற்றிய நூல், நரம்பு – நார் – நாரை
  • பெருகுருகு என்பது துணைக்கருவிகள் பற்றிய இசைநூல்
  • இடை சங்கத்தில் பேரிசை, சிற்றிசை என்ற இசைநூல்கள் இருந்தன
  • கடைச்சங்கத்தில் இசைமரபு, இசை நுணுக்கம், ஐந்தொகை அல்லது பஞ்சமரபு என்னும் இசை நூல்கள் இருந்தன
  • தொல்க்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நிகண்டுகள், சைவ, வைணவ நூல்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், உரை நூல்கள் என எல்லாவற்றிலும் இசைத்தமிழ் குறித்த, தமிழ் இசை குறித்த பல செய்திகள் இடம் பெற்றுள்ளன
  • அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பஞ்ச பாரதீயம், பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத்தமிழ், இசைநுணுக்கம், பஞ்சமரபு, தாளவகை ஒத்து என்ற இசை இலக்கண நூல்களைக் குறிப்பிட்டுள்ளனர்
  • ஐந்து தினைக்கும் உரிய “யாழ” குறித்து இலக்கண நூல்கள் கூறுகின்றன
  • வள்ளுவர் குறிப்பிடும் இரண்டு இசை கருவிகள்,

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்

இசைக்கலை – இசைக்கருவி வகைகள்

  • இசைக்கருவிகள் நான்கு வகைப்படும். அவை,
    1. தோற்கருவி – மத்தளம், கிணை, முழவு, பேரிகை, உடுக்கை, முரசு, பறை ஆகியன தோற் கருவிகள் ஆகும்
    2. துளைக்கருவி – புல்லாங்குழல், சங்கு, கொம்பு ஆகியன துளைக் கருவிகள் ஆகும்
    3. நரம்புக் கருவி – யாழ், வீணை என்பன நரம்புக் கருவிகள் ஆகும்
    4. கஞ்சக் கருவி – பாண்டில், தாளம் என்பன கஞ்சக் கருவிகள் ஆகும். (கஞ்சக்கருவி = உலோகத்தாலான இசைக்கருவி)

இசை இலக்கணம்

  • பண்களில் முதலில் தோன்றியது முல்லைப் பண் என்று இசை இலக்கணம் கூறும்.
  • இந்த முல்லைப் பண் அரிகாம்போதி என இன்று வழங்கப்படுகின்றது.
  • குறிஞ்சிப் பண் இன்று நடபைரவி என வழங்கப்படுகின்றது.
  • மருதப்பண் இன்று கரகரப்ரியா என வழங்கப்படுகின்றது.
  • நெய்தற் பண் இன்று தோடி என வழங்கப்படுகின்றது.

இசைக்கலை – தமிழிசை வரலாறு

  • ஒவ்வொரு இனத்திற்கும் உரியதாய் ஓர் இசைமரபு இருக்கும். தமிழுக்கும் உரிய இசை மரபு தமிழிசை ஆகும்
  • “இசையோடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்கிறார் தொல்காப்பியர்
  • பரிபாடல் தூக்கு, வண்ணம் குறித்துக் கூறுகிறது
  • கலித்தொகையின் தாழிசை இசைப்பாட்டே
  • பாணரும் கூத்தரும் இசை வளர்த்த கலைஞர்களே ஆவர்
  • சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை, கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, வேட்டுவரி, குன்றக்குரவை பகுதிகள் இசைப் பற்றியன
  • களப்பிரர் காலத்தில் காரைக்கால் அம்மையாரின் திருவண்ணத்தந்தாதி போன்ற பதிகங்கள் இசையுடன் பாடப்பட்டன
  • பல்லவர் காலத்தில் மூவர் முதலிகள் தமிழ் இசையை நன்கு வளர்த்தனர்
  • நம்மாழ்வாரின் திருவாய்மொழி இசையை மேலும் வளர்த்தது
  • கொங்குவேள் மாக்கதையாகிய பெருங்கதை யாழிசை குறித்த பல செய்திகளைக் கூறுகிறது. உதயணன் இசைப்பாடி வென்று சுரமஞ்சரியை மணக்கிறான்
  • முதலாம் மகேந்திரவர்மனின் குடிமியான்மலைக் கல்வெட்டு இசைக் கல்வெட்டாகும்
  • பெரியபுராணத்தில் ஆனாயநாயனார் புராணத்தில் குழலிசை பற்றியும் திருநீலகண்ட அனாரின் புராணத்தில் யாழ்த்திறம் பற்றியும் குறிப்புகள் உள்ளன
  • திருவிளையாடல் புராணங்களில் அமைந்துள்ள சாதாரி பாடின திருவிளையாடல் விறகு விற்ற திருவிளையாடல் ஆகிய இசை பற்றியன
  • அருணகிரிநாதரின் திருப்புகழ்ப்பாடல்கள் தாளக் கலைக்கு வேதமாகத் திகழ்கிறது
  • தமிழிசையும் ஆரிய சங்கீதமும் கலந்து கர்நாடக சங்கீதம் தோன்றியது என்பர்
  • பண்டைய தமிழிசை கருநாடக சங்கீதமாக வழங்குகிறது என்று தண்டபாணி தேசிகர் போன்றோர் கருதுகின்றனர்
  • ராகத்தை முதன்மையாககக் கொண்டது சங்கீதங்கள்
  • சங்கீதத்தோடு பாட்டும் இணைந்தது சாகித்தியங்கள் ஆகும்
  • சீர்காழியில் பிறந்த முத்துத்தாண்டவர், மாரிமுத்துப்பிள்ளை, அருணாச்சலக்கவிராயர் ஆகிய மூவரும் தமிழ் பாடி தமிழிசை வளர்த்தனர்
  • இம்மொவரையும் “தமிழ் மூவர்” என்றும் “சீர்காழி மூவர்” என்றும் “கருநாடக சங்கீத ஆதி மும்மூர்த்திகள்” என்றும் போற்றுவர்
  • இம்மூவரே பல்லவி – அனுபல்லவி – சரணம் என்ற அமைப்பில் பாடும் பாடல் மரபைத் தோற்றுவித்தனர்
  • இம்மரபைப் பின் வந்த சங்கீத மும்மூர்த்திகள் பின்பற்றினர்
  • நாயக்கர் காலத்தில் தியாகையர், சியாமாசாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் மூவரும் கீர்த்தனைகள் பாடினர்
  • ஆபிரகாம் பண்டிதர் “கருணாமிர்த சாகரம்” என்ற நூலை இயற்றினார்
  • இலங்கையில் பிறந்த விபுலானந்த அடிகள் “யாழ் நூல்” இயற்றினார். வழக்கொழிந்து போன யாழ குறித்து ஆராய்ந்ததோடு “யாழ்” கருவியை செய்து அதனை மீட்டியும் காட்டினார்
  • அண்ணாமலை செட்டியார் தமிழிசைச் சங்கம் வைத்துத் தமிழிசையைக் காத்தார்
  • தண்டபாணி தேசிகர், சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் தமிழ் இசைக்குப் பாடுபட்டனர்

இசைக்கலை – பண்ணும் பொழுதும்

  • பண்களைப் பொழுது அறிந்து இசைக்க வேண்டும் என்பர். இரவில் நட பைரவி, காலையில் கரகரப்ரியா, மாலையில் அரிகாம்போதி, முன்னிரவில் தோடி என்ற வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது.
  • ஒவ்வொரு உணர்ச்சி வெளிப்படும் செயலுக்கும் ஒரு பண் என்ற முறை இருந்திருக்கிறது.

பொழுது

பண்டைய தமிழ்ப் பண் இன்றைய பண்
காலை மருதப்பண்

கரகரப்பிரியா

மாலை

முல்லைப்பண் அரிகாம்போதி
முன்னிரவு நெய்தற்பண்

தோடி

பின்னிரவு

குறிஞ்சிப்பண்

நடபைரவி

 

 

 

கடித இலக்கியம்

Leave a Reply