சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் நந்திக் கலம்பகம்

நந்திக் கலம்பகம்

நந்திக் கலம்பகம்

நந்திக் கலம்பகம் நூல் குறிப்பு

  • நந்திவர்மனின் பெருமையைப் போற்றும் நூலாக, இது திகழ்கிறது.
  • பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற கலம்பகம் ஆதலின், நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது.
  • இந்நூலின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.
  • கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல் என்பர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கலம்பகம் குறிப்பு

  • கலம்பகம் என்பது, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • பலவகைப் பொருள்களைப் பற்றிப் பலவகைப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெறும் நூல் கலம்பகம் எனப்படும்.
  • கலம் + பகம் = கலம்பகம்.
  • கலம் – பன்னிரண்டு; பகம் ஆறு.
  • பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால் ( புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பாண், கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம் ) கலம்பகம் என்னும் பெயர் வந்தது எனவும் கூறுவர்.
  • கலம்பகம் பதினெட்டு உருபுகளை கொண்டது.

நந்திக் கலம்பகம்

பாடாண் திணை

  • நந்திக் கலம் பகம் நூலின், பாட்டுடைத் தலைவனான “நந்திவர்மனின்” வீரச் செயல்கள் போற்றப்படுவதால், நந்திக் கலம்பகம் நூலில் பயின்று வரும் திணை = பாடாண் திணை ஆகும்.

சொற்பொருள்

  • புயல் – மேகம்
  • பனண – மூங்கில்
  • பகரா – கொடுத்து
  • பொருது – மோதி
  • நிதி – செல்வம்
  • புனல் – நீர்
  • கவிகை – குடை

இலக்கணக்குறிப்பு

  • பொழிதருமணி – வினைத்தொகை
  • பணைதருபருமணி – வினைத்தொகை
  • வருபுனல் – வினைத்தொகை
  • நிதிதருகவிகை – வினைத்தொகை
  • இவை இவை – அடுக்குத் தொடர்

 

 

Leave a Reply