கு அழகிரிசாமி

கு அழகிரிசாமி

கு அழகிரிசாமி

கு. அழகிரிசாமி ஆசிரியர் குறிப்பு

  • காலம் = 23 ஜூன் 1923– 28 மார்ச் 1949
  • ஊர் = கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமம்
  • பெற்றோர் = குருசாமி-தாயம்மாள்

சிறப்புப் பெயர்

  • “சிறுகதைச் செம்மல்” என அழைக்கப்படுபவர் = கு.அழகிரிசாமி

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கு அழகிரிசாமி சிறுகதைகள்

  • உறக்கம் கொள்ளுமா (முதல் சிறுகதை)
  • ராஜா வந்திருக்கிறார்
  • குமாரபுரம் ஸ்டேசன்
  • ஞாபகார்த்தம்
  • இருவர் கண்ட ஒரே கனவு
  • காற்று
  • அழகம்மாள்
  • முருங்கைமர மோகினி
  • சுயரூபம்
  • அக்னி கவசம்
  • உலகம் யாருக்கு
  • பேதமை
  • சிரிக்கவில்லை
  • பெரிய மனுஷி
  • ஆதாரம் இருக்கிறதா
  • ஆண் மகன்
  • புது உலகம்
  • திரிபுரம்
  • இரு பெண்கள்
  • திரிவேணி

கு அழகிரிசாமி

கு அழகிரிசாமி சிறுகதை தொகுப்பு

  • கு.அழகிரிசாமி கதைகள் (முதல் சிறுகதை தொகுப்பு)
  • அன்பளிப்பு (சாகித்திய அகாதமி பரிசு)
  • சிரிக்கவில்லை
  • தவப்பயன்
  • வரப்பிரசாதம்
  • கவியும் காதலும்
  • இரு சகோதரர்கள்
  • காலகண்டி
  • செவிசாய்க்க ஒருவன்
  • புதிய ரோஜா
  • துறவு
  • கற்பக விருட்சம்

கு அழகிரிசாமி புதினங்கள்

  • டாக்டர் அனுராதா
  • தீராத விளையாட்டு
  • புது வீடு புது உலகம்
  • வாழ்க்கைப் பாதை

சிறுவர் இலக்கியம்

  • மூன்று பிள்ளைகள்
  • காளிவரம்

கு அழகிரிசாமி கடிதங்கள்

  • கு.அழகிரிசாமி கடிதங்கள்

மொழிபெயர்ப்புகள்

  • தர்மரட்சகன்
  • மாக்சிம் கார்க்கியின் நூல்கள்
  • லெனினுடன் சில நாட்கள்
  • அமெரிக்காவிலே
  • யுத்தம் வேண்டும்
  • விரோதி பணியாவிட்டால்
  • அக்பர்
  • பலநாட்டுச் சிறுகதைகள்
  • லாரன்ஸ் பின்யன்

நாடகங்கள்

  • கவிச்சக்கரவர்த்தி (தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு)
  • வஞ்ச மகள்

கட்டுரைத் தொகுப்பு

  • இலக்கியத்தேன்
  • இலக்கியச் சுவை
  • இலக்கிய அமுதம்
  • இலக்கிய விருந்து
  • தமிழ் தந்த கவியின்பம்
  • தமிழ் தந்த கவிச்செல்வம்
  • நான் கண்ட எழுத்தாளர்கள்
  • மண்ணுலகத்து ஓசைகள்

கு அழகிரிசாமி ஆசிரியர் குறிப்புக்கள்

  • இவர் கி.ராஜநாராயணனின் பால்ய நண்பர்.
  • இவரது முதல் சிறுகதை “உறக்கம் கொள்ளுமா” 1943 இல் ஆனந்த போதினியில் வெளிவந்தது.
  • இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு – “கு.அழகிரிசாமி கதைகள்” 1952 இல் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது.
  • 1952 முதல் 1957 வரை அவர் மலேசியாவில் வாழ்ந்த காலகட்டத்தில் மலேசிய இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கினார்.
  • மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர்.
  • கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் எனலாம்.
  • கடிதங்கள் எழுதுவதை ஒரு கடமையாகவே செய்துவந்தார். இவர் எழுதிய கடிதங்களை ‘கு.அழகிரிசாமி கடிதங்கள்’ என்ற தலைப்பில் கி.ராஜநாராயணன் ஒரு நூலாக வெளியிட்டார்.

கு அழகிரிசாமி

கு அழகிரிசாமி சிறப்புகள்

  • 1970 இல், அவரது “அன்பளிப்பு” என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக மரணத்திற்குப் பின் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் நபர் இவராவார்.
  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் சிறுகதை = கு.அழகிரிசாமியின் “அன்பளிப்பு”
  • ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவர்தான்.
  • “ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது கதை இந்திய மொழிகளிலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை.
  • புதுமைப்பித்தனுக்குப் பின் யதார்த்தவாதச் சிறுகதையில் முதன்மைச் சாதனையாளர் கு.அழகிரிசாமிதான் என்னும் விமர்சன மதிப்பீடு உண்டு.
  • சுந்தர ராமசாமி = கு.ப.ரா.வின் வலிமையான வாரிசு
  • இவர் எழுதிய ‘கவிச்சக்ரவர்த்தி’, ‘வஞ்ச மகள்’ ஆகிய நாடகங்கள் மலேசியாவில் உயர்நிலைப் பள்ளிகளிலும் பல்கலைக்கழகத்திலும் பாடப் புத்தகங்களாக இடம்பெற்றுள்ளன.

 

 

Leave a Reply