தொன்மைத் தமிழகம்

தொன்மைத் தமிழகம்

தொன்மைத் தமிழகம்

தொன்மைத் தமிழகம்
தொன்மைத் தமிழகம்

மனித நாகரிகத் தொட்டில்

  • முதல் மாந்தன் தோன்றிய இலெமூரியாவை, “மனித நாகரிகத் தொட்டில்” என்பர்.

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

  • தமிழகம் இன்று போல் இல்லாமல், குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது.
  • இச்செய்தியைப் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் தெளிவாக உணர்த்தும்.

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பாவேந்தர்

  • புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன், தமிழின் பழமை சிறப்பினைப் பெருமிதம் பொங்கி கூறுவது

திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும்

மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

தொன்மைத் தமிழகம்

  • தமிழினம் தனக்குவமையில்லா ஒரு தனி இனம்.
  • தமிழர் நாகரிகம் தன்னிகரில்லா நனி நாகரிகம்.
  • வினையை ஆடவர் உயிராகக் கருதினர்;
  • சான்றோனாதலே கல்வியின் முடிவெனப் போற்றினர்;
  • விருந்தெதிர் கொண்டு வாழ்ந்தனர்; புகழெனில் உயிரும் கொடுக்க முனைந்தனர்.

வாணிகம்

  • தமிழர்கள் அறத்தின் வழியே வாணிகம் செய்தார்கள்.
  • உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருள் ஈட்டினர்.
  • நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு முதலிய தானிய வகைகளையும், உளுந்து, கடலை, அவரை, துவரை, தட்டை, பச்சை, கொள்ளு, எள்ளு முதலிய பயறு வகைகளையும் தமிழர்கள் விற்றார்கள்.
தொன்மைத் தமிழகம்
தொன்மைத் தமிழகம்

கடல் வாணிகம்

  • கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில் தோகையும், சந்தனமும் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்தனர்.
  • கி. மு. பத்தாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில்தோகையும், வாசனைப் பொருள்களும் அனுப்பப்பட்டன.
  • தமிழர்கள் சாவகநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
  • பொன்னும், மணியும், முத்தும், துகிலும் கொண்டு கடல்கடந்து வாணிகம் செய்தனர்.

தனிநாயகம் அடிகளாரின் கூற்று

  • தமிழ்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது. இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வேறெங்குமில்லை என்கிறார் தனிநாயகம் அடிகளார்.

மொழித் தொன்மை

  • “தமிழ்கெழு கூடல்” என புறநானூறு கூறுகிறது.
  • “தமிழ்வேலி” எனப் பரிபாடல் கூறுகிறது.
  • “கூடலில் ஆய்ந்த ஒன்தீந் தமிழின்” என் மணிவாசகம் கூறுகிறது.
  • உலக நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் சிறந்த பங்களிப்பினைத் தமிழ்மொழி அளித்திருக்கிறது. உலகில் உள்ள உயரிய மனித இனத்தின் மரபுச் செல்வமாகத் தமிழ்மொழி விளங்குகிறது.

ஏற்றுமதியும் இறக்குமதியும்

  • தமிழர்களின் ஏற்றுமதி இறக்குமதி பற்றி குறிப்பிடும் நூல்கள், பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும்.
  • காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் பொருள்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததனைப் பட்டினப்பாலை அடிகள் கூறுகிறது.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

…          …   …     ….     ….

………. மயங்கிய நனந்தலை மறுகு.

இசைக்கலை

  • மனிதன், தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இசையே கருவியாயிற்று.
  • பண்டையக்காலத் தமிழர்களின் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.
  • தொல்காப்பியமும், சங்க இலக்கியமும், சிலப்பதிகாரமும் இசை மரபுகளை வெளிப்படுத்துகின்றன.
  • “நரம்பின் மறை” என்று தொல்காப்பியம் கூறுகிறது.
  • பாணன், பாடினி, கூத்தன், விறலி என்று இயலிசை நாடகக் கலைஞர்கள் இருந்தமையையும் அறிய முடிகிறது.
  • தமிழர் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்புவரைக்கும் இசையே முதன்மை பெறுகிறது.
  • ஒப்பாரி என்பது, இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று இறந்தவரைப் பற்றிப் பாடுவது.
  • இன்றைய கருநாடக இசைக்குத் தாய் நம் தமிழிசையே.
  • “பண்ணொடு தமிழொப்பாய்” என தேவாரம் கூறுகிறது.
  • தமிழர், ஐவகை நிலத்திற்கும் ஐந்திணைக்கும் ஏற்ற பண்ணிசை வகுத்தனர்; தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி எனப் பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இன்புற்றனர்.
  • குழலினிது யாழினிது என்று இசை பொழியும் கருவிகளை வள்ளுவம் குறிக்கின்றது.

உழவுத் தொழில்

  • பழந்தமிழகத்தில் உழுபவரே உயர்ந்தோராக மதிக்கப்பட்டனர்.
  • “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்கிறது திருக்குறள்.
  • “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” எகிறது புறநானூறு.
  • உழவுக்கு சிறப்பு பெற்ற நிலம் மருதநிலம்.
  • உழவுக்குச் சிறப்புப் பெற்ற மருதநிலம் வயலும் வயல் சார்ந்த இடமாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது.
  • மருத நிலத்தின் பெருமை கருதியே வேந்தனை முதன்மைப்படுத்தினர் தமிழர்.

பழந்தமிழர் வாழ்வு

  • அறத்தின் அடிப்படையில் தொடங்கியது தமிழர் வாழ்வு.
  • அறத்தின் வழியே பொருளைக் கண்டது; அவ்வறத்தின் வழியே இன்பத்தினை எட்டியது. அக்காலத்தே அறம், பொருள், இன்ப வாழ்வைத் தமிழர் பெற்றிருந்தனர்.
  • “களிறு எரிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” என்னும் புறப்பாடல், வீரத்தினை முதல் கடமையாக்கின்றது.
  • ஒக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர், பெண்களின் வீரத்தினை பாடியுள்ளார்.

 

Leave a Reply