10TH TAMIL மரபுத்தொடர்

10TH TAMIL மரபுத்தொடர்

10TH TAMIL மரபுத்தொடர்

10TH TAMIL மரபுத்தொடர்

  • நம் முன்னோர் தொன்றுதொட்டு எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு எனப்படும்.
  • மரபுச் சொற்றொடர்க்கு நேரடிப்பொருள் கொள்ளாது, அதன் உட்பொருளை அறிந்து தொடர்களில் அமைத்துப் பழகுதல்வேண்டும்.
  • எ.கா:
    • அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று சொன்ன காலம் மலையேறிவிட்டது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

மரபுத்தொடர்களுக்கான பொருளறிதல்

10TH TAMIL மரபுத்தொடர்

மரபுத்தொடர்பொருள்
ஆயிரங் காலத்துப் பயிர்நீண்ட காலத்திற்குரியது
எடுப்பார் கைப்பிள்ளைதன் சிந்தனையின்றிச் சொல்பவர் பேச்சைக் கேட்டு நடப்பவர்
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாதுபட்டறிவில்லாத படிப்பறிவு
அவலை நினைத்து உரலை இடித்தல்எண்ணமும் செயலும் ஒத்துவராமை
முதலைக்கண்ணீர்பொய்யழுகை
அவசரக்குடுக்கைஎண்ணித் துணியாதார்
ஆகாயத்தாமரைஇல்லாத ஒன்று
கம்பி நீட்டல்சொல்லிக்கொள்ளாமல் செல்லல்
தாளம்போடுதல்எதைச் சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளல்
கானல்நீர்இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இராதது
பஞ்சாய்ப் பறத்தல்அலைந்து திரிதல்
குட்டிச்சுவர்பயனின்றி இருத்தல்
கொட்டியளத்தல்மிகுதியாகப் பேசுதல்

 

 

Leave a Reply