முதல் முகலாயப் பேரரசர் பாபர்

முதல் முகலாயப் பேரரசர் பாபர்

முதல் முகலாயப் பேரரசர் பாபர்
முதல் முகலாயப் பேரரசர் பாபர்

முதல் முகலாயப் பேரரசர் பாபர்

  • பாபரின் முழுப்பெயர் = ஜாகிர்-உத்-தின் முகமது பாபர்.
  • தந்தை பெயர் = உமர் சேக் மிஸ்ரா.
  • பாபர் அவரது தந்தையின் வழியில் தைமூரின் ஐந்தாவது வழித்தோன்றல் மற்றும் தாய்வழியில் இருந்து செங்கிஸ் கானின் பதினான்காவது சந்ததியாவார்.
  • கி.பி.1494 இல் தனது 12 வது வயதில் பர்கானாவின் அரியணையை பெற்றார் பாபர்.
  • இவரின் தாய் நிலமான “சாமர்கண்டை” இவரால் கைப்பற்ற முடியவில்லை (சைபாணி கான் தடுத்து நிறுத்தினான்)
  • பாபர், துருக்கி இனத்தின் “சகத்தி” பிரிவை சேர்ந்தவர்.
  • பாபரின் நேர்மைக்காக அவரை “கலந்தர்” என்று அழைத்தனர்.
  • பாபர் முதன் முதலில் இந்தியா மீது படையெடுத்த ஆண்டு = கி.பி. 1518-19.
      • பாபர் முதன் முதலில் இந்தியா மீது படையெடுப்பு நடத்திய இடம் = பஜர்.
      • இப்போரில் தான் பாபர் முதன் முதலில் வெடிமருந்தினை பயன்படுத்தினார்.
      • பீரங்கிகளை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் = பாபர்.
  • பாபரின் இரண்டாவாது படையெடுப்பு “சியால்கோட்” மீது நடைபெற்றது (கி.பி.1520)
  • இந்நிலையில் பஞ்சாப்பின் ஆளுநராக இருந்த தௌலத் கான், பாபரை இந்தியா மீது படையெடுத்து வருமாறு கேட்டுக் கொண்டான்.
  • மேவாரை ஆண்ட “ரானா சங்கா”விடம் இருந்தும் பாபருக்கு இந்தியா மீது படையெடுக்க தகவல் அனுப்பப்பட்டது.
  • இந்தியா மீது படையெடுக்க பாபரை அழைத்தவர்கள் = பஞ்சாப் ஆளுநர் தௌலத் கான், இப்ராகிம் லோடியின் மாமன் ஆலம்கான் மற்றும் மேவாரின் ரானா சங்கா.
  • இதனை ஏற்று பாபர், அப்பொழுது டெல்லியை ஆண்ட “இப்ராகிம் லோடி” மீது படை எடுத்தார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

  • இந்தியாவில் பாபரின் ஐந்தாவது படையெடுப்பு = முதலாம் பானிபட் போர் ஆகும்.
  • பாபர் ஐந்து முறை இந்தியாவின் மீது படை எடுத்துள்ளார்.
  • இந்தியாவின் ஒரு பகுதியாக மீண்டும் “காபுல் மற்றும் காந்தகார்” சேர்க்கப்பட்டன.
  • குஷானர்களுக்கு பிறகு, “காபுல் மற்றும் காந்தகார்” பகுதிகளை இந்திய பேரரசில் இணைத்த அரசர் = பாபர்.
  • பாபரின் பீரங்கி படை மற்றும் காலாட்படைக்கு தலைமை தாங்கியவர்கள் = உஸ்தாத் அலி மற்றும் முஸ்தபா.
  • பாபர் கவிதைகள் எழுதும் திறன் மிக்கவர்.
  • பாபர் அறிந்த மொழிகள் = பாரசீகம் மற்றும் அரபி.
  • பாபரின் சுயசரிதை நூல் = துசுக்-இ-பாபரி (பாபர்நாமா) (துருக்கிய மொழியில் எழுதப்பட்டது)
  • பாபர் தனது “துசுக்-இ-பாபரி” நூலில் குறிப்பிட்டுள்ள இரண்டு இந்து அரசுகள் யாவை? = மேவார் மற்றும் விஜயநகரம் (மன்னர் கிருஷ்ணதேவராயர்).
  • பாபர் தனது சுயசரிதை நூலான “துசுக்-இ-பாபரி” நூலில் விலங்குகள், செடிகள், மரங்கள், மலர்கள், கனிகள் குறித்தும் பதிவு செய்துள்ளார்.
  • துசுக்-இ-பாபுரி பாரசீக மொழியில் (பாபர்நாமா என்று பெயர்) அப்துர் ரஹீம் கான்கானாவால் மொழிப் பெயர்க்கப்பட்டது.
  • துசுக்-இ-பாபரி நூலினை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்தவர் = மேடம் பெவ்ரிட்ஜ்.
  • பாபரின் மற்றொரு படைப்பு = ரிசல்-இ-உசாஸ் (பாபரின் கடிதங்கள்)
  • குவாலியர் மன்னர் ராஜா விக்ரமஜித்திடம் இருந்து கோஹினூர் வைரத்தை பாபர் பெற்று ஹுமாயூனுக்கு பரிசளித்தார்.
  • இந்தியாவில் சரியான வரிசை முறையில் தோட்டங்களை அமைக்கும் முறையை அறிமுகம் செய்தவர் = பாபர்.
  • பாபர் கி.பி.1530 இல் ஆக்ராவில் காலமானார்.
  • முதலில் அவரின் உடல் ஆக்ராவின் “ஆரம்பாக்” என்னும் இடத்தில புதைக்கப்பட்டது. பின்னர் அவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு “காபுலில்” புதைக்கப்பட்டது.
  • “மீர் பகி” என்பவர் “பாபர் மசூதியை” கட்டினார்.
  • முதல் முகலாயப் பேரரசர் பாபர்
பாபரின் முக்கிய போர்கள்
பாபரின் முக்கிய போர்கள்

முதலாம் பானிபட் போர்

  • நடைபெற்ற ஆண்டு = கி.பி.1526 (ஏப்ரல் 21)
  • பாபர், இப்ராஹீம் லோடியை தோற்கடித்தார்.
  • டெல்லி சுல்தான்களின் ஆட்சி முடிவிற்கு வந்தது.
  • முகலயார்களின் ஆட்சி துவங்கியது.
  • பாபரின் வெற்றிக்கு காரணமாக இருந்தவை = பீரங்கிப் படை.
  • பாபர் இப்போரில் பயன்படுத்திய முறைகள் = ருமி (அ) ஒட்டமான் முறை.
  • பாபர் பயன்படுத்திய யுக்தி முறை = துலுக்மா போர் முறை

கன்வா போர்

  • நடைபெற்ற ஆண்டு = கி.பி.1527
  • மேவாரின் “ரானா சங்காவை” (சங்கராம் சிங்) தோற்கடித்தார்.
  • இவ்வெற்றியின் காரணமாக “காஸி” என்ற பட்டதை சூட்டிக் கொண்டார் பாபர்.
  • “கன்வா போரினை” பாபர் “ஜிகாத்” என்று அறிவித்தார்.
  • முதல் முகலாயப் பேரரசர் பாபர்

சந்தேரி போர்

  • நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1528 (ஜனவரி 29)
  • மால்வாவின் ராஜபுத்திர மன்னன் “மேதினி ராயை” வீழ்த்தினார் பாபர்.

காக்ரா போர்

  • நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1529
  • இப்ராகிம் லோடியின் சகோதரர் “மகமுது லோடியின்” தலைமையிலான ஆப்கன் கூட்டுப் படைகளை பாபர் தோற்கடித்தார்.
பாபரின் முக்கிய பங்களிப்புகள் மற்றும் காலக்கோடு
பாபரின் முக்கிய பங்களிப்புகள் மற்றும் காலக்கோடு

பாபரின் முக்கிய பங்களிப்புகள்

  • வட இந்தியாவில் நடைபெற்ற முக்கிய போர்களில், வெடிமருந்து பீரங்கிகள் மற்றும் போர்க்கள உத்திகளைத் திறம்படப் பயன்படுத்தினார்.
  • ‘துலுங்மா’ (படையினரைப் பிரித்து பக்கவாட்டிலிருந்து தாக்கும் முறை) மற்றும் ‘அராபா’ (தேர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட தற்காப்பு ஏற்பாடு) ஆகிய போருத்திகளைப் பயன்படுத்தினார்.
  • சுயசரிதை: ‘பாபர்நாமா’ (துசுக்-இ-பாபுரி) – இது முதலில் சாகதாய் துருக்கிய மொழியில் எழுதப்பட்டது.
  • கவிதை, தோட்டங்கள், இயற்கை மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் மீதான ஆர்வத்திற்காகவும் பாபர் அறியப்பட்டார்.
  • பாரசீக மொழியில் ‘முபையன்’ (Mubaiyan) எனப்படும் புதிய கவிதை நடையை உருவாக்கினார்.
  • முதல் முகலாயப் பேரரசர் பாபர்

பட்டங்கள் மற்றும் கௌரவங்கள்

  • பாத்ஷா (Badshah): பாரம்பரிய தைமூரியப் பட்டமான ‘மிர்சா’வைக் கைவிட்டு, காபூலில் (1507) இப்பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
  • கலந்தர் (Qalandar): இவரது அளப்பரிய தாராள மனப்பான்மையைக் கண்டு உள்ளூர் மக்களால் வழங்கப்பட்ட பட்டம்; பானிபட் வெற்றிக்குப் பிறகு காபூலின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வெள்ளி நாணயங்களை வழங்கினார்.
  • காசி (Ghazi): கான்வா போரில் ராணா சங்காவைத் தோற்கடித்த பிறகு இப்பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
  • முதல் முகலாயப் பேரரசர் பாபர்

பாபர் காலக்கோடு

  • 14 பிப்ரவரி 1483 = பாபர் பிறந்த தினம்.
  • 1495 = பாபர் 12 வது வயதில் பர்கானாவின் அரியணை ஏறினார்.
  • 1505 = காபூலை பாபர் கைப்பற்றினார்.
  • 1505 = பாபர் முதன் முதலில் இந்தியாவின் மீது படையெடுப்பு மேற்கொண்ட ஆண்டு.
  • 1526 = முதலாம் பானிபட் போர். இப்ராகிம் லோடியை தோற்கடித்தார். முகலாய் ஆட்சி இந்தியாவில் துவக்கம்.
  • 1527 = கன்வா போர். ரானா சந்காவை தோற்கடித்தல்.
  • 1528 = சந்தேரி போர். சந்தேரி அரசர் மேதினிராயை தோற்கடித்தல்.
  • 1529 = காக்ரா போர். ஆப்கன் கூட்டுப்படையை தோற்கடித்தல்.
  • 1530 = பாபர் மரணம்.
  • முதல் முகலாயப் பேரரசர் பாபர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *