10TH TAMIL கோபல்லபுரத்து மக்கள்

10TH TAMIL கோபல்லபுரத்து மக்கள்

10TH TAMIL கோபல்லபுரத்து மக்கள்
10TH TAMIL கோபல்லபுரத்து மக்கள்

10TH TAMIL கோபல்லபுரத்து மக்கள்

  • சாகித்திய காதமி விருது பெற்ற புதினம் = கோபல்ல கிராமம்
  • இது 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கோபல்லபுரத்து மக்கள்

  • கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள்.
  • ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார்.
  • இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது இந்நூல்.

கி.ராஜநாராயணன்

  • கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் = கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
  • இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும்.
  • இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன
  • “கரிசல் வட்டாரச் சொல்லகராதி” உருவாக்கியவர் = கி.ராஜநாராயணன்
  • இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் ‘கரிசல் இலக்கியம்’ என்று அழைக்கப்படுகின்றன.
  • எழுத்துலகில் இவர் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்.

10TH TAMIL கோபல்லபுரத்து மக்கள்

கரிசல் இலக்கியம் என்றால் என்ன

  • கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம்.
  • காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை.
  • கி.ராஜநாராயணன் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் ‘கரிசல் இலக்கியம்’ என்று அழைக்கப்படுகின்றன.
  • ‘கரிசல் மண்ணின் படைப்பாளி” எனப்படுபவர் = கு. அழகிரிசாமி ஆவார்.
  • கரிசல் மண்ணின் படைப்பாளி கு. அழகிரிசாமி, கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர்.
  • கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன்.
  • அந்தக் கரிசல் இலக்கியப் பரம்பரை இன்றளவும் தொடர்கிறது பா.செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ.தர்மன், வேல ராமமூர்த்தி, இன்னும் பலரின் மூலமாக…

வட்டார வழக்கு சொற்கள்

  • பாச்சல் = பாத்தி
  • பதனம் = கவனமாக
  • நீத்துப்பாகம் = மேல்கஞ்சி
  • கடிச்சு குடித்தல் = வாய்வைத்துக் குடித்தல்
  • மகுளி = சோற்றுக் கஞ்சி
  • வரத்துக்காரன் = புதியவன்
  • சடைத்து புளித்து = சலிப்பு
  • அலுக்கம் = அழுத்தம் (அணுக்கம்)
  • தொலவட்டையில் = தொலைவில்

 

 

 

Leave a Reply