11 ஆம் வகுப்பு அழகர் கிள்ளைவிடு தூது

11 ஆம் வகுப்பு அழகர் கிள்ளைவிடு தூது
- அரசன் ஒருவன் மற்றோர் அரசனுக்குத் தூதுவரை அனுப்புவது பழங்காலம் முதல் இருந்துவரும் வழக்கமாகும்.
- அதியமானின் தூதராக ஒளவை சென்றதைப் புறநானூறு கூறுகிறது.
- மனிதர்களை மட்டுமன்றி உயிருள்ள, உயிரற்ற பிறபொருள்களையும் தூதனுப்புவதாகக் கற்பனை செய்து பாடும் வழக்கமும் அன்று இருந்தது.
- இதுவே பிற்காலத்தில் ஒரு சிற்றிலக்கிய வகையாக உருவாயிற்று.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தூது இலக்கியம் என்றால் என்ன
- தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- தலைவன் ஒருவனைக் கண்டு காதல் கொண்ட தலைவி ஒருத்தி தன் காதலையும் பிரிவாற்றாமையும் வெளிப்படுத்த விரும்பித் தலைவன்பால் தூது அனுப்புதல்.
|
பயிறருங் கலிவெண் பாவி னாலே உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும் சந்தியின் விடுத்தல் முந்துறு தூதெனப் பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே |
- தூதின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண விளக்க நூற்பா
- தூது வெண்டளை விரவிய கலிவென்பாவால் பாடப்படுவது = தூது இலக்கியம்.
- தூதாக செல்பவை = அன்னம், மயில், கிளி, குயில், வண்டு, நெஞ்சம், முகில், தென்றல், மான், தமிழ்.
அழகர் கிள்ளைவிடு தூது நூல் குறிப்பு
- திருமாலிருஞ்சோலை மலையில் கோவில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடியிருப்பது அழகர் கிள்ளை விடு தூது ஆகும்.
- இந்நூல் 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூலாகும்.
- இந்நூல் காப்பு வெண்பா ஒன்றையும் 239 கண்ணிகளையும் உடையது.
- பாட்டின் இரண்டு அடி கண்ணி எனப்படும்.
பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை ஆசிரியர் குறிப்பு
- சொக்கநாதப் பிள்ளை மரபினர் பலபட்டடைக்கணக்கு என்னும் ஒருவகைப் பணியைச் செய்து வந்தனர்.
- இவர் தந்தையார் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.
- நூல்கள் = மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடு தூது போன்றவை.
சொற்பொருள்
- அரி = சிங்கம்
- அரன் = சிவன்
- அவுணன் = இரணியன்
- காயம் = உடம்பு, உணவுப்பொருளோடு சேர்க்கும் பலவகைப் பொடி
- சேனை = சைனியம், சேனை (பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் நாவிலிடும் இனிப்பு)
- அருந்தி = உண்டு
- உருத்திரனாய் = நிலைபெற்ற வடிவை உடையவனாகி; உருத்திரன் என்ற கடவுளாகி
- பண்ணும் தொழில் = காத்தல் தொழில்
- நிலக்காப்பு = மண்ணைக் குழைத்திட்ட பொட்டு
- நிலத்தைக் காத்தல்
- படி = உலகம்
- வேதனை = துன்பத்தை, பிரமதேவனை
- பாதவத்தை = மருத மரங்களை
- பாதவத்தை ஆரக்கால்களையுடைய சக்கரம் பூட்டிய வண்டியை, சகடம்.
- ஒள்ளிழையார் = ஒள்ளிய ஆபரணத்தை அணிந்த மகளிர்
- பெண்ணை = பனைமரம், மகளிர் மடலேறுதல்
- பெண் = அகலிகை
- கவிக்கு = திருமழிசையாழ்வார் மாணாக்கரான கணிகண்ணர் பொருட்டு.
- பாரம் = பளு, சுமை
- நாரியோடு = சீதாபிராட்டியோடு.
- வன்கானகம் கடந்த = வலிய தண்டகாரணியத்தைக் கடந்து சென்ற
- வேட்டுவற்கு = சரனென்னும் வேடனுக்கு
- வேலை = கடல் (பாற்கடல்)
- உள்ளத்துள்ளான் = மிக அண்மையிலிருப்பவன்
- உலகுக்கு அப்பாலான் = மிகச் சேய்மையிலிருப்பவன்
இலக்கணக்குறிப்பு
- வன்காயம் = பண்புத்தொகை
- அரைத்திடும் சேனை = எதிர்காலப் பெயரெச்சம்
- தந்தபால், கடைந்த பாயலான் = இறந்தகாலப் பெயரெச்சங்கள்
- மலர்க்கால் = உவமைத்தொகை
- வன்கானகம் = பண்புத்தொகை