10 ஆம் வகுப்பு திருக்குறள்

10 ஆம் வகுப்பு திருக்குறள்

10 ஆம் வகுப்பு திருக்குறள்
10 ஆம் வகுப்பு திருக்குறள்

10 ஆம் வகுப்பு திருக்குறள்

  • திரு + குறள் = திருக்குறள்.
  • மேன்மையான கருத்துக்களைக் குறள் வெண்பாக்களால் கூறும் நூலாதலால், திருக்குறள் எனப்பெயர் பெற்றது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

திருக்குறள் நூல் குறிப்பு

  • நாடு, மொழி, இனம், மதம், காலம் ஆகியவற்றை கடந்து நிற்கும் நூல் திருக்குறள்.
  • உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலாகவும், ஒன்பது இயல்களையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது.
  • திருக்குறளின் பெருமையை பேசும் நூல் = திருவள்ளுவமாலை.
  • “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகம்” என்று கூறியவர் = பாரதிதாசன்.
  • “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” என்று கூறியவர் = பாவேந்தர் பாரதிதாசன்.
  • “வெல்லாத தில்லை திருவள்ளுவன் வாய் விளைத்தவற்றுள்” என்று கூறியவர் = பாவேந்தர் பாரதிதாசன்.
10 ஆம் வகுப்பு திருக்குறள்
10 ஆம் வகுப்பு திருக்குறள்

 

திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர்

  • மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம் 1812இல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.
10 ஆம் வகுப்பு திருக்குறள்
10 ஆம் வகுப்பு திருக்குறள்

 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறிப்பிடும் பாடல்

நாலடி  நான்மணி  நானாற்பது ஐந்திணை முப்

பால் கடுகம் கோவை பழமொழி – மாமூலம்

இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே

கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.

திருவள்ளுவர் ஆசிரியர் குறிப்பு

  • திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
  • தமிழுலகம் இவரை முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதார், பொய்யில்புலவர், பெருநாவலர் முதலிய பெயர்களால் போற்றுகின்றது.
  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பொது நெறி காட்டியவர்.
  • இவரின் காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டு என்பர்.
  • தமிழக அரசு தைத் திங்கள் இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாளாக அறிவித்து கொண்டாடுகிறது.

சொற்பொருள்

  • விழுப்பம் = சிறப்பு
  • ஓம்பப்படும் = காத்தல் வேண்டும்
  • பரிந்து = விரும்பி
  • தேரினும் = ஆராய்ந்து பார்த்தாலும்
  • குடிமை = உயர்குடி
  • இழுக்கம் = ஒழுக்கம் இல்லாதவர்
  • அழுக்காறு = பொறாமை
  • ஆக்கம் = செல்வம்
  • ஒல்கார் = விலகமாட்டார்
  • உரவோர் = மனவலிமை உடையோர்
  • ஏதம் = குற்றம்
  • எய்துவர் = அடைவர்
  • இடும்பை = துன்பம்
  • வித்து = விதை
  • ஒல்லாவே = இயலாவே
  • உலகம் = உயர்ந்தோர்
  • ஓட்ட = பொருந்த
  • ஒழுகல் = நடத்தல், வாழ்தல்
  • கூகை = கோட்டான்
  • இகல் = பகை
  • திரு = செல்வம்
  • தீராமை = நீங்காமை
  • பொருதகர் = ஆட்டுக்கடா
  • ஒள்ளியவர் = அறிவுடையவர்
  • செறுநர் = பகைவர்
  • சுமக்க = பணிக
  • கிழக்காந்தலை = தலைகீழ் (மாற்றம்)
  • எய்தற்கு = கிடைத்தற்கு
  • கூம்பும் = வாய்ப்பற்ற

இலக்கணக்குறிப்பு

  • ஒழுக்கம் = தொழிற்பெயர்
  • படும் = செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று
  • காக்க = வியங்கோள் வினைமுற்று
  • பரிந்து, தெரிந்து = வினையெச்சங்கள்
  • இழிந்த பிறப்பு = பெயரெச்சம்
  • கொளல் = அல் ஈற்றுத் தொழிற்பெயர்
  • உடையான் = வினையாலணையும் பெயர்
  • உரவோர் = வினையாலணையும் பெயர்
  • எய்தாப் பழி = ஈறு கேட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • எய்துவர் = பலர்பால் வினைமுற்று
  • நல்லொழுக்கம் = பண்புத்தொகை
  • சொலல் = தொழிற்பெயர்
  • அருவினை = பண்புத்தொகை
  • அறிந்து = வினையெச்சம்
  • கலங்காது = எதிர்மறை வினையெச்சம்

பிரித்து எழுதுதல்

  • பரிந்தோம்பி = பரிந்து + ஓம்பி
  • தெரிந்தோம்பி = தெரிந்து + ஓம்பி

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *