9TH TAMIL செய்தி

9TH TAMIL செய்தி

9TH TAMIL செய்தி
9TH TAMIL செய்தி

9TH TAMIL செய்தி

  • இசை மொழியைக் கடந்தது.
  • ஆரவாரங்கள், குழப்பங்கள், கூச்சல்கள், துயரங்கள் என எல்லாவற்றையும் கடந்த அமைதி வெளியில் மனங்களை கூடுவது = இசை.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கதை மாந்தர்கள்

  • நாதஸ்வர வித்துவானின் மகன் = தங்கவேல்.
  • சங்கீத கோஷ்டியின் தலைவர் = பிலிப் போல்ஸ்கா
  • வக்கீல் = மணி.
9TH TAMIL செய்தி
9TH TAMIL செய்தி

சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என புதுமைப்பித்தன் கூறுதல்

  • சிறுகதை என்றால் சிறிய கதை, கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல;
  • சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில் அதில் எடுத்தாளப்படும் பொருள் பற்றியது;
  • ஒரு சிறு சம்பவம், ஒரு மனோநிலை, மனநிலை ஆகியவற்றை மையமாக வைத்து எழுதப்படுவது; எடுத்து எழுதுவது.
  • சிறுகதையில் சம்பவமோ, நிகழ்ச்சியோ அல்லது எடுத்தாளப்படும் வேறு எதுவோ அது ஒன்றாக இருக்க வேண்டும்.
  • சிறுகதைப் பின்னலில் ஆரம்பம், மத்திய சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகள் உண்டு.
  • சாதாரணமான கதைகளில் இம்மூன்றும் படிப்படியாக வளர்ந்துகொண்டே போகும்.
  • சமீபத்தில் எழுதப்பட்ட அமெரிக்க சிறுகதைகளில் பழைய சம்பிரதாயமான ஆரம்பம், முடிவு என்ற இரண்டு பகுதிகளும் கிடையவே கிடையாது.
  • கதை திடீரென்று மத்திய சம்பவத்தின் உச்சஸ்தானத்தில் ஆரம்பிக்கிறது.
  • அதிலேயே முடிவடைகிறது.
  • இன்னும் வேறு ஒரு விதமான கதைகளும் உண்டு.
  • அவற்றில் முடிவு என்ற ஒன்று கிடையாது.
  • அதாவது கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்.

தி ஜானகிராமன் ஆசிரியர் குறிப்பு

  • தி. ஜானகிராமன் அவர்கள், தனது ஜப்பான் பயண அனுபவங்களை “உதயசூரியன்” என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார்.
  • இது 1967 இல் நூலாக வெளியிடப்பெற்றது.
  • ரோம், செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974இல் நூலாக வெளியிட்டார்.
  • தமது காவிரிக்கரை வழியான பயணத்தை நடந்தாய் வாழி காவேரி என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.
  • இவரது மற்றுமொரு பயணக்கட்டுரை, அடுத்த வீடு ஐம்பது மைல் என்பதாகும்.
  • தி. ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்.
  • உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.
  • வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன.
  • நாவல்களையும் நாடகங்களையும் இவர் படைத்துள்ளார்.
  • “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் தி. ஜானகிராமன்.
  • தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
  • செய்தி என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
  • மிகவும் உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும்போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.

தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை

  • தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை உ.வே. சாமிநாதர், மௌனி, தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், தஞ்சை இராமையா தாஸ், தஞ்சாவூர்க் கவிராயர் ஆகியோர்.

நாகசுரம் இசை கருவி

  • இந்திய இசையின் அழகான நுட்பங்களைத் தெளிவாக வாசித்துக் காட்டக்கூடிய இசைக் கருவிகளில் நாகசுரமும் ஒன்று.
  • மங்கலமான பல நிகழ்வுகளில் இக்கருவி இசைக்கப்படுகிறது.
  • இந்தச் சிறப்பான கருவி 600 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது.
  • 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னாகரம் என்னும் நூலில் இந்தக் கருவி கூறப்படவில்லை.
  • 13ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்தப் பதிவுகளிலும் இந்தக் கருவி பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
  • தமிழகப் பழைமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் இந்தக் கருவி காணப்படவில்லை.
  • ஆகவே இந்தக் கருவி 13ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டிருக்கலாம் என்று அறியமுடிகிறது.
  • நாகசுரம் என்ற பெயரே சரியானது.
  • நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது.
  • வெட்டப்பட்ட ஆச்சா மரத்துண்டுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்த பிறகே இக்கருவி உருவாக்கப்படுகிறது.
  • எனவே பழைய வீடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஆச்சா மரக்கட்டைகளைக் கொண்டே நாகசுரம் செய்யப்படுகிறது.
  • நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது.
  • சீவாளி, நாணல் என்ற புல் வகையைக்கொண்டு செய்யப்படுகிறது.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்

9TH TAMIL செய்தி
9TH TAMIL செய்தி
  • 1970 – அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி
  • 1979 – சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி. ஜானகிராமன்
  • 1987 – முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன்
  • 1996 – அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்
  • 2008 – மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி
  • 2010 – சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன்
  • 2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன்.

 

Leave a Reply