9TH TAMIL திருக்குறள்

9TH TAMIL திருக்குறள்

9TH TAMIL திருக்குறள்

9TH TAMIL திருக்குறள்

  • “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை” என்ற குறளில் பயின்று வரும் அணி = உவமையணி.
  • “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை” என்ற குறளில் பயின்று வரும் அணி = சொற்பொருள் பின்வருநிலையணி.
  • “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” என்ற குறளில் பயின்று வரும் அணி = சொற்பொருள் பின்வருநிலையணி.
  • “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்ற குறளில் பயின்று வரும் அணி = ஏகதேச உருவக அணி
  • “சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று” என்ற குறளில் பயின்று வரும் அணி = உவமை அணி

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • “அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றிய தூண்” என்னும் இக்குறட்பாவில் பயின்று வரும் அணி = ஏகதேச உருவக அணி.
  • “ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்” என்னும் இக்குறட்பாவில் பயின்று வரும் அணி = ஏகதேச உருவக அணி.
  • “உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து” என்னும் இக்குறட்பாவில் பயின்று வரும் அணி = ஏகதேச உருவக அணி.

திருக்குறள் நூல் குறிப்பு

  • உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல், திருக்குறள்.
  • இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப் படுத்தாத உலகப் பொதுமறை இந்நூல்.
  • இது முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
  • தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மரால் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது.
  • இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர்.
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூலைப் போற்றும் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.
  • உலகின் பல மொழிகளிலும் பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன், இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள்.
  • தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் இந்நூல்.
9TH TAMIL திருக்குறள்
9TH TAMIL திருக்குறள்

திருவள்ளுவர் ஆசிரியர் குறிப்பு

  • பிற அறநூல்களைப் போல் அல்லாமல் பொது அறம் பேணும் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
  • இவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் போன்ற சிறப்புப் பெயர்கள் உண்டு.

திருக்குறள் சிறப்புகள்

  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகர ஒற்றில் முடிகிறது.
  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் முழுமையாக மொழிபெயர்த்தவர் – ஜி.யு. போப்
  • திருக்குறள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply