வாழ்வை முழுமையாக்கும் கூறுகளுள் முதன்மையானது பயணம்.
சாலைவழிப் பயணம் மனதிற்கு இன்பத்தை அளிக்கக் கூடியது
சாலை விபத்து
உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட 2-வது பெரிய நாடு இந்தியா
இந்தியாவில் 55 இலட்சம் கி.மீ சாலைகள் உள்ளன
இந்தியாவில் 21 கோடிக்கும் அதிகமான ஊர்திகள் உள்ளன
ஒரு ஆண்டிற்கு ஏறக்குறைய 5 இலட்சம் விபத்துகள் நடக்கின்றன.
சாலை விபத்தில் தமிழகம்
இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது
இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் 15% விபத்துகள் தமிழகத்தில் தான் நிகழ்கிறது
தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துகளில் 35% இருசக்கர ஊர்திகளால் ஏற்படும் விபத்துகளாக உள்ளன.
சாலை விதிகள்
சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது தான் விபத்துகள் ஏற்படக் காரணங்களாக அமைகின்றன.
பள்ளி மாணவர்களிடம் சாலை விதிகள் மற்றும் விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
3 வகை குறியீடுகள்
சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினை சீர் செய்யவும் பாதுகாப்பாக பயணிக்கவும் உதவுகின்றன.
சாலைப் பாதுகாப்பு விதி குறியீடுகள் 3 வகைகளாக பிரிக்கலாம். அவை,
உத்தரவுக் குறியீடுகள்
எச்சரிக்கைக் குறியீடுகள்
தகவல் குறியீடுகள்
பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாடு
பாரிஸ் நகரத்தில் 1909 ஆம் ஆண்டு நடந்த முதல் “பன்னாட்டுச் சாலை அமைப்பு” (INTERNATIONAL ROAD CONGRESS) மாநாட்டில் ஒரு பொதுவான சாலை விதி வேண்டும் என்னும் உடன்படிக்கை ஏற்பட்டது.
மோட்டார் வாகனச் சட்டம் 2017
தமிழ்நாடு அரசு மோட்டார் வாகனச் சட்ட விதி 2017 கூறுவது,
18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கிநாளோ, விப்பதினை ஏற்படுத்தினாலோ அக்குலந்தைக்ளின் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்குதல் = 5000 ரூபாய் அல்லது 3 மாத சிறை அல்லது இரண்டும்
அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் ரூ. 5000 அபராதம்
மிகுவேகமாக ஊர்தியை இயக்கினால் = ரூ.5000 அபராதம்
இருவருக்கு மேல் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்தால் = ரூ. 2000 தண்டனை மற்றும் 3 மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் நீக்கம்
தலைக்கவசம் இல்லாமல் ஊர்தியை ஓட்டினால் = ரூ.1000 மற்றும் 3 மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் நீக்கம்
ஊர்திகளுக்கு காப்பீடு இல்லாமல் இயக்கினால் ரூ.2000 அபராதம்