10TH TAMIL பெருமாள் திருமொழி

10TH TAMIL பெருமாள் திருமொழி

10TH TAMIL பெருமாள் திருமொழி

10TH TAMIL பெருமாள் திருமொழி

  • மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
  • வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பெருமாள் திருமொழி நூல் குறிப்பு

  • நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் ஐந்தாவதாக வைக்கப்பட்டுள்ள திருமொழி = பெருமாள் திருமொழி.
  • இதன் ஆசிரியர் = குலசேகர ஆழ்வார்.
  • இவரின் காலம் = எட்டாம் நூற்றாண்டு.
  • பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை = 105 பாடல்கள்.
  • “வித்துவக் கோட்டம்மா” என குலசேகர ஆழ்வார் பாடியது = வித்துவக்கோட்டில் உள்ள “உய்யவந்த பெருமாளை” அன்னையாக உருவகப்படுத்தி பாடியுள்ளார்.

10TH TAMIL பெருமாள் திருமொழி

அருஞ்சொற்பொருள்

  • சுடினும் = சுட்டாலும்
  • மாளாத = தீராத
  • மாயம் = விளையாட்டு

வித்துவக்கோடு என்பது யாது

  • வித்துவக்கோடு என்பது கேரள மாநிலத்தின் பாலக்காடு அருகே உள்ள ஓர் ஊர் ஆகும்.
  • வித்துவக்கோடில் உள்ள இறைவன் = உய்யவந்த பெருமாள்.
  • குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள “உய்யவந்த பெருமாளை” அன்னையாக உருவகப்படுத்தி இப்பாடலை பாடியுள்ளார்.

பெருமாள் திருமொழியில் அறிவியல் கருத்து

  • “மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே” என்ற அறிவியல் கருத்தை கூறும் பாடல் = குலசேகர ஆழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியில் உள்ளது.

 

 

 

1 thought on “10TH TAMIL பெருமாள் திருமொழி”

Leave a Reply