9TH TAMIL சிறுபஞ்சமூலம்

9TH TAMIL சிறுபஞ்சமூலம்

9TH TAMIL சிறுபஞ்சமூலம்

9TH TAMIL சிறுபஞ்சமூலம்

  • மனித வாழ்வைச் செழுமையாக்குபவை அறப் பண்புகளே.
  • காலந்தோறும் தமிழில் அறக் கருத்துகளைக் கூறும் இலக்கியங்கள் தோன்றிவருகின்றன.
  • அவற்றுள் ஒன்றுதான் சிறுபஞ்சமூலம் என்னும் நூல்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அறிவுடையார் தாமே உணர்வர்

9TH TAMIL சிறுபஞ்சமூலம்
9TH TAMIL சிறுபஞ்சமூலம்

பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,

விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு.

–    காரியாசான்

  • “மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = சிறுபஞ்சமூலம்.
  • “மூவாது மூத்தவர், நூல் வல்லார்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = சிறுபஞ்சமூலம்.
  • “பூவாது காய்க்கும் மரம் உள” என்னும் சிறுபஞ்சமூலம் பாடலில் பயின்று வரும் அணி = உவமை அணி.

அருஞ்சொற்பொருள்

  • மூவாது = முதுமை அடையாமல்
  • நாறுவ = முளைப்ப
  • தாவா = கெடாதிருத்தல்

இலக்கணக்குறிப்பு

  • அறிவார், வல்லார் = வினையாலணையும் பெயர்கள்
  • விதையாமை, உரையாமை = எதிர்மறைத் தொழிற்பெயர்கள்
  • தாவா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

சிறுபஞ்சமூலம் நூல் குறிப்பு

9TH TAMIL சிறுபஞ்சமூலம்
9TH TAMIL சிறுபஞ்சமூலம்
  • தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின.
  • அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
  • அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம்.
  • ஐந்து சிறிய வேர்கள் என்பது இதன் பொருள்.
  • அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன.
  • இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது.
  • அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
  • இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக் காட்டுகின்றன.

காரியாசான் ஆசிரியர் குறிப்பு

  • சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.
  • காரி என்பது இயற்பெயர்.
  • ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர்.
  • மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

சாதனைக்கு வயது தடையன்று

9TH TAMIL சிறுபஞ்சமூலம்
9TH TAMIL சிறுபஞ்சமூலம்
  • 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்.
  • 11ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்.
  • 15ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர் ஹியூகோ.
  • 16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் மாவீரன் அலெக்சாண்டர்.
  • 17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் அறிவியலாளர் கலீலியோ.

Leave a Reply