9TH TAMIL வீட்டிற்கோர் புத்தகசாலை

9TH TAMIL வீட்டிற்கோர் புத்தகசாலை

9TH TAMIL வீட்டிற்கோர் புத்தகசாலை

9TH TAMIL வீட்டிற்கோர் புத்தகசாலை

  • “நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன்” என்று கூறியவர் = ஆபிரகாம் லிங்கன்.
  • சிந்தனையைத் தூண்டுவது கற்றல் மட்டுமன்று, நூல்களும் தான்.
  • நல்ல நண்பனைப் போன்ற நூலையும், நல்ல நூலைப் போன்ற நண்பனையும் தேடிப் பெற வேண்டும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

வீட்டிற்கோர் புத்தகசாலை

  • நாட்டுநிலை, உலகநிலைக்கு ஏற்ப வளர்ந்தாக வேண்டும்.
  • இதற்கு வீட்டுநிலை மாற வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியம், நாட்டுக்கோர் நல்லநிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்துக்கு அடிப்படை.
9TH TAMIL வீட்டிற்கோர் புத்தகசாலை
9TH TAMIL வீட்டிற்கோர் புத்தகசாலை

அண்ணாவின் கூற்றுகள்

  • மாநிலம் மதிக்கும் மனவளம் வேண்டும் என்றார் அண்ணா.
  • வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியத்தை நடைமுறைத் திட்டமாக்கி, சற்றுச் சிரமப்பட்டால், நமது நாட்டிலே நிச்சயமாக மனவளத்தைப் பெறமுடியும் என்றார் அண்ணா.
  • இப்போதுள்ளது உலகை நமது வீட்டுக்கு அழைத்துவந்து காட்டக்கூடிய காலம்.
  • பாமர மக்கள் பாராளும் காலம் இது என்றார் அண்ணா.
  • மனவளத்தை அதிகப்படுத்தும் மார்க்கம் முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம் இது என்றார் அண்ணா.
  • வீட்டிற்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும் என்றவர் அண்ணா.
  • வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருள்களுக்கும் போக போக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி, புத்தகசாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும்.
  • வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்படவேண்டும் என்றவர் பேரறிஞர் அண்ணா!
  • உணவு, உடை, அடிப்படைத் தேவை – அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகசாலைக்குத் தரப்படவேண்டும் என்றவர் பேரறிஞர் அண்ணா.
  • வீட்டிற்கோர் புத்தகசாலை அமைக்க வேண்டும் என்றவர் அண்ணா.
  • மக்களின் மனத்திலே உலக அறிவு புக வழிசெய்ய வேண்டும்.
  • உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்.
  • பூகோள, சரித்திர ஏடுகள் இருக்க வேண்டும்.
  • நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமாக இருக்கவேண்டும்.
  • நமது தமிழகத்தின் தனிச்சிறப்பு என்று கூறத்தகும் சங்க இலக்கியச் சாரத்தைச் சாமானியரும் அறிந்து வாசிக்கக் கூடிய முறையில் தீட்டப்பட்ட ஏடுகள் இருக்கவேண்டும்.
  • குறைந்தபட்சம் மக்கள் முன்னேற்றத்துக்கும் வாழ்க்கை வசதிக்கும் உதவும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தகவலைத் தெரிவிக்கும் நூல்கள் இருக்க வேண்டும்.
  • நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள், மக்களின் மனமாசு துடைத்தவர்கள், தொலைதேசங்களைக் கண்டவர்கள், வீரர்கள், விவேகிகள் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்பு ஏடுகள் இருக்க வேண்டும்.
9TH TAMIL வீட்டிற்கோர் புத்தகசாலை
9TH TAMIL வீட்டிற்கோர் புத்தகசாலை

அண்ணா சிறப்புகள்

  • 2009ஆம் ஆண்டு நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
  • 2010ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.
9TH TAMIL வீட்டிற்கோர் புத்தகசாலை
9TH TAMIL வீட்டிற்கோர் புத்தகசாலை

அண்ணாவின் பொன்மொழிகள்

  • மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று கூறியவர் பேரறிஞர் அண்ணா.
  • கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும் என்றவர் பேரறிஞர் அண்ணா.
  • எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றவர் பேரறிஞர் அண்ணா.
  • சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.
  • மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை என்றவர் பேரறிஞர் அண்ணா.
  • நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும் என்றவர் பேரறிஞர் அண்ணா
  • இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை என்றவர் பேரறிஞர் அண்ணா
  • இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள் என்றவர் பேரறிஞர் அண்ணா
  • நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றவர் பேரறிஞர் அண்ணா

பேரறிஞர் அண்ணா குறிப்புகள்

  • வீட்டிற்கோர் புத்தகசாலை என்னும் இப்பகுதி பேரறிஞர் அண்ணாவின் வானொலி உரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
  • இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கியவர்.
  • எழுத்தாளரான அண்ணாவைத் ‘தென்னகத்துப் பெர்னாட்ஷா’ என்று அழைத்தனர்.
  • “தென்னகத்துப் பெர்னாட்ஷா” என்று அழைக்கப்படுபவர் = பேரறிஞர் அண்ணா.
  • சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்பஒளி வரை பல படைப்புகளைத் தந்தவர்.
  • அவரது பல படைப்புகள் திரைப்படங்களாயின.
  • தம்முடைய திராவிடச் சீர்திருத்தக் கருத்துகளை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன்முதலில் பரப்பியவர் இவரே.
  • 1935இல் சென்னை, பெத்தநாயக்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.
  • ஹோம்ரூல், ஹோம்லேண்ட், நம்நாடு, திராவிடநாடு, மாலைமணி, காஞ்சி போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் இருந்தார்.
  • பேரறிஞர் அண்ணா பணியாற்றிய இதழ்கள் = ஹோம்ரூல், ஹோம்லேண்ட், நம்நாடு, திராவிடநாடு, மாலைமணி, காஞ்சி போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் இருந்தார்.
  • முதலமைச்சராகப் பொறுப்பை ஏற்றதும் இருமொழிச் சட்டத்தை உருவாக்கினார்.
  • சென்னை மாகாணத்தைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
  • “அண்ணாவின் சிறுகதைத் திறன்” என்ற நூலின் ஆசிரியர் = முனைவர் பெ. குமார்.

புகழ்பெற்ற நூலகங்கள்

  • ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன.
  • ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் = தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
  • உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமாரா நூலகமே. இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது.
  • இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது, திருவனந்தபுரம் நடுவண் நூலகம்.
  • இந்தியாவின் முதல் நூலகம் = திருவனந்தபுரம் நடுவண் நூலகம்.
  • கொல்கத்தாவில் 1836ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப் பெரிய நூலகமாகும். இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது.
  • இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நூலகம் = கொல்கத்தா தேசிய நூலகம்.
  • உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்.
  • உலகின் மிகப்பெரிய நூலகம் = அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்.

உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே

  • “உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே” என்று கூறியவர் = கதே.

தேசிய நூலக நாள்

  • தேசிய நூலக தினம் = ஆகஸ்ட் 9 ஆம் நாள்
  • சீர்காழி இரா. அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் ஒன்பதாம் நாள், தேசிய நூலக நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்திய நூலகத் தந்தை

  • “இந்திய நூலகத் தந்தை” என அழைக்கப்படுபவர் = சீர்காழி இரா. அரங்கநாதன்.

 

Leave a Reply