SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
- இலக்கியங்களில் மேலாண் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சொல்லப்பட்ட மேலான் கருத்துகளையும் நிருவாக நெறிகளையும் நாம் உணரலாம்.
- நாட்டின் முன்னேற்றம் மேலாண் சிந்தனையில் தொடங்குகிறது
நேர மேலாண்மை
- மனிதனுடைய மேலாண்மைப் பண்பு, அவன் ஓய்வு நேரத்தை உருவாக்கத் தொடங்கிய போது உருவானது.
- திருவள்ளுவர், ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும் என்று கூறுகிறார்
மடியின்மை
- ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு “மடியின்மை” என்னும் அதிகாரத்தின் வழியே திருவள்ளுவர் அட்டவனையை தருகிறார்.
|
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின் |
- புறநானூற்றின் இறுதிப் பாடலில் கோவூர்கிழார், சோழன் நலங்கிள்ளியைப் பற்றி பாடும் பொழுது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனைப் பற்றிப் பேசி வியக்கிறார்.
|
பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகு கக்கும் உயர் கொள்கை கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே |
வேளாண் மேலாண்மை
- கம்பராமாயணத்தில், தசரதன் தன் நாட்டை மிகவும் செப்பமாகவும், நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்கிறார் கம்பர்.
|
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய் எனக் இனிதுஅரசு செய்கின்றான் – (பாலகாண்டம் – 179) |
- மனமே ஒரு வேளாண்மைக்கு உட்பட்ட மேலாண்மை உடையது ஆகும்.
|
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக வன்சொல் கலைக்கட்டு வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர் பைன்கூழ் சிறுகாலைச் செய் – (அறநெறிச்சாரம் – 16) |
கடலுக்கான வேறு பெயர்கள்
- அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆழி, ஈண்டுநீர், உவரி, திரை, பானல், பெருநீர், சுழி, நீராழி, புணர்ப்பு, தென்நீர், பௌவம், முந்நீர், வரி, ஓதம், வலயம்
சிலப்பதிகாரம்
- உரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது
பட்டினப்பாலை
- பட்டினப்பாலையில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றிய குறிப்பு உள்ளது.
|
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் – பட்டினப்பாலை |
- காவிரிப்பூம்பட்டினத்தில் கடல் வழியே வேறு நாடுகளில் இருந்து மரக்கலங்களில் வந்த பொருட்களை இறக்குமதி செய்தும், நிலத்திலிருந்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாக அனுப்பவும் கணக்கிட இயலாத பொருள்கள் பண்டகசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
|
வான் முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும் மாறி பெய்யும் பருவம் போல நீரினின்றும் நிலத்து ஏற்றவும் நிலத்தினின்று நீர்ப் பரப்பவும் அளந்து அறியாப் பல பண்டம் வரம்பு அறியாமை வந்து ஈண்டி” – (பட்டினப்பாலை – 126-132) |
ஸ்ட்ரேபோ
- சங்க இலக்கியங்களின் வாயிலாக முசிறி துறைமுகமாக, யவனர்களின் கப்பல்கள் நிறுத்தப்படும் இடமாக இருந்ததை அறிய முடிகிறது.
- ஸ்ட்ரேபோ என்பவர், அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று கி.மு. 20ஆம் ஆண்டு சந்தித்ததைப் பற்றித் தெரிவிக்கிறார்
புறநானூறு
- புறநானூற்றில் 56ஆம் பாடலில் யவனரது கப்பல்கள் பற்றிய குறிப்பு இடம் பெறுகிறது.
பதிற்றுப்பத்து
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாகக் கட்டுப்படுத்தினான், பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டு வந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான் என்ற செய்திகள் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளன.
நிதி மேலாண்மை
- ‘டைமன்’ என்பவர் பற்றிய ஷேக்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கம் ஆகும்
ஒளவையாரின் நல்வழி
- ஔவையார் நல்வழியில் நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்
|
ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு – நல்வழி |
ஹிராக்ளிடஸ்
- 126 ஒற்றை வரிகளில் எழுதிய ‘துளிகள்’ (fragments) என்னும் நூலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் ஹிராக்ளிடஸ். அவர் கிரேக்க நாட்டவர்.
- ‘இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது’ என்று அவர் சொன்ன கோட்பாடு வாழ்வுக்கும் பொருந்தும், வர்த்தகத்திற்கும் பொருந்தும்
- அவர் ‘ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது’ என்று குறிப்பிடுகிறார்
வெ இறையன்பு
- இப்பாடப்பகுதி வெ. இறையன்பு எழுதிய ‘இலக்கியத்தில் மேலாண்மை ‘ என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி வரும் இவர், இ.ஆ.ப. தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர்
- இவரின் நூல்கள் = தமிழில் வாய்க்கால் மீன்கள், ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா.
- இவர் எழுதிய ‘வாய்க்கால் மீன்கள்’ என்னும் கவிதை நூல், 1995ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது
- SAMACHEER KALVI 12TH TAMIL வை.மு.கோதைநாயகி
- SAMACHEER KALVI 12TH TAMIL காப்பிய இலக்கணம்
- SAMACHEER KALVI 12TH TAMIL நடிகர் திலகம்
- SAMACHEER KALVI 12TH TAMIL மெய்ப்பாட்டியல்
- SAMACHEER KALVI 12TH TAMIL சிலப்பதிகாரம்
- SAMACHEER KALVI 12TH TAMIL கவிதைகள்
- SAMACHEER KALVI 12TH TAMIL திரைமொழி
- SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
- SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
- SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
- SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
- SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
- SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
