TNPSC

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தனிப்பாடல்

தனிப்பாடல் “இம்பர்வான் எல்லைஇரா மனையே பாடி என்கொனர்ந்தாய் பாணாநீ என்றால் பாணி வம்பதாம்க ளபமென்றேன் பூசும் என்றாள் மாதங்கம் என்றேன்யாம் வாழ்ந்தே மென்றாள் பம்புசீர் வேழமென்றேன் தின்னு மென்றாள் பகடென்றான் உழுமென்றாள் பழனத் தன்னைக் கம்பமா என்றேன்நற் களியாம் என்றாள் கைம்மாஎன் றேன்சும்மா கலங்கி னாளே!” – அந்தக்கவி வீரராகவர் சொற்பொருள்: களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா – யானை களபம் – சந்தனம் மாதங்கம் – பொன் வேழம் – கரும்பு பகடு […]

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தனிப்பாடல் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் கடவுள் வாழ்த்து

 கடவுள் வாழ்த்து முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே – தாயுமானவர் சொற்பொருள்: சுடர் – ஒளி ஆனந்தம் – மகிழ்ச்சி பராபரம் – மேலான பொருள், இறைவன் ஆசிரியர் குறிப்பு: பெயர் = தாயுமானவர் பெயர் காரணம் = திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது. பெற்றோர் = கேடிலியப்பர்

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் கடவுள் வாழ்த்து Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஜி.யு.போப்

ஜி.யு.போப் பிறப்பு: பெயர் = ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப் பிறந்த ஊர் = பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு பிறப்பு = கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி பெற்றோர் = ஜான் போப், கேதரின் போப் ஹென்றி: போப்பின் தமையனார் ஹென்றி என்பவர், தமிழகத்தில் கிறித்துவமதத்தைப் பரப்பும் சமய குருவாகப் பணியாற்றினார். அவரைப்போன்று பணியாற்ற விரும்பி, தமது 19வது வயதில் தமிழகம் வந்தார். அவர் பாய்மரக் கப்பலில் தமிழகம் வந்து

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஜி.யு.போப் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ் வளர்த்த சான்றோர்

தமிழ் வளர்த்த சான்றோர் தமிழ் வளர்த்த சான்றோர்: புதுக்கவிதைக்கு = பாரதியார் சமுதாய புரட்சிக்கு = பாரதிதாசன் பொதுவுடைமை = திரு.வி.க தனித்தமிழுக்கு = மறைமலையடிகள் பேச்சுக்கலை = அறிஞர் அண்ணா சிறுகதை = புதுமைப்பித்தன் வீரமாமுனிவர்(1680 – 1747): இவர் இத்தாலி நாட்டில் பிறந்தார். இவரின் இயற்பெயர் “கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி”. இவர் தம் முப்பதாம் வயதில் தமிழகம் வந்தார். தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை “தைரியநாதன்” என மாற்றிகொண்டார். பின்னர்

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ் வளர்த்த சான்றோர் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள் சொற்பொருள்: வினை – செயல் காப்பு – காவல் நீரவர் – அறிவுடையார் கேண்மை – நட்பு நவில்தொறும் – கற்கக்கற்க நயம் – இன்பம் நகுதல் – சிரித்தல் கிழமை – உரிமை அகம் – உள்ளம் ஆறு – நல்வழி உய்த்து – செலுத்தி உடுக்கை – ஆடை கொட்பின்றி – வேறுபாடு இல்லாமல் புனைதல் – புகழ்தல் ஆசிரியர் குறிப்பு: பெயர் = திருவள்ளுவர் வேறுபெயர்கள் = முதற்பாவலர், பொய்யில் புலவர்,

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேம்பாவணி

தேம்பாவணி சொற்பொருள்: நகை – புன்னகை முகை – மொட்டு மேனி – உடல் ஆசிரியர் குறிப்பு: பெயர் = வீரமாமுனிவர் இயற்பெயர் = கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி பெற்றோர் = கொண்டல் போபெஸ்கி, எலிசபெத் பிறந்த ஊர் = இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன் அறிந்த மொழிகள் = இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் தமிழ்க் கற்பித்தவர் = மதுரைச் சுப்ரதீபக் கவிராயர் சிறப்பு = முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ்

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேம்பாவணி Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் விக்ரமசோழன் உலா

விக்ரமசோழன் உலா பாடலின் பொருள்: குடகு மலையை ஊடறுத்து அலைமோதும் காவிரியைத் தந்தவன் = கவேரன். தெளிந்த அருவியை உடைய மேரு மலையின் உச்சியில் புலிக்கொடி நாட்டி, பொன்னியாகிய காவிரியின் இருகரைகளையும் உயர்த்திக் கட்டியவன் = சோழன் கரிகாலன். பொய்கையாரின் களவழி நாற்பது பாடலுக்குப் பரிசாக் சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சிறைவீடு செய்தவன் = சோழன் செங்கணான். போரில் பெருமையாக எண்ணத்தக்க விழுப்புண்கள் 96ம் பெற்றவன் = சோழன் விசயாலயன். சிவபெருமான் ஆடலரசாய்க் காட்சிதரும் தில்லைக்குப் பொன்வேய்ந்தவன்

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் விக்ரமசோழன் உலா Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருமந்திரம்

திருமந்திரம் உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே -திருமூலர் சொற்பொருள்: திடம் – உறுதி மெய்ஞ்ஞானம் – மெய்யறிவு உபாயம் – வழிவகை ஆசிரியர் குறிப்பு: பெயர் – மூலன் என்னும் பெயர், திரு என்னும் பெயரடை பெற்று, அத்துடன் அர் என்னும் மரியாதைப்பன்மையும் பெற்று, திருமூலர் என ஆயிற்று. காலம் – ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி. நூல் குறிப்பு: சைவத்

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருமந்திரம் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாடகக்கலை

நாடகக்கலை நாடகம் – பொருள் விளக்கம்: நாடு + அகம் = நாடகம் நாட்டை அகத்தில் கொண்டது நாடகம். நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால், நாடகம் எனப் பெயர் பெற்றது. நாடகம் என்பது உலக நிகழ்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது முற்றிலும் பொருந்தும். கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர். இதற்குக் கூத்துக்கலை என்னும் பெயர் உண்டு. நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்: தமிழின் தொன்மையான கலை

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாடகக்கலை Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரு.வி.க

திரு.வி.க பிறப்பும் கல்வியும்: சென்னைக்கு அருகே துள்ளம் என்னும் ஊரில் விருதாச்சலனார் – சினம்மையாரின் மகனாக 26.08.1883ஆம் நாள் பிறந்தார். சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் படித்தார். கதிரைவேலனாரிடம் தமிழ் இலக்கியங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் படித்தார். தமிழ் பற்று: “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதை முழு மூச்சாக கொண்டார். வடமொழிச் சொற்களை கலவாமல் தூய தமிழிலே எழுதவும் பேசவும் செய்தார். பிறமொழியறிவு: தமிழை வளர்க்க பிற மொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளல்ல என்றார்.

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரு.வி.க Read More »