8TH TAMIL சொற்பூங்கா

8TH TAMIL சொற்பூங்கா

8TH TAMIL சொற்பூங்கா
8TH TAMIL சொற்பூங்கா

8TH TAMIL சொற்பூங்கா

  • மொழி வளரும் தன்மை உடையது.
  • ஒவ்வொரு மொழியிலும் காலந்தோறும் புதிது புதிதாக இலக்கியங்கள் தோன்றுவது போலவே புதிய சொற்களும் தோன்றுகின்றன.
  • மொழி வளர்ச்சியின் அடையாளம் எனப்படுவது = ஓர் அடிச்சொல்லில் இருந்து பல சொற்கள் கிளைத்துப் பெருகுதல் ஆகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தமிழில் சொல் என்பதன் பொருள்

  • தமிழில் “சொல்” என்பதற்கு “நெல்” என்ற பொருளும் உண்டு.
  • “சொன்றி, சோறு” என்பவை அவ்வழியில் வந்தவை.
  • “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று கூறியவர் = தொல்காப்பியர்.

மொழி வகைகள்

  • தமிழில் “மொழி” என்பதற்கு “சொல்” என்ற பொருளும் உண்டு.
  • மொழியை (சொல்லை) மூன்று வகையாக பிரிப்பர். அவை,
    • ஓரெழுத்து மொழி
    • ஈரெழுத்து மொழி
    • இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களை உடைய மொழி
8TH TAMIL சொற்பூங்கா
8TH TAMIL சொற்பூங்கா

தொல்காப்பியர் கூறும் ஓரெழுத்து ஒரு மொழி

  • “நெட்டெழுத்து (நெடில்) ஏழே ஓரெழுத்து ஒருமொழி” என்று கூறியவர் = தொல்காப்பியர்.
  • குற்றெழுத்து (குறில்) ஒன்று தனித்து நின்று சொல் ஆவது இல்லை என்பதனை “குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே” என்கிறார் தொல்காப்பியர்.
  • தொல்காப்பியர் கூறும் ஓரெழுத்து ஒருமொழி மொத்தம் = ஏழு.

நன்னூலார் கூறும் ஓரெழுத்து ஒருமொழி

  • நன்னூலார் கூறும் ஓரெழுத்து ஒருமொழி மொத்தம் = 42.
  • நன்னூலார் கூறும் ஓரெழுத்து ஒருமொழி 42 இல் = நெடில் எழுத்துக்கள் 40, குறில் எழுத்துக்கள் 2.

40 நெடில் எழுத்துக்கள் + 2 குறில் எழுதுக்கள் (நொ, து) = ஓரெழுத்து ஒருமொழி (42)

  • நன்னூலார் “நொ, து” என்னும் “உயிர்மெய் எழுத்துக்களும்” (குறில்) ஓரெழுத்து ஒருமொளியாக வரும் என்கிறார்.

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்

8TH TAMIL சொற்பூங்கா
8TH TAMIL சொற்பூங்கா

எழுத்து வரிசை

மொத்த எழுத்துக்கள் ஓரெழுத்து ஒருமொழி சொற்கள்
உயிர் எழுத்து 6

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ

‘ம’கர வரிசை

6 மா, மீ, மூ, மே, மை, மோ
‘த’கர வரிசை 5

தா தீ, தூ, தே, தை

‘ப’கர வரிசை

5 பா, பூ, பே, பை, போ
‘ந’கர வரிசை 5

நா, நீ, நே, நை, நோ

‘க’கர வரிசை

4 கா, கூ, கை, கோ
‘ச’கர வரிசை 4

சா, சீ, சே, சோ

‘வ’கர வரிசை

4 வா, வீ, வை, வௌ
‘ய’கர வரிசை 1

யா

குறில் எழுத்து

2

நொ, து

கலைச்சொல் உருவாக்கம்

  • பூ, கா ஆகிய ஓரெழுத்து ஒருமொழி சொற்கள் இணைந்து “பூங்கா” என்ற சொல் உருவாகியது.
  • “யா” என்ற எழுத்துக்கு “வினா” என்று பொருள்.
  • ஆ, மா ஆகிய சொற்கள் இணைந்து “ஆமா” என்ற சொல் உருவானது.
  • காட்டுப் பசுவிற்கு, “ஆமா” என்ற பெயரும் உண்டு.
  • “மா” என்ற எழுத்துக்கு “விலங்கு” என்ற பொருளும் உண்டு.

ஈ என்னும் பொதுப்பெயர்

  • ஈ என்னும் பொதுப் பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பை காட்டி நிற்கிறது.
  • ஈ என்பதன் பொருள் = ஈக (வழங்குதல்)

ஏகாரம்

  • “ஏய்” என்பதன் பொருள் = என்னோடு கூடு, பொருந்து, சேர்.
  • கூர்மையான முல்லை உடைய முள்ளம்பன்றியின் பழைய பெயர் = எய்ப்பன்றி.

செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார்

  • செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா. இளங்குமரனார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • “செந்தமிழ் அந்தணர்” என அழைக்கப்படுபவர் = இரா. இளங்குமரனார்.
  • நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
  • இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
  • தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.
  • திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார்.
  • இவரது தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள் என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்து இங்குத் தரப்பட்டுள்ளன.
  • “தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்” என்னும் நூலை எழுதியவர் = இரா. இளங்குமரனார்.

 

 

 

Leave a Reply