9TH TAMIL ஒளியின் அழைப்பு

9TH TAMIL ஒளியின் அழைப்பு

9TH TAMIL ஒளியின் அழைப்பு

9TH TAMIL ஒளியின் அழைப்பு

  • புவிஈர்ப்பு விசையை எதிர்த்து விண்ணோக்கி விரைவது தாவரத்தின் தனித்துவம்.
  • வேர் வளர்க்கும் கதிரவன் ஒளியும் காற்றும் நீரும் பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும் பாறையும் என எல்லாம் இணைந்தே இயற்கையைப் போற்றி வளர்க்கின்றன.
  • போட்டியின்றி வாழ்க்கையில்லை; வலிகளின்றி வெற்றியில்லை.
  • ஒன்றையொன்று அடுத்தும் படுத்தும் மென்மேலும் முன்னேறுவது இயற்கைக்கு மட்டுமன்று, வாழ்க்கைக்கும்தான்!

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • விண் = வானம்
  • ரவி = கதிரவன்
  • கமுகு = பாக்கு

இலக்கணக்குறிப்பு

  • பிறவிஇருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர் = உருவகங்கள்.
9TH TAMIL ஒளியின் அழைப்பு
9TH TAMIL ஒளியின் அழைப்பு

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

  • “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலை எழுதியவர் = வல்லிக்கண்ணன்.
  • வல்லிக்கண்ணன் தனது “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலில் பிச்சமூர்த்தி கவிதைகளை பற்றி, “இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்” என்று கூறியுள்ளார்.

ந பிச்சமூர்த்தி ஆசிரியர் குறிப்பு

9TH TAMIL ஒளியின் அழைப்பு
9TH TAMIL ஒளியின் அழைப்பு
  • புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.
  • பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந. பிச்சமூர்த்தி ஈடுபட்டார்.
  • எனவே, அவர் “புதுக்கவிதையின் தந்தை” என்று போற்றப்படுகிறார்.
  • புதுக்கவிதையின் தந்தை எனப்படுபவர் = ந.பிச்சமூர்த்தி.
  • புதுக்கவிதையை “இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை” என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.
  • புதுக்கவிதையின் வேறு பெயர்கள் = இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை
  • ந. பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றினார்.
  • ஹனுமான், நவஇந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராகவும் இருந்தார்.
  • இவர் புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர்.
  • ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை – “ஸயன்ஸூக்கு பலி” என்பதாகும்.
  • 1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசைப் பெற்றார்.
  • பிக்ஷு, ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார்.

 

Leave a Reply