9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்

Table of Contents

9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்

9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்

9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்

  • சமூகம், செம்மாந்து சீர்மையுடன் திகழப் பாகுபாடுகளற்ற மனவுறுதி படைத்த மக்கள் தேவை.
  • அத்தகைய மக்களை உருவாக்கப் பகுத்தறிவு இன்றியமையாதது.
  • பாகுபாட்டு இருளுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருந்த தமிழக மக்களைத் தம் பகுத்தறிவு ஒளியால் வெளிக்கொணரப் பாடுபட்டோருள் முதன்மையானவர் = பெரியார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தந்தை பெரியாரின் சிறப்பு பெயர்கள்

  • வெண்தாடி வேந்தர்
  • பகுத்தறிவுப் பகலவன்
  • வைக்கம் வீரர்
  • ஈரோட்டுச் சிங்கம்
  • சுய மரியாதை சுடர்
  • பெண்ணினப் போர் முரசு
  • புத்துலகத் தொலை நோக்காளர்
  • தெற்காசியாவின் சாக்ரடீஸ்
9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்
9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்

தந்தை பெரியார்

  • மூடப்பழக்கத்தில் மூழ்கிக் கிடந்த தமிழ் மக்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் = தந்தை பெரியார்.
  • தானே முயன்று கற்று, தானாகவே சிந்தித்து அறிவார்ந்த கருத்துகளை வெளியிட்டவர் = தந்தை பெரியார்.

பகுத்தறிவு என்றால் என்ன

  • எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி, அறிவின்வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும்.
9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்
9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்

பெரியாரின் கண்ணோட்டம்

  • இக்கால வளர்ச்சிக்கு ஏற்ப அறிவு நிலையில், நடைமுறைக்கேற்ற வகையில் செயல்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்துடனே பெரியார் சிந்தித்தார்.
  • சமூகம், மொழி, கல்வி, பண்பாடு, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் அவரின் சிந்தனை புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.

சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்

  • “சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்” என்று கூறியவர் = தந்தை பெரியார்.
  • சாதியினால் மனித வாழ்விற்கு எவ்விதச் சிறு பயனும் விளையப் போவதில்லை. அதனால் வீண் சண்டைகளும் குழப்பங்களுந்தான் மேலோங்குகின்றன. அத்தகு சாதி, மனிதனுக்குத் தேவையில்லை என்று கூறியவர் = தந்தை பெரியார்.
  • சாதி, மனிதனுக்கு தேவையில்லை என்று கூறியவர் = தந்தை பெரியார்.

கடவுள் மறுப்புக் கொள்கை

  • மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? என்றவர் = தந்தை பெரியார்.
  • மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? என்று கேட்டவர் = தந்தைப் பெரியார்.
  • பெரியார் பின்பற்றிய கொள்கை = கடவுள் மறுப்புக் கொள்கை.
9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்
9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்

சமூக வளர்ச்சியில் கல்வி

  • சமூக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த கருவி = கல்வி.
  • “கற்பிக்கப்படும் கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும், சுயமரியாதை உணர்ச்சியையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ற தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்” என்றார் பெரியார்.
  • “சமூகத்தின் அனைத்து நிலையினருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும்” என்றார் பெரியார்.
  • அனைவருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும். குறிப்பாகப் பெண்களுக்குக் கல்வியறிவு புகட்ட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் பெரியார்.
  • மனப்பாடத்திற்கு முதன்மை அளிக்கும் தேர்வு முறையையும், மதிப்பெண்களுக்கு முதன்மை அளிக்கும் முறையையும் பெரியார் கடுமையாக எதிர்த்தார்.

தமிழில் அறிவியல் வளர்ச்சி

  • ‘ஒரு மொழியின் தேவை என்பது, அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது; இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்’ என்று கூறினார் தந்தைப் பெரியார்.
  • “மொழியோ நூலோ இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்” என்றார் பெரியார்.

மொழி, இலக்கியம்

  • இயற்கை அறிவைத் தரும் இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத அறிவியல் பற்றிய இலக்கியம் ஆகியவற்றின் மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மை அடைய முடியும் என்றார் பெரியார்.

திருக்குறளும் பெரியாரும்

  • திருக்குறளில் அறிவியல் கருத்துகளும் தத்துவக்கருத்துகளும், அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால் அதை மதிப்புமிக்க நூலாகப் பெரியார் கருதினார்.
  • பெரியார் மதிப்புமிக்க நூலாக கருதியது = திருக்குறள்.
  • இந்நூலில் அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியுள்ளன;
  • திருக்குறளை ஊன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள் என்றார் பெரியார்.

எழுத்துச் சீர்திருத்தம்

  • “மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்” என்றார் பெரியார்.
  • உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார் (ஐயா – அய்யா, ஒளவை – அவ்வை).
  • மெய்யெழுத்துகளில் சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார்.
  • பெரியாரின் இக்கருத்தின் சில கூறுகளை 1978ஆம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.

பெண்கள் நலம் பற்றி பெரியார்

9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்
9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்
  • நாட்டு விடுதலையைவிட, பெண் விடுதலைதான் முதன்மையானது என்று கூறினார் பெரியார்.
  • கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஆண்களுக்கு நிகரான உரிமை, பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றார் பெரியார்.
  • வேலைவாய்ப்பில் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்பட வேண்டும் என்றார் பெரியார்.

சிக்கனத்தை போற்றிய பெரியார்

  • சிக்கனம் என்னும் அருங்குணத்தைப் பெரியார் பெரிதும் வலியுறுத்தினார்.
  • அதற்கேற்பத் தானும் வாழ்ந்து காட்டினார்.
  • பொருளாதாரத் தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என்றார் பெரியார்.

சிந்தனைச் சிறப்புகள்

  • தமது சீர்திருத்தக் கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டினார்.
  • தம் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்தார்.

பெரியார் எதிர்த்தவை

  • இந்தித் திணிப்பு
  • குலக்கல்வித் திட்டம்
  • தேவதாசி முறை
  • கள் உண்ணுதல்
  • குழந்தை திருமணம்
  • மணக்கொடை

பெரியார் விதைத்த விதைகள்

  • கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கான சொத்துரிமை
  • குடும்ப நலத்திட்டம்
  • கலப்புத் திருமணம்
  • சீர்திருத்தத் திருமணம் ஏற்பு

பெரியார்

  • 1938 நவம்பர் 13 இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்

  • 27.06.1970 இல் யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பு தந்தை பெரியாரைத் ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

சுயமரியாதை இயக்கம்

  • பெரியார் துவக்கிய இயக்கம் = சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு = 1925.

பெரியார் நடத்திய இதழ்கள்

  • குடியரசு
  • விடுதலை
  • உண்மை
  • ரிவோல்ட் (ஆங்கில இதழ்)

பெரியார் பற்றி பாரதிதாசன

தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்

அவர்தாம் பெரியார் – பார்

அவர்தாம் பெரியார்

 

Leave a Reply