9TH TAMIL முத்தொள்ளாயிரம்

9TH TAMIL முத்தொள்ளாயிரம்

9TH TAMIL முத்தொள்ளாயிரம்

9TH TAMIL முத்தொள்ளாயிரம்

  • ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர்.
  • முத்தொள்ளாயிரம் நூலில் சேரன், சோழ, பாண்டியன் ஆகியோருடைய நாடுகளின் வளங்கள் நயமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
    • அச்சமில்லாத நாடு =சேர நாடு
    • ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாது = சோழ நாடு
    • முத்துடை நாடு = பாண்டிய நாடு.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சேர நாடு

  • சேறுபட்ட நீர் மிக்க வயல்களில் அரக்கு நிற செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன.
  • பகைவர் அஞ்சும் வேலைக் கொண்ட நாடு = சேரநாடு
  • “நச்சிலைவேல் கோக்கோதை நாடு” எனப்படும் நாடு = சேரநாடு
  • கோதை நாடு எனப்படுவது = சேர நாடு.
9TH TAMIL முத்தொள்ளாயிரம்
9TH TAMIL முத்தொள்ளாயிரம்

சோழ நாடு

  • நெல்லை அறுவடை செய்து நெற்போர் மீது ஏறி “நாவலோ” என்று கூவினர் உழவர்கள்.
  • யானைப்படைகளை கொண்ட நாடு = சோழ நாடு.
  • “நல்யானைக் கோக்கிள்ளி நாடு” எனப்படுவது = சோழ நாடு.
  • கிள்ளி நாடு எனப்படுவது = சோழ நாடு.

பாண்டிய நாடு

  • முத்து வளம் மிக்க நாடு = பாண்டிய நாடு.
  • முத்துக்களால் ஆன வெண்கொற்றக் குடையை உடைய நாடு = பாண்டிய நாடு.
  • “நகைமுத்த வெண்குடையான் நாடு” எனப்படுவது = பாண்டிய நாடு
  • வெண்குடையான் நாடு என்பப்படுவது = பாண்டிய நாடு.

அருஞ்சொற்பொருள்

  • அள்ளல் = சேறு
  • பழனம் = நீர் மிக்க வயல்
  • வெரீஇ = அஞ்சி
  • பார்ப்பு = குஞ்சு
  • நாவலோ = நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து
  • இசைத்தால் = ஆரவாரத்தோடு கூவுதல்
  • நந்து = சங்கு
  • கமுகு = பாக்கு

இலக்கணக்குறிப்பு

  • வெண்குடை = பண்புத்தொகை
  • இளங்கமுகு = பண்புத்தொகை
  • கொல்யானை = வினைத்தொகை
  • குவிமொட்டு = வினைத்தொகை
  • வெரீஇ = சொல்லிசை அளபெடை

அணி இலக்கணம்

9TH TAMIL முத்தொள்ளாயிரம்
9TH TAMIL முத்தொள்ளாயிரம்
  • “அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேல் கோக்கோதை நாடு” என்ற பாடலில் பயின்று வரும் அணி = தற்குறிப்பேற்ற அணி.
9TH TAMIL முத்தொள்ளாயிரம்
9TH TAMIL முத்தொள்ளாயிரம்
  • “காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை – காவலன்தன் கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு” என்ற பாடலில் பயின்று வரும் அணி = உவமை அணி
9TH TAMIL முத்தொள்ளாயிரம்
9TH TAMIL முத்தொள்ளாயிரம்
  • “நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் பந்தர் இளங்கமுகின் பாளையும் சிந்தித் திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன் நகைமுத்த வெண்குடையான் நாடு” என்ற பாடலில் பயின்று வரும் அணி = உவமை அணி.

முத்தொள்ளாயிரம் நூல் குறிப்பு

  • வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்.
  • மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது.
  • மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது.
  • நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.
  • புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன.
  • அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
  • ஆசிரியரின் பெயரை அறியமுடியவில்லை.
  • இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.
  • சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும் சோழநாட்டை ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும் பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் பாடப்பகுதி காட்டுகிறது.

 

Leave a Reply