Skip to content
பழமொழி நானூறு
சொற்பொருள்:
- ஆற்றவும் = நிறைவாக
- தமவேயாம் = தம்முடைய நாடே ஆகும்
- ஆறு = வழி, நதி, ஓர் எண்
- உணா = உணவு
- அரையன் = அரசன்
பிரித்து எழுதுக:
- நாற்றிசை = நான்கு + திசை
- ஆற்றுணா = ஆறு + உணா
நூல் குறிப்பு:
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- நானூறு பாடல்களை கொண்டது.
- ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி உண்டு.
- “ஆற்றுணா வேண்டுவது இல்” என்பதற்கு “கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்” என்பது பொருள்.
ஆசிரியர் குறிப்பு:
- இந்நூலின் ஆசிரியர் = முன்றுறை அரையனார்.
- முன்றுறை என்பது ஊர்பெயர்.
- அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.
- முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம் அல்லது அரையன் என்பது புலவரின் குடிபெயராக இருக்கலாம்.
6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: