சூளாமணி

சூளாமணி

சூளாமணி

சூளாமணி ஆசிரியர்

  • ஆசிரியர் = தோலாமொழித் தேவர்
  • காலம் = கி.பி.பத்தாம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 2330
  • சருக்கம் = 12
  • பாவகை = விருத்தம்
  • சமயம் = சமணம்

சூளா மணி பெயர்க்காரணம்

  • மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளா மணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.

பொதுவான குறிப்புகள்

  • நூல் ஆசிரியர் தோலாமொழித் தேவரின் இயற் பெயர் வர்த்தமான தேவர்.
  • இந்நூலின் முதல் நூல் = வடமொழியில் உள்ள ஆருகத மாபுராணம்
  • சூளா மணியின் கதை நாயகன் திவிட்டன்
  • நூலை முதலில் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
  • “விருதப்பாவை கையாள்வதில் இவர் சீவக சிந்தாமணி ஆசிரியரையும் மிஞ்சிவிட்டார்” என்கிறார் மு.வரதராசனார்
  • சிந்தாமணியை விடச் செப்பமான நடையை உடையது சூளா மணி” என்று கி.வா.ஜகன்னாதன் கூறுகிறார்.
  • சிந்தாமணியிலும் கூட இத்தகைய ஓடமும் இனிமையும் இல்லை” என்கிறார் தெ.பொ.மீ

மேற்கோள்

  • ஆணை துரப்ப அரவு உரை ஆழ்குழி

            நானவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர்

           தேனின் அழிதுளி நக்கும் திறத்தது

            மானுடர் இன்பம் மதித்தனை கோல் நீ

 

 

 

Leave a Reply