10TH TAMIL திருவிளையாடல் புராணம்

10TH TAMIL திருவிளையாடல் புராணம்

10TH TAMIL திருவிளையாடல் புராணம்
10TH TAMIL திருவிளையாடல் புராணம்

10TH TAMIL திருவிளையாடல் புராணம்

  • பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் = குலேசபாண்டியன்.
  • கபிலரின் நண்பர் = இடைக்காடனார்.
  • பாண்டிய மன்னன் இடைக்காடனாரை அவமதித்தான்.
  • இடைக்காடனார் யாரிடம் முறையிட்டார் = இறைவனிடம்.
  • இறைவன் எந்த கோவிலை விட்டு நீங்கினார் = கடம்பவனக் கோவிலை
  • இறைவன் எங்கு சென்று தங்கினார் = வடதிரு ஆலவாயில்.
  • வேப்பமாலை அணிபவன் = பாண்டியன்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • கேள்வியினான் = நூல் வல்லான்
  • கேண்மையினான் = நட்பினன்
  • தார் = மாலை
  • முடி = தலை
  • முனிவு = சினம்
  • அகத்து உவகை = மனமகிழ்ச்சி
  • தமர் = உறவினர்நீபவனம் = கடம்பவனம்
  • மீனவன் = பாண்டிய மன்னன்
  • கவரி = சாமரை (கவரிமாவின் முடியின் செய்த விசிறியாகிய அரசுச் சின்னம்)
  • நுவன்ற = சொல்லிய

இலக்கணக்குறிப்பு

  • என்னா = அசைச்சொல்
  • கேள்வியினான் = வினையாலணையும் பெயர்
  • காடனுக்கும் கபிலனுக்கும் = எண்ணும்மை

சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன்

  • புலவர் மோசிகீரனார் மன்னரைக் காண அரண்மனை சென்றார்.
  • களைப்பு மிகுதியால் முரசுக் கட்டிலில் கண்ணயர்ந்தார்.
  • அரச குற்றமான அச்செயலைச் செய்த புலவருக்குத் தண்டனை வழங்காமல் கவரி வீசினார் மன்னர்.
  • கவரி வீசிய மன்னர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
  • கண்விழித்த புலவர் மன்னரின் செயலைக் கண்டு வியந்து பா மழை பொழிந்தார்.

“மாசற விசித்த வார்புறு வள்பின்”

–    புறநானூறு

திருவிளையாடல் புராணம் நூல் குறிப்பு

10TH TAMIL திருவிளையாடல் புராணம்
10TH TAMIL திருவிளையாடல் புராணம்
  • திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது.
  • இந்நூல் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களும் 64 படலங்களும் உடையது.
  • பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர்.
  • பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
  • சிவபக்தி மிக்கவர்.
  • வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலியன இவர் இயற்றிய வேறு நூல்களாகும்.

 

 

 

Leave a Reply