11TH TAMIL தொடரியல்

Table of Contents

11TH TAMIL தொடரியல்

11TH TAMIL தொடரியல்
11TH TAMIL தொடரியல்

11TH TAMIL தொடரியல்

  • சொற்கள் தொடர்ந்து நின்று பொருள் தருவது = தொடர் எனப்படும்.
  • தொடர், தொடரமைப்பு ஆகியவற்றை ஆராய்வது = தொடரியல்.
  • நெகிழ்வுத்தன்மை கொண்ட அமைப்பு = தொடரியல் ஆகும்.

தொடரியல் என்றால் என்ன

  • தொடர், தொடரமைப்பு, அதன் பயன்பாடு ஆகியவற்றை ஆரய்வது “தொடரியல்” எனப்படும்.
  • தொடரியலின் சிறப்பு, ஒரு மொழியின் வளத்தைக் காண உதவுகிறது.

தொல்காப்பியம் காட்டும் தொடரமைப்புகள்

  • தொல்காப்பியம், தொடரமைப்புகள் பற்றி சில நூற்பாக்களில் கூறியுள்ளது. அவை, பல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை,
    1. தொடரில் சொற்கள் அமைந்துவரும் நிலை
    2. திணை – பால் – எண் – தொடர்ப்பொருத்தம்
    3. ஒரு சொல் அல்லது தொடர் அடுக்கி வருதல்
    4. ஒரு தொடரை அடிப்படையாகக் கொண்டு செருகலும் விரித்தலும்
    5. தொடரில் முன் பின் மாற்றம்
    6. ஒரு தொடரை இரு வகையாக விளக்குதல்
    7. இலக்கணக்கூறு நோக்கில் மாற்றம் – தோன்றா எழுவாய்
    8. தொடரமைப்பில் ஆகுபெயர்

தொடரில் சொற்கள் அமைந்து வரும் நிலை

  • (எ.கா) = கண்ணன் வந்தான்; அவன் கடிதம் கொண்டு வந்தான்,
  • இங்கு கண்ணன் = இயற்பெயர்; அவன் = சுட்டுப்பெயர்.
  • இயற்பெயர் உடைய தொடரும், சுட்டுப்பெயர் கொண்ட மற்றொரு தொடரும் அடுத்தடுத்து வர வேண்டும்.
  • 11TH TAMIL தொடரியல்

திணை – பால் – எண்  – தொடர்ப்பொருத்தம்

11TH TAMIL தொடரியல்
11TH TAMIL தொடரியல்
  • ஒரு தொடரில் உள்ள எழுவாய், அதன் பயனிலையோடு திணை, பால், எண் ஆகியவற்றில் ஒத்திருத்தல் வேண்டும்.

தொடர்கள்

திணை பால் எண்
மாறன் சிரித்தான் உயர்திணை ஆண்பால்

ஒருமை

மணிமொழி பாடினாள்

உயர்திணை பெண்பால் ஒருமை
மக்கள் மகிழ்ந்தனர் உயர்திணை பலர்பால்

பன்மை

மான் துள்ளியோடியது

அஃறிணை ஒன்றன்பால் ஒருமை
மலர்கள் மலர்ந்தன அஃறிணை பலவின்பால்

பன்மை

வழுநிலை என்றால் என்ன

  • வழு என்றால் = குற்றம், பிழை
  • வழுநிலை = இலக்கண குற்றம் உடைய நிலை
  • ஒரு தொடரில் திணை, பால், எண், இடம், காலம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று மாறுபட்டு, முன்நின்ற சொல்லுக்கு ஏற்றவாறு அமையாமல் இலக்கணக் குற்றம் தோன்ற வருவது வழுநிலை.
  • வினா, விடை, மரபு ஆகியன இடம்பெறும் தொடரிலும் வழு தோன்றும்.
  • வழு வரும் இடங்கள் = எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய தொடர்களில் வழு வரும்.

வழு எத்தனை வகைப்படும்

  • வழு 8 வகைப்படும். அவை,
    1. திணை வழு
    2. பால் வழு
    3. எண் வழு
    4. இட வழு
    5. கால வழு
    6. வினா வழு
    7. மரபு வழு
    8. விடை வழு

வழாநிலை என்றால் என்ன

  • வழாநிலை = இழக்க குற்றம் இல்லாத நிலை
  • நம் முன்னோர் எச்சொல்லை எப்பொருளால் குறித்தனரோ, அச்சொல்லை அப்பொருளிலேயே தொன்றுதொட்டு வழு இல்லாமல் கூறுவதே வழாநிலை. (இலக்கணக் குற்றமில்லாத நிலை)

வழாநிலை எத்தனை வகைப்படும்

  • வழாநிலை 8 வகைப்படும். அவை,
    1. திணை வழாநிலை
    2. பால்வழாநிலை
    3. எண் வழாநிலை
    4. இடவழாநிலை
    5. காலவழாநிலை
    6. வினாவழாநிலை
    7. விடைவழாநிலை
    8. மரபுவழாநிலை

வழுவமைதி என்றால் என்ன

  • பசுவைப் பார்த்து, ”என் அம்மை வந்தாள்” எனக் கூறுவது உண்டு. பசு என்பது, அஃறிணையாயினும், அன்பு மிகுதியால் உயர்திணைக்குரிய பெயரைப் பெற்றுள்ளது.
  • இத்தொடர், இலக்கணக் குற்றமுடையதாயினும் சான்றோரால் ஏற்றுக்கொள்ளப் பெற்றமையால் வழுவமைதி ஆயிற்று.
  • இலக்கண முறையின்றிப் பேசினாலும் எழுதினாலும் கூட சில இடங்களில் இலக்கணம் உடையதைப் போல வழாநிலையாக ஏற்றுக்கொள்ளும் முறைக்கு வழுவமைதி என்று பெயர்.
  • 11TH TAMIL தொடரியல்

வழுவமைதி எத்தனை வகைப்படும்

  • வழுவமைதி 5 வகைப்படும். அவை,
    1. திணை வழுவமைதி
    2. பால் வழுவமைதி
    3. இட வழுவமைதி
    4. கால வழுவமைதி
    5. மரபு வழுவமைதி

வழு வரும் இடங்கள்

  • வழு வருமிடங்கள் = 5.
  • வழு வருமிடங்கள் = எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய தொடர்களில் வழு வரும்

ஒரு சொல் அல்லது தொடர் அடுக்கி வரும் முறை

  • அடுக்கு என்பது மீண்டும் மீண்டும் வருவதை அடிப்படையாகக் கொண்டது.
  • அடுக்குமுறை 2 வகைப்படும். அவை,
    1. சொல் நிலை அடுக்குமுறை
    2. தொடர்நிலை அடுக்குமுறை

சொல்நிலையில் அடுக்குமுறை

  • ஒரு சொல் அடுக்கி வருதல், சொல்நிலை அடுக்குமுறை எனப்படும்.
  • எ.கா
    • போ போ என் கண் முன்னே நிற்காதே

தொடர் நிலையில் அடுக்குமுறை

  • தொடர் நிலை அடுக்குமுறை 3 வகைப்படும். அவை,
    1. வினை எச்சங்கள் அடுக்கு வருதல்
    2. வீணை முற்றுகள் அடுக்கி வருதல்
    3. வேற்றுமை உருபுகள் அடுக்கி வருதல்

வண்ணச் சினைச் சொல்  என்றால் என்ன

  • செங்கால் நாரை = செம்மை + கால் + நாரை
  • இதில்,
    1. செம்மை = அடை (பண்பு)
    2. கால் = சினை (உறுப்பு)
    3. நாரை = எழுவாய்
  • இவ்வாறு தொடரில், அடையைக் (பண்பைக்) குறிக்கும் செம்மை என்னும் சொல் முதலிலும், சினையைக் (உறுப்பைக்) குறிக்கும் சொல் இரண்டாவதாகவும், முதலைக் (எழுவாயைக்) குறிக்கும் சொல் மூன்றாவதாகவும் வருவதனை வண்ணச் சினைச் சொல் என்பர்.
  • அடை, சினை, முதல் ஆகியன மயங்காது முறையாக அடுக்கி வருவது = வண்ணச் சினைச் சொல் என்பர்.
  • வண்ணச் சினைச் சொல் எடுத்துக்காட்டுகள் = செங்கால்நாரை, கரிகால் வளவன், செங்கண் செழியன், மைவிழி மாதவி, அழுமூஞ்சிப் பாப்பா, சுருட்டைத்தலப் பையன்.
  • 11TH TAMIL தொடரியல்

ஒரு தொடரை அடிப்படையாகக் கொண்டு செருகலும் விரித்தலும்

  • ஒரு தொடரில் பெயரெச்ச, வினை எச்சங்கள், தாம் முடிக்கும் சொல்லுக்கு முன் இடையில் வேறு சொற்களும் வரலாம்.

இடைச்செருகல் என்றால் என்ன

  • ஒரு தொடரில் பெயரெச்ச, வினை எச்சங்கள், தாம் முடிக்கும் சொல்லுக்கு முன் இடையில் வேறு சொற்களும் வரலாம்.
  • இதனை தொல்காப்பியர் “இடைநிலை” என்பார்.
  • “இடைநிலையை” மொழி அறிஞர்கள் “இடைச்செருகல்” என்று கூறுவர்.

பெயரெச்ச தொடரில் இடைச்செருகல் வருதல்

  • ஆடிய மயில் = ஆடிய அழகான மயில் (அழகான = இடைநிலை / இடைச்செருகல்)
  • கிடைத்த நூல் = கிடைத்த அரிய நூல் (அரிய = இடைநிலை / இடைச்செருகல்)

வினை எச்ச தொடரில் இடைச்செருகல் வருதல்

  • படித்துக் கூறினான் = படித்து பொருள் கூறினான் (பொருள் = இடைநிலை / இடைச்செருகல்)
  • உழுது வந்தான் = உழுது ஏரோடு வந்தான் (ஏரோடு = இடைநிலை / இடைச்செருகல்)

இடைப்பிறவரல் என்றால் என்ன

  • ‘அறத்தை அரசன் விரும்பினான்’ எனவும் ‘உண்டது பசித்த யானை’ எனவும் வரும் தொடர்களில், முறையே வேற்றுமையுருபும் முற்றுவினையும் அமைந்துள்ளன.
  • அரசன், பசித்த என்னும் பிற சொற்கள் அவற்றோடு பொருந்தி வந்துள்ளன.
  • இவ்வாறு பிற சொற்கள் நிற்றலை ‘இடைப்பிறவரல்’ என்பர்.

அடைமொழி என்றால் என்ன

  • அடைமொழி 2 வகைப்படும். அவை,
    1. பெயரடை
    2. வினையடை
  • பெயரடை என்பது = பெயரை சிறப்பித்து வருவது ஆகும்
  • வினையடை என்பது = வினையை சிறப்பித்து வருவது ஆகும்.
  • எ.கா
    1. வெள்ளைக் குதிரை விரைவாக ஓடியது
      • வெள்ளைக் = பெயரடை
      • குதிரை = பெயர்
      • விரைவாக = வினையடை
      • ஓடியது = வினை

ஒரு தொடரை இருவகையாக விளக்குதல்

  • குறிப்பிட்ட ஒரு தொடரை இருவகையாக விளக்குவது பற்றி தொல்காப்பியர் கூறியுள்ளார்.
  • எ.கா
    • புலி கொல் யானை
      • புலியை கொன்ற யானை
      • புலியால் கொல்லப்பட்ட யானை

தொடரில் முன்பின் மாற்றம்

  • ஒரு தொடரும் முன்பின் மாற்றம் அடைந்து வருவது = வேற்றுமை உருபு ஆகும்.
  • வேற்றுமை உருபு வரும் இடங்கள் = 2 இடங்கள் (தொடரின் இடையிலும், தொடரின் இறுதியிலும்)
  • எ.கா
    • உழுதான் வயலை (தொடரின் இறுதியில் ஐ உருபு வந்துள்ளது)
    • கணினியை இயக்கினான் (தொடரின் இடையில் ஐ உருபு வந்துள்ளது)
  • தமிழில் தொடரியலை விட கட்டமைப்புடன் விளங்குவது = உருபனியல்
  • நெகிழ்வுத்தன்மை கொண்ட அமைப்பு = தொடரியல் ஆகும்.
  • 11TH TAMIL தொடரியல்

உருபனியல் என்றால் என்ன

  • தமிழில் தொடரியலை விட கட்டமைப்புடன் விளங்குவது = உருபனியல்
  • ஒரு மொழியில் பொருள் உணர்த்தும் மிகச்சிறிய கூறு உருபன்.
  • இதனைப் பகுக்க முடியாது.
  • ஒலியனை அடையாளம் காண்பதற்கு இரு ஒலிகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடும் தன்மை மட்டும் போதுமானது.
  • உருபன்களை அடையாளம் காண வேண்டுமானால், அதன் வடிவமும் அது உணர்த்தும் பொருளும் தேவை.

ஒலியனியல் என்றால் என்ன

  • ஒலியனியல் குறிப்பிட்ட ஒருமொழியில் உள்ள பேச்சு ஒலிகளைக் குறிப்பது ஒலியனியல்.
  • ஒரு மொழியில் பொருள் வேறுபாட்டை உணர்த்தக்கூடிய மிகச்சிறிய ஒலிக்கூறே ஒலியன்.
  • எ.கா. பட்டம் – சட்டம்
  • இச்சொற்களில் முதலில் அமைந்துள்ள பகரமும் சகரமும் (ப், ச்) பொருளை வேறுபடுத்துகின்றன.
  • இவை ஒலியன்கள் ஆகும்.

தோன்றா எழுவாய் என்றால் என்ன

  • எழுவாய் வெளிப்படையாக இல்லாமல் தொடர் அமைந்து வருவது ஆகும்.
  • எ.கா.
    • திண்ணை மெழுகிற்று

தோன்றாச் செயப்படுபொருள் என்றால் என்ன

  • ஒரு தொடரில் செயப்படுபொருள் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வருவது தோன்றாச் செயப்படுபொருள் எனப்படும்.
  • எ.கா
    • நான் படித்தேன் (பாடம் – தோன்றாச் செயப்படுபொருள்)
    • நான் ஆடினேன் (நடனம் – தோன்றாச் செயப்படுபொருள்)

தோன்றாப் பயனிலை என்றால் என்ன

  • ஒரு தொடரில் பயனிலை வரவில்லை எனில், அதனை தோன்றாப் பயனிலை என்பர்.
  • எ.கா
    • எனக்குப் பசி (இருக்கிறது – தோன்றாப் பயனிலை)
11TH TAMIL தொடரியல்
11TH TAMIL தொடரியல்

 

முக்காலத்துக்கும் பொருத்தமுடைய வினைமுற்று

  • முக்காலத்துக்கும் பொருத்தமுடையது = வினைமுற்று
  • முக்காலத்தும் இருக்கும் ஒரு பொருளை விளக்கும்போது, அத்தொடரின் வினைமுற்று, செய்யும் என்னும் வாய்பாட்டில் அமைதல் வேண்டும் என வினையியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
  • எடுத்துக்காட்டாக,
    • நீர் குளிரும்
    • மலை நிற்கும்
    • ஞாயிறு தோன்றும்
    • ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும்
    • நூலகம் காலை ஒன்பது மணிக்குத் திறக்கும்
  • ஆகிய தொடர்களைக் கூறலாம்.
  • இவையனைத்தும் செய்யும் என்னும் வாய்பாட்டால் அமைந்துள்ளன.

வினைமுற்று எத்தனை வகைப்படும்

  • வினைமுற்று 2 வகைப்படும். அவை,
    1. தெரிநிலை வினைமுற்று
    2. குறிப்பு வினைமுற்று

தெரிநிலை வினைமுற்று என்றால் என்ன

  • ஒரு செயலைத் தெளிவாகத் தெரிவிக்கும் வினைமுற்று = தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
  • இவ்வினைமுற்றின் விகுதியானது திணை, பால், எண், இடம் ஆகியவற்றையும் உணர்த்துகிறது.
  • எடுத்துக்காட்டாக
    1. நடந்தான் என்னும் வினைமுற்றில் உயர்திணை திணை), ஆண்பால்(பால்), ஒருமை (எண்), படர்க்கை (இடம்) ஆகியன உள்ளன.
  • இஃது, இறந்தகாலத்தையும் குறிக்கிறது.
  • செய்பவன், கருவி, காலம், நிலம், செயல், செய்பொருள் ஆகிய ஆறனையும் வெளிப்படையாக உணர்த்துகிறது.
  • 11TH TAMIL தொடரியல்

குறிப்பு வினைமுற்று என்றால் என்ன

  • செயல் செய்பவரை வெளிப்படையாகக் காட்டிச் செயலையும் காலத்தையும் குறிப்பாகத் தெரிவித்து நிற்கும் வினைச்சொல்லே குறிப்பு வினைமுற்று.
  • பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய அறுவகைப் பெயரின் அடியாகக் குறிப்புவினை தோன்றும்.
  • இவன் பொன்னன் என்பது, பொன்னை உடையவனாக இருந்தான், இருக்கிறான், இருப்பான் எனப் பொருளுணர்த்திச் செயலையும் காலத்தையும் குறிப்பாகவும் செயல் செய்பவனை வெளிப்படையாகவும் கூறுகிறது

தொடர் வகைகள் எத்தனை வகைப்படும்

11TH TAMIL தொடரியல்
11TH TAMIL தொடரியல்
  • தொடர் வகைகள் நான்கு வகைப்படும். அவை,
    1. செய்தித் தொடர்
    2. வினாத் தொடர்
    3. விழைவுத் தொடர்
    4. உணர்ச்சித் தொடர்

தொடரமைப்புகள் எத்தனை வகைப்படும்

  • தொடரமைப்புகள் 3 வகைப்படும். அவை,
    1. தனிநிலை தொடரமைப்பு
    2. தொடர்நிலை தொடரமைப்பு
    3. கலவைதொடர் தொடரமைப்பு

மணிப்பிரவாள நடை என்றால் என்ன

  • மணிப்பிரவாள நடை என்பது மணியும் பவளமும் கலந்தது போல் வடசொற்களையும் தமிழ்ச்சொற்களையும் கலந்து எழுதும் நடை ஆகும்.
  • மணிப்பிரவாள நடை செல்வாக்குப் பெற்றிருந்த காலம் = இடைக்காலம்.
  • பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட ஸ்ரீபுராணம், சத்திய சிந்தாமணி முதலிய நூல்கள் இந்நடையில் அமைந்திருந்தன.

தொகைநிலை தொடர் என்றால் என்ன

  • சொற்கள் தொடர்ந்து நின்று, பொருள் தருவது தொடர்.
  • இருசொல்லுக்கு இடையே ஏதேனும் ஓர் உருபு மறைந்து வருவது, தொகைநிலைத் தொடர் எனப்படும்.
  • தொகை = தொக்கி வருதல்/ மறைந்து வருதல்

தொகைநிலை தொடர் எத்தனை வகைப்படும்

  • தொகைநிலை தொடர் 6 வகைப்படும். அவை,
    1. வேற்றுமை தொகை
    2. வினை தொகை
    3. பண்பு தொகை
    4. உவமை தொகை
    5. உம்மை தொகை
    6. அன்மொழி தொகை
  • எ.கா
    • “பழம்பால்” என்பதன் இலக்கணக்குறிப்பு = பண்புத்தொகை (பழைமை + பால், பழைய பால்)
    • “பழம் பால்” என்பதன் இலக்கணக்குறிப்பு = உம்மைத்தொகை (பழமும் பாலும்)
11TH TAMIL தொடரியல்
11TH TAMIL தொடரியல்

தொகாநிலை தொடர் என்றால் என்ன

  • தொகைநிலைக்கு எதிர்மறை தொகாநிலை.
  • இரு சொல்லுக்கிடையே உருபு/ சொல் மறையாது வருவது தொகாநிலைத் தொடர்கள் என்பர்.

தொகாநிலை தொடர்கள் எத்தனை வகைப்படும்

  • தொகாநிலை தொடர்கள் 9 வகைப்படும். அவை,
    1. எழுவாய்த்தொடர்
    2. வினைமுற்றுத்தொடர்
    3. பெயரெச்சத் தொடர்
    4. வினையெச்சத் தொடர்
    5. விளித்தொடர்
    6. வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
    7. இடைச்சொல் தொடர்
    8. உரிச்சொல் தொடர்
    9. அடுக்குத் தொடர்

 

 

 

Leave a Reply