10TH TAMIL இரட்டுற மொழிதல்

10TH TAMIL இரட்டுற மொழிதல்

10TH TAMIL இரட்டுற மொழிதல்
10TH TAMIL இரட்டுற மொழிதல்

10TH TAMIL இரட்டுற மொழிதல்

  • விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும் கதிரவனோடும் கடலோடும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது.
  • இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது.
  • தமிழ் கடலோடு ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது; விரிவுபடுகிறது.
  • “தமிழ், ஆழிக்கு இணை” (தமிழுக்கு கடலுக்கு இணை” என கருதி பாடியவர் = சந்தக்கவிமணி தமிழழகனார்.

அருஞ்சொற்பொருள்

  • துய்ப்பது – கற்பது, தருதல்
  • மேவலால் – பொருந்துதலால், பெறுதலால்

தமிழும் கடலும் (ஆழி) இணை

10TH TAMIL இரட்டுற மொழிதல்

பாடல்

தமிழுக்கு கடலுக்கு (ஆழி)
முத்தமிழ் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்

முத்தினைஅமிழ்ந்து எடுத்தல்

முச்சங்கம்

முதல், இடை,கடை ஆகிய முச்சங்கம் மூன்று வகையான சங்குகள் தருதல் = வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம்
மெத்த வணிகலன் (மெத்த + அணிகலன்) ஐம்பெரும் காப்பியங்கள்

மிகுதியான வணிகக்

கப்பல்கள்

சங்கத்தவர் காக்க

சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமை

நீரலையைத் தடுத்து நிறுத்தி, சங்கினைக் காத்தல்

மூன்று வகை சங்குகள் யாவை

  • மூன்று வகை சங்குகள் = வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம்.

இரட்டுற மொழிதல் என்றால் என்ன

  • ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும்.
  • இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர்.
  • செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

சந்தக்கவிமணி தமிழழகனார்

  • புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி – கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • இப்பாடலைப் படைத்தவர் தமிழழகனார்.
  • சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்.
  • இலக்கணப் புலமையும் இளம்வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
  • சந்தக்கவிமணி தமிழழகனார் இயற்பெயர் = சண்முகசுந்தரம்.
  • சந்தக்கவிமணி தமிழழகனார் படைத்த சிற்றிலக்கிய நூல்கள் = 12.

Leave a Reply