10TH TAMIL நிகழ்கலை

10TH TAMIL நிகழ்கலை

10TH TAMIL நிகழ்கலை
10TH TAMIL நிகழ்கலை

10TH TAMIL நிகழ்கலை

  • கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவன = நிகழ்கலைகள்.
  • கருத்துடன் கலைத்திறனை நோக்காகக்கொண்டு காலவெள்ளத்தைக் கடந்து நிற்பன = நிகழ்கலைகள்.
  • சமூகப் பண்பாட்டுத்தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவன = நிகழ்கலைகள்.
  • நுட்பமான உணர்வுகளின் உறைவிடமாக இருப்பன = நிகழ்கலைகள்.
  • மக்கள் பண்பாட்டின் பதிவுகளான = நிகழ்கலைகள்.
  • மக்களின் எண்ண வெளிப்பாடாக, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக, மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்க முடியாத பண்பாட்டுக் கூறுகளாக விளங்குகின்றவை = நிகழ்கலைகள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

நிகழ்கலை என்றால் என்ன

  • சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள்.
  • இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன;
  • சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன.
10TH TAMIL நிகழ்கலை
10TH TAMIL நிகழ்கலை

கரகாட்டம் என்றால் என்ன

  • மரபார்ந்த கலைகளில் ஒன்று = கரகாட்டம்.
  • ‘கரகம்’ என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம்.
  • கரகாட்டத்தின் வேறு பெயர்கள் = கரகம், கும்பாட்டம்.
  • கும்பாட்டம் என அழைக்கப்படும் ஆட்டம் = கரகாட்டம்.
  • கரகச் செம்பினை ஆடும்பவரின் தலையின் வைக்கும் படி தட்டி வைப்பர்.
  • செம்பில் மணல் அல்லது அரிசியை நிரப்புவர். அதில் கிளி பொம்மை கொண்ட குச்சியை நட்டு வைப்பர்.
  • இதற்கு நையாண்டி மேள இசையும் நாகசுரம், தவில், பம்பை போன்ற இசைக்கருவிகளும் இசைக்கப்படுகின்றன.
  • கரகாட்டம் நிகழ்த்துதலில் இத்தனைபேர்தான் நிகழ்த்த வேண்டும் என்ற வரையறை இல்லை.
  • புறநானூற்று பாடலில் “கரகம்” என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

“நீரற வறியாக் கரகத்து”

–    (புறம்.1)

  • “கரகம்” என்ற சொல் இடம்பெற்றுள்ள சங்க இலக்கிய நூல் = புறநானூறு.
  • சிலப்பதிகாரத்தில் மாதவி பதினொரு வகை ஆடிய ஆடல்களில் ‘குடக்கூத்து’ என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.
  • சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆடல்களின் எண்ணிக்கை = பதினொன்று.
  • இதுவே கரகாட்டத்திற்கு அடிப்படை என்றும் கருதப்படுகிறது.
  • “கரகாட்டத்திற்கு அடிப்படை” எனப்படும் ஆடல் = குடக்கூத்து.

மயிலாட்டம் என்றால் என்ன

  • மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக்கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும்.
  • கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஆடும் ஆட்டம் = மயிலாட்டம்.
  • ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், சுற்றி ஆடுதல், இறகை விரித்தாடுதல், தலையைச் சாய்த்தாடுதல், தாவியாடுதல், இருபுறமும் சுற்றியாடுதல், அகவுதல், தண்ணீர் குடித்துக்கொண்டே ஆடுதல் ஆகிய அடவுகளைக் கலைஞர்கள் இவ்வாட்டத்தில் ஆடிக்காட்டுவர்.

காவடியாட்டம்

  • “கா” என்பதன் பொருள் = “பாரந்தாங்கும் கோல்”.
  • இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது காவடியாட்டம்.
  • மரத்தண்டின் இரு முனைகளிலும் சிற்ப வேலைப்பாடுள்ள பலகையைப் பொருத்தி, மூங்கில் குச்சிகளால் இணைத்து, மயிலிறகுக் கற்றைகளை இருபுறமும் பொருத்தி, மணிகளால் அழகுபடுத்திக் காவடியை உருவாக்குகின்றனர்.

காவடியாட்டம் வகைகள்

  • பலவகை காவடிகள் = மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி.

ஒயிலாட்டம் என்றால் என்ன

  • ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டியும் காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் குழு ஆட்டமே ஒயிலாட்டம்.
  • உணர்ச்சிக்கேற்பப் பாட்டின் சந்தமும் சந்தத்திற்கேற்ப ஆட்டத்தின் இசையும் மாறிமாறி, மனத்தை ஈர்க்கும்.
  • ஒயிலாட்டத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தது = கம்பீரத்துடன் ஆடுதல்.
  • ஒயிலாட்டத்தைப் பெரும்பாலும் ஆண்கள் ஆடுவதே வழக்கில் உள்ளது.
  • இந்த ஆட்டத்தில் தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

தேவராட்டம் என்றால் என்ன

  • “தேவராட்டம்” என்பதன் பொருள் = வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம்.
  • ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் = தேவராட்டம்.
  • தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி = உறுமி எனப்படும் “தேவதுந்துபி”.
  • “தேவதுந்துபி” எனப்படுவது = உறுமி என பொதுவாக அழைக்கப்படும் தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி ஆகும்.
  • இந்தக் கலை, வேட்டி கட்டியும் தலையிலும் இடையிலும் சிறுதுணி கட்டியும் கால்களில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகின்றது.
  • தேவராட்டத்தில் கலந்துக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை = எட்டு முதல் பதின்மூன்று கலைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்பது பொது மரபாக உள்ளது.
  • “சடங்கு” சார்பாக ஆடப்படும் ஆட்டம் = தேவராட்டம்.

சேர்வையாட்டம் என்றால் என்ன

  • தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை = சேர்வையாட்டம்.
  • சேவைப்பலகை, சேமக்கலம், ஜால்ரா ஆகிய இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டே ஆடுகின்றனர்.
  • “இசைச்சார்புக் கலையாக” நிகழ்த்தப்படும் ஆட்டம் = சேர்வையாட்டம்.
  • “வழிபாட்டுக் கலையாக” நிகழ்த்தப்படும் ஆட்டம் = சேர்வையாட்டம்.

பொய்க்கால் குதிரையாட்டம்

10TH TAMIL நிகழ்கலை
10TH TAMIL நிகழ்கலை
  • “போலச்செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் ஒன்று = பொய்க்கால் குதிரை ஆட்டம்.
  • மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரைவடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்துகொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம்.
  • அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் = பொய்க்கால் குதிரையாட்டம்.
  • பொய்க்கால் குதிரையாட்டத்தின் வேறு பெயர்கள் = புரவி ஆட்டம், புரவி நாட்டியம்
  • “புரவி நாட்டியம்” என அழைக்கப்படும் ஆட்டம் = பொய்க்கால் குதிரையாட்டம்.
  • “பொய்க்கால் குதிரையாட்டம்” தமிழகத்திற்கு வந்த காலம் = மராட்டியர் காலத்தில்.
  • “பொய்க்கால் குதிரையாட்டம்” மராட்டியர் காலத்தில் தமிழகத்தின் எப்பகுதிக்கு வந்தது = தஞ்சைப் பகுதிக்கு.
  • குதிரைமேல் ஏறிப் பயணம் செய்வது போன்று கடிவாளத்தை ஆட்டியும் காலை உயர்த்தியும் நான்கு புறமும் ஓடியும் ஆடுவது இது.
  • “பாடல்கள்” இன்றி ஆடப்படும் ஆட்டம் = பொய்க்கால் குதிரையாட்டம்.
  • “நையாண்டி மேளம், நாகசுரம்” பயன்படுத்தப்படுகிறது.
  • பொய்க்கால் குதிரையாட்டம், இராஜஸ்தானில் “கச்சிகொடி” என அழைக்கப்படுகிறது.
  • பொய்க்கால் குதிரையாட்டம், கேரளாவில் “குதிரைக்களி” என அழைக்கப்படுகிறது.

தப்பு ஆட்டம் என்றால் என்ன

10TH TAMIL நிகழ்கலை
10TH TAMIL நிகழ்கலை
  • ‘தப்பு’ என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே, அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலையே தப்பாட்டமாகும்.
  • ஆண்கள் மட்டுமே இதில் ஆடி வந்தனர் தொடக்கத்தில். தற்போது பெண்களும் இதனை ஆடுகின்றனர்.
  • தப்பு ஆட்டத்தின் வேறு பெயர்கள் = பறை, தப்பாட்டம், தப்பட்டை, தப்பு.
  • தப்பு என்பது வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற தோற்கருவி.
  • ‘தப் தப்’ என்று ஒலிப்பதால், அந்த ஒலியின் அடியாகத் ‘தப்பு’ எனப் பெயர் பெற்றதெனக் கூறப்படுகிறது.
  • “பறை” என்று அழைக்கப்படும் ஆட்டம் = தப்பாட்டம்.

“தகக தகதகக தந்தத்த தந்தகக்

என்று தாளம்

பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக”

–    திருப்புகழ், 143

  • தப்பாட்ட இசையை குறித்து தனது நூலில் பதிவு செய்துள்ளவர் = அருணகிரிநாதர். தனது “திருப்புகழ்” நூலில் இதனை பதிவு செய்துள்ளார்.
  • ஒன்றைச் சொல்லுவதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி பறை.
  • “தாளக்கருவி” எனப்படும் இசைக்கருவி = பறை.
  • தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம்பெறுகிறது.
  • தப்பாட்டம் நிகழ்த்தப்படும் சூழலுக்கேற்ப அதன் இசைப்பு முறைகளும் ஆட்ட முறைகளும் வேறுபடுகின்றன.

தப்பாட்டத்தின் வகைகள்

  • தப்பாட்டத்தின் வகைகள் = வட்டமாக ஆடுதல், இரண்டு வரிசையாக எதிர்எதிர்த் திசையில் நின்று ஆடுதல், அனைவரும் நேர் வரிசையில் நின்று ஆடுதல், குதித்துக் குதித்து ஆடுதல், உட்கார்ந்து எழுதல், நடையாட்டம்.

புலி ஆட்டம் என்றால் என்ன

10TH TAMIL நிகழ்கலை
10TH TAMIL நிகழ்கலை
  • தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது = புலி ஆட்டம்.
  • பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் ஒன்று = புலியாட்டம்.
  • புலியைப் போன்று நடந்தும் பதுங்கியும் பாய்ந்தும் எம்பிக்குதித்தும் நாக்கால் வருடியும் பற்கள் தெரிய வாயைப்பிளந்தும் உறுமியும் பல்வேறு அடவுகளை வெளிப்படுத்துகின்றனர்.

தெருக்கூத்து

10TH TAMIL நிகழ்கலை
10TH TAMIL நிகழ்கலை
  • நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலை = தெருக்கூத்து.
  • நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஆட்டம் = தெருக்கூத்து.
  • இசையுடன் கூடிய உடல் அசைவியக்கத்துடன் தொடர்புடையது = தெருக்கூத்து.
  • இதில் ஒரு கதையை இசை, வசனம்,ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர்.
  • திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்படும் ஆட்டம் = தெருக்கூத்து.
  • வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது = தெருக்கூத்து.
  • மழை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருந்த தெருக்கூத்து = அருச்சுனன் தபசு.
  • பொழுதுபோக்கு கூறுகளை பெற்று தற்போது நாடகமாக வளர்ச்சியடைந்துள்ள ஆட்டம் = தெருக்கூத்து.
  • “கதகளி” போன்ற செவ்வியல் கலையாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ள ஆட்டம் = தெருக்கூத்து.

தோற்பாவைக் கூத்து

  • தோலில் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி, உரையாடியும் பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.
  • தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை என்னும் பெயர் பெற்றது.
  • “இசை, ஓவியம், நடனம், நாடகம், பலகுரலில் பேசுதல்” போன்றவை இணைந்த ஆட்டம் = தோற்பாவைக் கூத்து.
  • பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
  • “மரப்பாவை” பற்றிய குறிப்பு காணப்படும் நூல் = திருக்குறள்.
  • “தோற்பாவை” பற்றிய குறிப்புகள் காணப்படும் நூல்கள் = திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும்.
  • ஊர் ஊராகச் சென்று நிகழ்த்துகிற கூட்டுக்குடும்பக் கலையாகத் தோற்பாவைக் கூத்து விளங்குகிறது.
  • “கூட்டுக்குடும்ப கலை” எனப்படும் கூத்து = தோற்பாவைக் கூத்து.
  • தோற்பாவைக் கூத்து தற்போது எவ்வாறாக மாற்றம் பெற்றுள்ளது = கையுறைப் பாவைக் கூத்து, பொம்மலாட்டம்
  • பொம்மலாட்டமாக மாற்றம் பெற்றுள்ள கூத்து = தோற்பாவைக் கூத்து.

கூத்துப்பட்டறை ந. முத்துசாமி

10TH TAMIL நிகழ்கலை
10TH TAMIL நிகழ்கலை
  • “கலைஞாயிறு” என அழைக்கப்படுபவர் = கூத்துப்பட்டறை ந. முத்துசாமி.
  • தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் = கூத்துப்பட்டறை ந. முத்துசாமி.
  • “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றவர் = கூத்துப்பட்டறை ந. முத்துசாமி.
  • நாடகங்களின் பயன்படுத்தும் நேரடி இசை முறையை அறிமுகம் செய்தவர் = கூத்துப்பட்டறை ந. முத்துசாமி.
  • இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.
  • “கூத்துப்பட்டறை” என்ற நாடக இயக்கத்தை உருவாக்கியவர் = கூத்துப்பட்டறை ந. முத்துசாமி.

 

 

Leave a Reply