11TH TAMIL செல்வி

11TH TAMIL செல்வி

11TH TAMIL செல்வி
11TH TAMIL செல்வி

11TH TAMIL செல்வி

  • முத்தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து தம் நாட்டியத் திறமையினால் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர் = நர்த்தகி நடராஜ்.
  • தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சிகொண்டு நாட்டியக்கலையில் தமக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர் = நர்த்தகி நடராஜ்.
  • சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூடப் படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்குக் காட்டியவர் = நர்த்தகி நடராஜ்.

நர்த்தகி நடராஜ்

  • ஊர் = மதுரையை அடுத்த அனுப்பானடி.
  • இவரின் தோழியின் பெயர் = சக்தி
  • தன் தோழி சக்தி இல்லாமல் இந்த உயரத்திற்கு தன்னால் வர முடிந்திருக்காது என்கிறார் நர்த்தகி நடராஜ்.
  • இவரின் நடன ஆசிரியர் = தஞ்சை கிட்டப்பா
  • இவருக்கு “நர்த்தகி” என்று பெயரிட்டவர் = தஞ்சை கிட்டப்பா
  • சங்க காலத்தில் திருநங்கையர் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் உள்ளது.
  • சிலப்பதிகாரத்தில் 11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  • “அடுத்த ஜென்மத்தில் நான் தமிழனாகப் பிறந்து திருக்குறள் படிக்க வேண்டும்” என்பது = காந்தியின் ஆசை ஆகும்.
  • தான் வழக்கறிஞராக வேண்டும் என்று லட்சியம் கொண்டவர் நர்த்தகி.
  • “தாமரை நெஞ்சம்” என்ற நூலை எழுதியவர் = அகிலன்
  • அகிலனின் “தாமரை நெஞ்சம்” கதைநாயகி துக்கம் பொங்கி வரும் போதெல்லாம் ஒரு சொம்புத் தண்ணீர் குடிப்பாள்.
  • நர்த்தகி நடராஜ் நடத்தும் அறக்கட்டளை = வெள்ளியம்பலம் அறக்கட்டளை
  • “திருநங்கை” என்ற சொல்லை அறிமுகம் செய்தவர் = நர்த்தகி நடராஜ்
  • கடவுச்சீட்டு பெற்ற முதல் திருநங்கை = நர்த்தகி நடராஜ்
  • தேசிய விருது பெற்ற முதல் திருநங்கை = நர்த்தகி நடராஜ்
  • மதிப்புறு முனைவர் பெற்ற முதல் திருநங்கை = நர்த்தகி நடராஜ்

நர்த்தகி நடராஜ் பெற்ற விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • இந்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது
  • இந்திய அரசுத் தொலைக்காட்சியின் ஏ கிரேடு கலைஞர்
  • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சிறந்த கலைஞர்
  • தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்.
11TH TAMIL செல்வி
11TH TAMIL செல்வி

இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்

  • சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி மிகுந்த சிரமங்களுக்கிடையில் 2011 ஆம் ஆண்டு கணினிப் பாடப்பிரிவு இளநிலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
  • அவர் தற்போது சென்னையில் காவல்துறையின் சட்டம் – ஒழுங்குப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
  • இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் என்ற பெருமை பெற்றவர் = பிரித்திகா யாஷினி

லோக் அதாலத் நீதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை

  • மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் திருநங்கையான ஜோயிதா மோண்டல் மாகி.
  • இவர் திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றி வருகிறார்.
  • வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் லோக் அதாலத் நீதிபதியாக அண்மையில் ஜோயிதா மோண்டல் நியமிக்கப்பட்டார்.
  • லோக் அதாலத் நீதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை = ஜோயிதா மோண்டல்

தாரிகா பானு

  • தமிழ்நாட்டில், கல்வித்துறையில் மூன்றாம் பாலினப்பிரிவு உருவாக்கப்பட்ட பின்பு பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவர் தாரிகா பானு.
  • இவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரில், காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடப்பிரிவில் பயின்றார்.
  • 2017ஆம் ஆண்டு நடந்த மேல்நிலைப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், தற்போது அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார்.

 

Leave a Reply