11TH TAMIL நிறுத்தக்குறிகள்

Table of Contents

11TH TAMIL நிறுத்தக்குறிகள்

11TH TAMIL நிறுத்தக்குறிகள்
11TH TAMIL நிறுத்தக்குறிகள்

11TH TAMIL நிறுத்தக்குறிகள்

  • படித்தல் என்னும் திறனானது வரிவடிவத்தைக் காணுதல், முறையாக ஒலித்தல், பொருள் உணர்தல் ஆகிய மூன்று செயல்களை உள்ளடக்கியதாகும்.
  • இவற்றுள் எந்தச் செயலில் குறைவு ஏற்பட்டாலும் படித்தல் என்பது முழுமையடையாது.

முடிவுப்பகுதி அடையாளம் இடுதல்

  • பழங்காலத்தில் பனை ஓலைகளிலோ கல்வெட்டுகளிலோ ஒரு பாடல் அல்லது உரைநடைப் பகுதியை எழுதி முடித்ததும் அதனை எழுதி முடித்தமைக்கு அடையாளமாக அதன் இறுதியில் சுழியம் இடுதல் (0) அல்லது இணைக் கோடுகள் இடுதல்   ( // ) அல்லது கோடு இடுதல் ( / ) என்னும் வழக்கம் இருந்துள்ளது.

நிறுத்தக்குறிகள்

  • நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகம் செய்தவர்கள் = ஐரோப்பியர்கள்
  • பல்வேறு வகையான நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகப்படுத்தி எவ்வெவ்விடங்களில் அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென விளக்கியவர்கள் ஐரோப்பியர்களே ஆவர். தமிழ்மொழியின் இலக்கண நெறிகளுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்திச் சொற்றொடர்களைப் பிரித்துப் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நிறுத்தக்குறிகள் பயன்கள்

  • நிறுத்தற் குறிகள், வெறும் அடையாளங்கள் அல்ல. அவை பொருள் பொதிந்தவை.
  • மக்களது உணர்வின் இயக்கமாக விளங்குவது மொழி.
  • மொழியின் தெளிவை உணர்த்த, நிறுத்தல்களும் குறியீடுகளும் அடையாளங்களாகும்.
  • நிறுத்தற்குறிகள், ஒரு தொடரிலுள்ள பொருள் வேறுபாட்டை உணர்த்துவதற்கு அடிப்படையாகும்.
  • மொழியைத் தெளிவாகப் பேசவும் எழுதவும் நிறுத்தற்குறிகள் துணை நிற்கின்றன.
  • நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்திப் படிக்க முயலும்போது, தெளிவாகப் பொருள் உணர்ந்து, படிப்பவர்களும், கேட்பவர்களும் பயன்பெறுவர்.

நிறுத்தக்குறிகள் வகைகள்

  • நிறுத்தக்குறிகளில் பல்வேறு வகையான குறிகள் உள்ளன. அவற்றில், சில
    1. காற்புள்ளி ( , )
    2. அரைப்புள்ளி ( ; )
    3. முக்காற்புள்ளி ( : )
    4. முற்றுப்புள்ளி ( . )
    5. வினாக்குறி ( ? )
    6. வியப்புக்குறி ( ! )
    7. விளிக்குறி ( ! )
    8. மேற்கோள்குறி
      • ஒற்றை மேற்கோள் குறி ( ‘ ‘ )
      • இரட்டை மேற்கோள் குறி ( “ “ )

காற்புள்ளி என்றால் என்ன

  • காற்புள்ளி ( , )
  • பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச்சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி வருதல் வேண்டும்.

காற்புள்ளி எடுத்துக்காட்டுகள்

  • அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப்பேறு நான்கு.
  • நாம் எழுதும்போது, பிழையற எழுத வேண்டும்.
  • இனியன் நன்கு படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான்.
  • ஐயா; அம்மையீர்,
  • சிறியவன் பெரியவன், செல்வன் ஏழை.

அரைப்புள்ளி என்றால் என்ன

  • அரைப்புள்ளி (;)
  • தொடர்நிலைத் தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி வருதல் வேண்டும்.

அரைப்புள்ளி எடுத்துக்காட்டுகள்

  • வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.
  • சீர் – மாறுபாடு இல்லாதது; அளவு; இயல்பான தன்மை ; ஒழுங்கு ; சமம்; நேர்த்தி; அழகு; சீதனம்; செய்யுளின் உறுப்பு.

முக்காற்புள்ளி என்றால் என்ன

  • முக்காற்புள்ளி ( : )
  • சிறுதலைப்பு, நூற்பகுதி எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் முக்காற்புள்ளி வருதல் வேண்டும்.

முக்காற்புள்ளி எடுத்துக்காட்டுகள்

முற்றுப்புள்ளி என்றால் என்ன

  • முற்றுப்புள்ளி ( . )
  • முற்றுப்புள்ளி வரும் இடங்களாவன,
    • தொடரின் இறுதி
    • முகவரி இறுதி
    • சொற்குறுக்கம்
    • நாள்

முற்றுப்புள்ளி எடுத்துக்காட்டுகள்

  • உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
  • தலைமையாசிரியர், அரசு மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
  • தொல்.சொல்.58.
  • 18/02/2018.

வினாக்குறி என்றால் என்ன

  • வினாக்குறி ( ? )
  • ஒரு வினாத்தொடர், முற்றுத்தொடராகவும் நேர் கூற்றுத் தொடராகவும், இருப்பின், இறுதியில் வினாக்குறி வருதல் வேண்டும்.

வினாக்குறி எடுத்துக்காட்டுகள்

  • அது என்ன ? (முற்றுத்தொடர் )
  • நீ வருகிறாயா? என்று கேட்டான். (நேர்கூற்றுத் தொடர்)

வியப்புக்குறி என்றால் என்ன

  • வியப்புக்குறி (!)
  • வியப்புக்குறி , வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பும் நேர் கூற்று வியப்புத்தொடர் இறுதியிலும் அடுக்குச் சொற்களின் பின்னும் வியப்புக்குறி வருதல் வேண்டும்.

வியப்புக்குறி எடுத்துக்காட்டுகள்

  • எவ்வளவு உயரமானது! (வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பு)
  • என்னே தமிழின் பெருமை! என்றார் கவிஞர் (நேர் கூற்று வியப்புத்தொடர் இறுதியில்)
  • வா! வா! வா! போ! போ! போ! (அடுக்குச் சொற்களின் பின்)

விளிக்குறி என்றால் என்ன

  • விளிக்குறி ( ! )
  • அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் விளிக்குறி பயன்படுத்த வேண்டும்.
  • வியப்புக்குறியும் விளிக்குறியும் ஒரே அடையாளக்குறி உடையன.
  • எடுத்துக்காட்டுகள்
    • அவையீர்!
    • அவைத்தலைவீர்!

மேற்கோள்குறி வகைகள்

  • மேற்கோள் குறி இரண்டு வகைப்படும். அவை,
    • ஒற்றை மேற்கோள் குறி ( ‘ ‘ )
    • இரட்டை மேற்கோள் குறி ( “ “ )

ஒற்றை மேற்கோள் குறி

  • ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைப்பெயர், நூற்பெயர் குறிக்கும் இடம், பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் ஒற்றைக்குறி வருதல் வேண்டும்.

ஒற்றை மேற்கோள் குறி எடுத்துக்காட்டுகள்

  • ‘ஏ’ என்று ஏளனம் செய்தான். (தன்னை குறிக்கும் இடம்)
  • பேரறிஞர் அண்ணா ‘செவ்வாழை என்னும் சிறுகதை எழுதினார். (கட்டுரைப் பெயர் குறிப்பிடும் இடம்)
  • ‘கம்பனும் மில்டனும்’ என்னும் நூல் சிறந்த ஒப்பீட்டு நூல் ஆகும். (நூல் பெயர் குறிப்பிடப்படும் இடம்)
  • ‘செவிச்செல்வம் சிறந்த செல்வம்’ என்பர். (கூற்றுப்பகுதிகளை சுட்டுதல்)

இரட்டை மேற்கோள் குறி

  • நேர்கூற்றுகளிலும் மேற்கோள்களிலும் இரட்டைக்குறி வருதல் வேண்டும்.
  • எடுத்துக்காட்டுகள்
    • “நான் படிக்கிறேன்” என்றான்.
    • “ஒழுக்கமுடைமை குடிமை” என்றார்.

 

Leave a Reply