8TH TAMIL நிறுத்தற்குறிகள்

8TH TAMIL நிறுத்தற்குறிகள்

8TH TAMIL நிறுத்தற்குறிகள்

8TH TAMIL நிறுத்தற்குறிகள்

  • தமிழ் மொழியில் எழுதும் பொழுது இடப்பட வேண்டிய நிறுத்தற்குறிகள் பற்றிய குறிப்புகளை காண்போம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

காற்புள்ளி ( , )

8TH TAMIL நிறுத்தற்குறிகள்
8TH TAMIL நிறுத்தற்குறிகள்
  • பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும்.
    • (எ.கா) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள்.
  • கடிதத்தில் விளி முன் காற்புள்ளி வரும்.
    • (எ.கா.) அன்புள்ள நண்பா,
  • வினையெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும்.
    • (எ.கா.) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.
  • மேற்கோள் குறிகளுக்கு (“) முன் காற்புள்ளி வரும்.
    • (எ.கா.) குழந்தை நிலவைப் பார்த்து,” நிலா நிலா ஓடி வா” என்று பாடியது.
  • முகவரியில் இறுதி வரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியில் காற்புள்ளி வரும்.
    • (எ.கா.) ச. ஆண்டாள், எண் 45, காமராசர் தெரு, திருவள்ளூர்.

அரைப்புள்ளி ( ; )

8TH TAMIL நிறுத்தற்குறிகள்
8TH TAMIL நிறுத்தற்குறிகள்
  • ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
    • (எ.கா.) கரிகாலன் கங்கை வரை படையெடுத்துச் சென்றான்; கனக விசயருடன் போரிட்டான்.
  • உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாகக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
    • (எ.கா.) நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்.

முக்காற்புள்ளி ( : )

8TH TAMIL நிறுத்தற்குறிகள்
8TH TAMIL நிறுத்தற்குறிகள்
  • சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முக்காற்புள்ளி வரும்.
    • (எ.கா.) முத்தமிழ் : இயல், இசை, நாடகம்.

முற்றுப்புள்ளி ( . )

8TH TAMIL நிறுத்தற்குறிகள்
8TH TAMIL நிறுத்தற்குறிகள்
  • சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி வரும்.
    • (எ.கா.) கல்வியே மனிதனின் வாழ்வை உயர்த்தும்.
  • சொற்குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
    • (எ.கா) திரு. வி. க.
    • மா. க. அ.
    • ஊ. ஒ. ந. நி. பள்ளி
  • பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
    • (எ.கா.) நெ. து. சுந்தரவடிவேலு

வினாக்குறி ( ? )

8TH TAMIL நிறுத்தற்குறிகள்
8TH TAMIL நிறுத்தற்குறிகள்
  • வினாப்பொருளை உணர்த்தும் வாக்கியத்தின் இறுதியில் வினாக்குறி இட வேண்டும்.
    • (எ.கா.) சேக்கிழார் எழுதிய நூல் எது?

வியப்புக்குறி ( ! )

8TH TAMIL நிறுத்தற்குறிகள்
8TH TAMIL நிறுத்தற்குறிகள்
  • மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.
  • (எ.கா.)
    • தமிழின் இனிமைதான் என்னே! = வியப்பு
    • பாம்பு! பாம்பு! = அச்சம்
    • அந்தோ! இயற்கை அழிகிறதே! = அவலம்

ஒற்றை மேற்கோள் குறி ( ‘ ‘ )

8TH TAMIL நிறுத்தற்குறிகள்
8TH TAMIL நிறுத்தற்குறிகள்
  • தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும்போதும், இரட்டை மேற்கோள் குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும்போதும் ஒற்றை மேற்கோள் பயன்படும்.
  • (எ.கா.)
    • ‘நல்ல’ என்பது குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
  • கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது ‘தலைப்பில்லை’ என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்.

இரட்டை மேற்கோள் குறி ( “ “ )

8TH TAMIL நிறுத்தற்குறிகள்

  • நேர்கூற்றுகளிலும் செய்யுள் அடிகளையோ பொன்மொழிகளையோ குறிப்பிடும் இடங்களிலும் இரட்டை மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டும்.
  • (எ.கா.)
    • திரு. வி.க. மாணவர்களிடம்,” தமிழ்க் காவியங்களைப் படியுங்கள்; இன்பம் நுகருங்கள்” என்று கூறினார்.

 

 

 

 

 

Leave a Reply