8TH TAMIL எச்சம்

8TH TAMIL எச்சம்

8TH TAMIL எச்சம்

8TH TAMIL எச்சம்

  • படித்தான், படித்த, படித்து
  • மேற்கண்ட சொற்களில் படித்தான் என்ற சொல்லில் பொருள் முற்றுப் பெற்றுள்ளது.
  • ஆனால் படித்த, படித்து என்ற சொற்களில் பொருள் முற்றுப் பெறவில்லை.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

எச்சம் என்றால் என்ன

  • பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல், “எச்சம்” எனப்படும்.

எச்சம் எத்தனை வகைப்படும்

  • எச்சம் மூன்று வகைப்படும். அவை,

பெயரெச்சம் என்றால் என்ன

8TH TAMIL எச்சம்
8TH TAMIL எச்சம்
  • எச்சம் பெயரைக் கொண்டு முடிந்தால் அது “பெயரெச்சம்” எனப்படும்.
  • எ.கா:
      • படித்த மாணவன்.
      • படித்த பள்ளி.
  • பெயரெச்சம் மூன்று காலங்களிலும் வரும்.
  • எ.கா:
      • பாடிய பாடல் = இறந்தகாலப் பெயரெச்சம்
      • பாடுகின்ற பாடல் = நிகழ்காலப் பெயரெச்சம்
      • பாடும் பாடல் = எதிர்காலப் பெயரெச்சம்

தெரிநிலைப் பெயரெச்சம் என்றால் என்ன

  • செயலையும் காலத்தையும் வெளிப்படையாக காட்டும் பெயரெச்சம் “தெரிநிலைப் பெயரெச்சம்” எனப்படும்.
  • எ.கா;
    • எழுதிய கடிதம்
  • இதில் “எழுதிய” = எழுதுதல் என்ற செயலையும், இறந்த காலத்தையும் வெளிப்படையாக காட்டுகிறது.

குறிப்புப் பெயரெச்சம் என்றால் என்ன

8TH TAMIL எச்சம்
8TH TAMIL எச்சம்
  • ஒரு செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம் “குறிப்புப் பெயரெச்சம்” எனப்படும்.
  • எ.கா;
    • சிறிய கடிதம்
  • இதில் “சிறிய” என்னும் சொல் செயலையோ, காலத்தையோ வெளிப்படையாக காட்டாமல் பண்பினை மட்டும் காட்டுகிறது.

வினையெச்சம் என்றால் என்ன

8TH TAMIL எச்சம்
8TH TAMIL எச்சம்
  • வினையை (செயலை) கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
  • எ.கா:
    • படித்து முடித்தான்
    • படித்து வியந்தான்.

தெரிநிலை வினையெச்சம் என்றால் என்ன

  • செயலையும் காலத்தையும் வெளிப்படையாக காட்டும் வினையெச்சம் “தெரிநிலை வினையெச்சம்” எனப்படும்.
  • எ.கா:
    • எழுதி வந்தான்
  • இதில் “எழுதி” என்ற சொல் எழுதுதல் என்ற செயலையும், இறந்த காலத்தையும் வெளிப்படையாக காட்டுகிறது.

குறிப்பு வினையெச்சம் என்றால் என்ன

8TH TAMIL எச்சம்
8TH TAMIL எச்சம்
  • ஒரு செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் வினையெச்சம் “குறிப்பு வினையெச்சம்” எனப்படும்.
  • எ.கா:
    • மெல்ல வந்தான்
  • இத்தொடரில் “மெல்ல” என்னும் சொல் காலத்தை வெளிப்படையாக காட்டாமல் “மெல்ல” என்ற பண்பினை மட்டுமே வெளிப்படையாக காட்டுகிறது.

முற்றெச்சம் என்றால் என்ன

  • ஒரு வினைமுற்று எச்சப் பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது “முற்றெச்சம்” எனப்படும்.
  • எ.கா:
    • வள்ளி படித்தனள்
  • இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் “படித்தாள்” என்னும் வினைமுற்றுப் பொருளை தருகிறது.
  • எ.கா:
    • வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்
  • இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது.

 

 

8TH TAMIL

 

 

Leave a Reply