TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 23, 2021

Table of Contents

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 23, 2021
       TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 23, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 23, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்தியா

சேலா சுரங்கப்பாதை:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • சமீபத்தில், எல்லை சாலைகள் அமைப்பு (BRO) அருணாச்சலப் பிரதேசத்தில் கட்டப்பட்டு வரும் உள்ள சேலா சுரங்கப்பாதைக்கான (SELA TUNNEL) கடைசி குண்டுவெடிப்பை நடத்தியது.
  • இந்தியப் பிரதமர் 2019 பிப்ரவரியில் சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார். பாலிபாரா-சரிடுவர்-தவாங் சாலை வழியாக அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கிற்கு இணைப்பை வழங்கும் வகையில் அணைத்து வானிலை நிலையையும் தாங்கும் திறன் கொண்ட வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
  • அணுகுமுறை சாலைகள் 8.8 கி.மீ தவிர, 1,555 மீட்டர் இரு வழி குழாய் மற்றும் 980 மீட்டர் வெளியேறும் குழாய் (A two-way tube of 1,555 meters and an escape tube of 980 meters, besides 8.8 kms of approach roads) ஆகியவை கட்டப்படுகின்றன. இது 13,000 அடிக்கு மேல் உயரத்தில் உலகின் மிக நீளமான இருவழி சாலை (On completion, it will be the longest bi-lane road tunnel in the world at an altitude above 13,000 feet) சுரங்கப்பாதையாக இருக்கும்.

உலகம்

வர்த்தக வசதி குறித்த 4 வது உலகளாவிய ஆய்வு:

  • ஐக்கிய நாடுகளின் “டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த 4 வது உலகளாவிய ஆய்வு 2௦21” (United Nations 4th Global Survey on Digital and Sustainable Trade Facilitation 2021) வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வை ஐக்கிய நாடுகளின் ஆசிய பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP = United Nation’s Economic and Social Commission for Asia Pacific) மேற்கொண்டது
  • இந்த ஆய்வில் 143 நாடுகளின் வர்த்தக வசதி பற்றி ஆய்விடப்பட்டது.
  • இதில் 2௦19 ஆம் ஆண்டினை காட்டிலும், 2௦21 ஆம் ஆண்டு இந்தியாவின் மதிப்பு 78.49 % இருந்து 90.32 % ஆக உயர்ந்துள்ளது.

வேளாண் தொழில்நுட்ப சவால்கள் 2௦21:

  • ஐக்கிய நாடுகள் முதலீட்டு மேம்பாட்டு நிதியம், நிதி ஆயோக், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிதியம், வேளாண் மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகள் இணைந்து ஆசிய மற்றும் ஆப்ரிக்க கண்டங்களில் உள்ள சிறு விவசாயிகள் சந்திக்கும் வேளாண் சவால்களை கண்டறிய “வேளாண் தொழில்நுட்ப சவால்கள் 2௦21” (AGRITECH CHALLENGE 2021, to address the challenges faced by the farmers in Asia and Africa) என்ற இயக்கத்தை செயல்படுத்த உள்ளனர்.

சர்வதேச சூரியக் கூட்டமைப்பில் இணைந்த ஸ்வீடன்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள ஸ்வீடன், “சர்வதேச சூரியக் கூட்டமைப்பில்” (ISA – International Solar Alliance) இணைந்துள்ளது.
  • சர்வதேச சூரியக் கூட்டமைப்பு, இந்தியாவினால் உருவாக்கப்பட்டதாகும். இந்த அமைப்பின் தலைமையகம், ஹரியானா மாநிலத்தின் குருக்ராமில் உள்ளது.

முதன்முதல்

மோனா – மெக்காவில் பாதுகாப்பு அதிகாரியாக முதல் பெண்மணி:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்த ஆண்டு ஹஜ்ஜில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் யாத்ரீகர்கள் பங்கேற்று வருவதால், சவூதி பெண் வீரர்கள், முதன்முறையாக மக்காவில் (Saudi female soldiers, for the very first time, were standing guard in Mecca) பாதுகாப்பாக நின்றனர். இராணுவ காக்கி சீருடையில் அணிந்த பெண்கள் வீரர்கள் மக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் பாதுகாப்பு நிலைமையை வருகின்றனர்.
  • இதன்படி, மெக்காவில் பாதுகாப்பு பணியாற்றும் முதல் பெண் அதிகாரி என்ற சிறப்பை பெற்றுள்ளார், “மோனா”. (Mona is the first female security guard to be posted as a soldier in Makkah)

சீனாவின் முதல் பசுமை ஆடு வளர்ப்பு நகரம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • ஜீலிங்கோல் லீக் சீனாவின் முதல் பசுமை செம்மறி ஆடு வளர்ப்பு நகரமாக மாறியுள்ளது / Xilingol League has become China’s first green sheep-farming city
  • புல்வெளி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை செம்மறி வளர்ப்பில் அதன் முயற்சிகளுக்கு நாட்டின் முதல் பசுமை செம்மறி ஆடு வளர்ப்பு நகரமாக மாறியது

விளையாட்டு

பாரா ஷூட்டர் ரூபினா பிரான்சிஸ் புதிய உலக சாதனை:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாரா ஷூட்டர் ரூபினா பிரான்சிஸ், பெருவில் நடைபெற்ற பாரா விளையாட்டு போட்டிகளில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் / Madhya Pradesh shooter, Rubina Francis has set a world record at the ongoing Para Sport Cup in Peru.
  • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பாரா நிகழ்வில் தங்கம் வென்றுள்ளார். 238.1 புள்ளிகளைப் பெற்ற அவர், துருக்கியின் அய்ஸெகுல் பெஹ்லிவன்லரின் உலக சாதனையை முறியடித்தார்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்:

  • ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் துவங்கின.
  • 204 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் கலந்துக் கொள்கின்றனர்
  • இந்த ஒலிம்பிக் போட்டிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட விளையாட்டுக்கள் = கராத்தே, ஸ்கேட்போர்டிங் போன்றவை.
  • பண்டைய ஒலிம்பிக்கின் விருந்தினராகவும், முதல் நவீன ஒலிம்பிக் நாடாகவும் இருந்ததால், ஒலிம்பிக் திறப்பு விழாவில் நாடுகளின் அணிவகுப்பில் கிரீஸ் எப்போதும் முதல் நாடாக கொடி ஏந்தி வரும்.
  • ஒலிம்பிக் விழாவினை நடத்தும் நாடே, இறுதியாக கொடி ஏந்தி வரும். அதன்படி, இறுதியாக ஜப்பான் தனது தேசியக் கொடியை ஏந்தி வந்தது.

நாட்கள்

தேசிய ஒலிபரப்பு நாள்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • ஜூலை 23, 1927 அன்று, இந்தியாவில் முதல் வானொலி ஒலிபரப்பு பம்பாய் (இப்போது மும்பை) நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டது. அப்போதிருந்து, இந்த நாள் தேசிய ஒளிபரப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது / On July 23, 1927, the first-ever radio broadcast in India went on-air from the Bombay (now Mumbai) station. Since then, this day has been observed as National Broadcasting Day.
  • அகில இந்திய வானொலி (AIR – ALL INDIA RADIO) உலகின் மிகப்பெரிய வானொலி வலையமைப்பு ஆகும். நாடு முழுவதும் 479 நிலையங்களைக் கொண்ட இது இந்தியாவின் பரப்பளவில் 92 சதவீதத்தை எட்டியுள்ளது மற்றும் நாட்டின் மக்கள் தொகையில் 19 சதவீதத்தை அணுகக்கூடியது

தேசிய மாம்பழ தினம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • ஜூலை 22 தேசிய மாம்பழ தினமாக (NATIONAL MANGO DAY (OR) MANGO DAY) அல்லது மாம்பழ தினமாக கொண்டாடப்படுகிறது.
  • மா மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்றாகும். இது ஒரு பழம் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஒரு பகுதியாகும்

சந்திர சேகர ஆசாத் பிறந்த தினம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • சந்திர சேகர ஆசாத் எனப்படும் சந்திர சேகர திவாரியின் பிறந்த தினம் ஜூலை 23 அம தேதி ஆகும்.
  • தனது 15 வயதில், 1920 ல் மகாத்மா காந்தி தலைமையில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். ராம் பிரசாத் பிஸ்மில் நிறுவிய இந்துஸ்தான் குடியரசுக் கழகத்தில் (எச்.ஆர்.ஏ) சேர்ந்தார்.
  • 1925 ஆம் ஆண்டு ககோரி ரயில் கொள்ளை மற்றும் லாலா லஜ்பத் ராய் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக 1928 இல் ஜான் சாண்டர்ஸ் படுகொலை ஆகியவற்றில் அவர் ஈடுபட்டார்.
  • டிசம்பர் 20, 1921 அன்று ஒத்துழையாமை இயக்கத்தின் போது அவர் கைது செய்யப்பட்டபோது, சந்திரசேகர் ஆசாத் தனது பெயரை “ஆசாத்” என்றும் தந்தையின் பெயர் “ஸ்வதந்திராதா” (சுதந்திரம்) என்றும், அவரது குடியிருப்பு “சிறை” என்றும் கூறினார்.

பாலகங்காதர் திலகர் பிறந்த தினம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • பால கங்காதர் திலக் ஒரு இந்திய தேசியவாதி, ஆசிரியர் மற்றும் சுதந்திர ஆர்வலர் ஆவார். ஜூலை 23, 1856 இல் பிறந்த திலக் இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடி தலைவராக இருந்தார்
  • திலக் 1890 இல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார் மற்றும் பிபின் சந்திர பால் மற்றும் லாலா லஜ்பத் ராய் உள்ளிட்ட பல இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கமான கூட்டணியை உருவாக்கினார், மேலும் இந்த மூவரும் பிரபலமாக லால் பால் பால் என்று அழைக்கப்பட்டனர். அரவிந்தோ கோஸ், வி. ஓ. சிதம்பரம் பிள்ளை மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோருடன் அவர் ஒரு கூட்டணியை உருவாக்கினார்.
  • அவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவருக்கு “லோக்மண்யா” என்ற பட்டமும் வழங்கப்பட்டது, அதாவது “மக்களால் அவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
  • பால் கங்காதர் திலக் ஸ்வராஜ் (சுதந்திரம்) என்ற கருத்தை வலுவாக ஆதரிப்பவர்களில் ஒருவராக இருந்தார், மேலும் “ஸ்வராஜ்யம் எனது பிறப்புரிமை, நான் அதை அடைந்தே தீருவேன்” என்ற பிரபலமான முழக்கத்தை வழங்கியிருந்தார்.

புத்தகம்

ஒபாமாவின் புதிய புத்தகம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • அமெரிக்காவின் முன்னால் அதிபரான “பாரக் ஒபாமா” மற்றும் “புரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீன்” ஆகியோர் சேர்ந்து எழுதி “Renegades : Born in the USA” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளனர்
  • இப்புத்தகத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் இவர்களின் வாழ்க்கை தொடக்கம் முதல் அமெரிக்க அரசியல் வரை கூறப்பட்டுள்ளது.

மறைவு

கேரளாவின் பகிரதி அம்மா காலமானார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • கேரளாவை சேர்ந்த பகிரதி அம்மா, தனது 1௦7 வது வயதில் காலமானார். இவர் தனது 4 ஆம் வகுப்பு தேர்ச்சியினை 1௦5 வது வயதில் எழுதி தேர்ச்சி பெற்று நாடு முழுவதும் பெறும் பிரபலமானார். “கேரளாவின் வயதான கற்றவர்” எனப்படுபவர் இவர் / Kerala’s Oldest Learner, Bhageerathi Amma passed away.
  • கல்வியின் சிறப்பை கூறும் விதமாக, இவரை புகழ்ந்து பிரதமர் அவர்கள் பாராட்டியுள்ளார். மத்திய அரசால் இவருக்கு “நாரி சக்தி புரஸ்கார்” விருது வழங்கப்பட்டுள்ளது.

இராணுவம்

கடற்பயிற்சி “PASSEX”:

  • இந்திய வங்கக் கடல் பகுதியில், இந்திய கடற்படையும், இங்கிலாந்து கடற்படையும் இணைந்து 2 நாட்கள் மேற்கொண்ட “கடற்சார் பயிற்சி PASSEX” (MARITIME BILATERAL PASSAGE EXERCISE (PASSEX)) நிறைவு பெற்றது
  • இந்தியாவின் சார்பில் சாத்புரா, கவராட்டி மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் பங்கேற்றன

திட்டம்

CAVACH திட்டம்:

  • இந்தியாவின் என்.எஸ்.சி அமைப்பு , நிதி ஆயோக் உடன் ஐக்கிய நாடுகளின் யுனிசெப் அமைப்பும் சேர்ந்து, இந்தியாவின் 5 முன்மாதிரி மாவட்டங்களில் CAVACH (COVID-19 VACCINATION CAMPAIGN – PROJECT CAVACH) என்ற கொரோனோ தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை துவக்கியுள்ளன.
  • CAVACH = COVID-19 AND VACCINATION ASSISTANCE CAMPAIGN FOR HEALTH
  • இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியாவின் 5 மாவட்டங்கள்,
    1. நண்டுர்பார் – மகாராஷ்டிரா
    2. ஒஸ்மானாபாத் – மகாராஸ்டிரா
    3. காராளி – ராஜஸ்தான்
    4. இராமநாதபுரம் – தமிழ்நாடு
    5. கிபிரே – நாகாலாந்து

பிரதமரின் “பி.எம். கேர்” திட்டம்:

  • கோவிட் -19 தொற்றுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக மத்திய அரசு ஒரு போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன் மூலம் “பி.எம். கேர்” திட்டத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி அரசால் அளிக்கப்பட உள்ளது
    1. COVID-19 காரணமாக பெற்றோர் அல்லது தனியாக எஞ்சியிருக்கும் பெற்றோர் அல்லது வளர்ப்பு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் ஆகிய இருவரையும் இழந்த குழந்தைகளுக்கான பிரதமர் மோடி 2021 மே 29 அன்று PM CARES நிதியத்தின் கீழ் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.
    2. அரசாங்கத்தின் இந்த திட்டம் ஒவ்வொரு குழந்தைக்கும் 18 வயது ஆகும்போது 10 லட்சம் வழங்கும்
    3. உயர்கல்விக்கு உதவுவதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு 18 வயதிலிருந்து மாதாந்திர உதவித்தொகையை வழங்க இந்த தொகை பயன்படுத்தப்படும்
    4. பயனாளி, தனது 23 வயதில், முழு கார்பஸ் தொகையையும் ஒரே தொகையாகப் பெறுவார்.
    5. பள்ளி கல்விக்கு மத்திய அரசும் உதவும், மேலும் சுகாதார காப்பீட்டுத் தொகையை ரூ. 5 லட்சம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வழங்கப்படும்.

Nidhi4Covid 2.0 திட்டம்:

  • இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, “தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நுழைவு மேம்பாட்டு வாரியம்” (NSTEDB = NATIONAL SCIENCE AND TECHNOLOGY ENTERPRENURSHIP DEVELOPMENT BOARD) சார்பில் Nidhi4Covid 2.0 என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது
  • இது உள்நாட்டு தீர்வுகள் மற்றும் புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

விருதுகள்

இந்திய கவுன்சில் வேளாண் ஆராய்ச்சி விருதுகள்:

  • இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR – Indian Council of Agricultural Research) ஒவ்வொரு ஆண்டும் நிறுவனங்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகளை அங்கீகரித்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
  • இந்த ஆண்டு 6௦ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 12 விருதுகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    1. சர்தார் படேல் சிறந்த ஐ.சி.ஏ.ஆர் இன்ஸ்டிடியூஷன் விருது 2020 (சிறிய நிறுவனங்கள் பிரிவின் கீழ்) = ஐ.சி.ஏ.ஆர்-வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம், திருச்சிராப்பள்ளி,
    2. ஐ.சி.ஏ.ஆர் நார்மன் போர்லாக் விருது 2௦22 = கொச்சியின் ஐ.சி.ஏ.ஆர்-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், கடல் உயிரி தொழில்நுட்ப பிரிவு முதன்மை விஞ்ஞானி டாக்டர் காஜல் சக்ரவர்த்தி
    3. பெரிய நிறுவனம் என்ற பிரிவில் சிறந்த வருடாந்திர அறிக்கை விருது -2020 ஐ.சி.ஏ.ஆர் = Central Institute of Brakishwater Aquaculture, Chennai.

நியமனம்

தமிழக மத்திய பலகலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்:

  • இந்தியாவில் உள்ள பல்வேறு மத்தியப் பலகலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
  • இதன் படி, தமிழகத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக “பேராசிரயர் முத்துகலிங்கன் கிருஷ்ணன்” நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இடங்கள்

பெங்களூரு ரயில்நிலையத்தில் அப்துல்கலாம் சிலை நிறுவப்பட்டது:

  • தென்மேற்கு ரயில்வேயின் எஸ்வந்த்பூர் ரயில்நிலைய பணிமனையில், “டாகட்ர் அப்துல் கலாம்” உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. 800 கிலோ எடையில் 7.8 அடி உயரத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது / The Bengaluru division of South Western Railway has installed a 8 ft
  • high and 800 kg statue of Dr. Abdul Kalam at Yesvantpur depot.
  • ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்றும் அழைக்கப்படும் டாக்டர் அப்துல் கலாமின் மார்பளவு சிலை, ஸ்கிராப் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply