11TH TAMIL சீறாப்புராணம்

11TH TAMIL சீறாப்புராணம்

11TH TAMIL சீறாப்புராணம்
11TH TAMIL சீறாப்புராணம்

11TH TAMIL சீறாப்புராணம்

  • அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று இலக்கியம் சீறாப்புராணம்.
  • இது தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியமாகும்.
  • பகையும் வறுமையும் நோயும் தீண்டாப் பொருள்வளம் நிறைந்த மதீனா நகரில் தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைச் செலவியற் காண்டம் (ஹிஜிறத்துக் காண்டம்) காட்சிப்படுத்துகிறது.

ஹிஜிறத்துக் காண்டம்

  • மதீனம் புக்க படலம் இடம்பெற்றுள்ள காண்டம் = ஹிஜிறத்துக் காண்டம்.
  • ஹிஜிறத் என்ற அரபுச் சொல்லுக்கு இடம்பெயர்தல் என்பது பொருள்.
  • நபிகள் நாயகத்திற்குக் கொடுமைகள் செய்த மக்கள் = குறைசி இன மக்கள்

அருஞ்சொற்பொருள்

  • வரை – மலை
  • கம்பலை – பேரொலி
  • புடவி – உலகம்
  • எய்தல் – அடைதல்
  • துன்ன – நெருங்கிய
  • வாரணம் – யானை
  • பூரணம் – நிறைவு
  • நல்கல் – அளித்தல்
  • வதுவை – திருமணம்
  • கோன் – அரசன்
  • மறுவிலா – குற்றம் இல்லாத
  • தெண்டிரை – தெள்ளிய நீரலை
  • விண்டு – திறந்து
  • மண்டிய – நிறைந்த
  • தீன் – மார்க்கம்.

இலக்கணக்குறிப்பு

  • மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த = பெயரெச்சங்கள்
  • இடன் = ஈற்றுப் போலி
  • பெரும்புகழ், தெண்டிரை = பண்புத்தொகைகள்
  • பொன்னகர் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • மாநகர், உறுபகை = உரிச்சொல் தொடர்கள்
  • தானமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் = எண்ணும்மைகள்

சீறாப்புராணம் நூல் குறிப்பு

  • இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம்.
  • ‘சீறா’ என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும்.
  • இதற்கு ‘வாழ்க்கை ‘ என்பது பொருள்.
  • புராணம் – வரலாறு.
  • நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார் என்பர்.
  • இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது.
  • நூலை முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் ‘பனி அகமது மரைக்காயர்’ இதன் தொடர்ச்சியாக சின்னச்சீறா என்ற நூலைப் படைத்துள்ளார்.
  • உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
  • நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார்.
  • வள்ளல் சீதக்காதி, அபுல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை ஆதரித்தனர்.
  • சீறாப்புராணம் பற்றி மேலும் அறிந்துக்
    கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

 

 

Leave a Reply