12TH STANDARD TAMIL புறநானூறு

12TH STANDARD TAMIL புறநானூறு

12TH STANDARD TAMIL புறநானூறு

12TH STANDARD TAMIL புறநானூறு

  • குடிமக்களின் உளப்பாங்கை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஆட்சி புரிபவனே சிறந்த அரசன். மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசன் செயல்படுவது நாட்டின் வளர்சிகுக் கேடு விளைவிக்கும்.
  • அரசனை நல்வழிப்படுத்தும் பெரும் பொறுப்பைச் சங்கப் புலவர்கள் மேற்கொண்டனர்.

அருஞ்சொற்பொருள்

  • காய் நெல் – விளைந்த நெல்
  • மா – ஒருநில அளவு (ஓர் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு)
  • செறு – வயல்
  • தமித்து – தனித்து
  • புக்கு – புகுந்து
  • யாத்து – சேர்த்து
  • நந்தும் – தழைக்கும்
  • வரிசை – முறைமை
  • கல் – ஒலிக்குறிப்பு
  • பரிவு – அன்பு
  • தப – கெட
  • பிண்டம் – வரி
  • நச்சின் – விரும்பினால்

இலக்கணக்குறிப்பு

  • காய்நெல் –  வினைத்தொகை
  • புக்க –  பெயரெச்சம்
  • அறியா –  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பாடான் திணை

  • ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்

செவியறிவுறூஉ துறை

  • அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ துறை ஆகும்.

புறநானூறு

  • இப்பாடப்பகுதி புறநானூற்றின் 184ஆவது பாடல் ஆகும்.
  • புறநானூறு புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்பெறுகிறது.
  • பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது.
  • முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள், போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்தும் இந்நூலை 1894ஆம் ஆண்டு உவே.சா. அச்சில் பதிப்பித்தார்.
  • கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ். எல் ஹார்ட் The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் 1999ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

பிசிராந்தையார்

  • இப்பாடலின் ஆசிரியர் பிசிராந்தையார்.
  • பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்.
  • ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர்.
  • இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன், அறிவுடை நம்பி.
  • பிசிரந்தையார் அரசனுக்கு அறிவுரை சொல்லக் கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோராவார்

 

 

 

Leave a Reply