6TH TAMIL காணி நிலம்

6TH TAMIL காணி நிலம்

6TH TAMIL காணி நிலம்

6TH TAMIL காணி நிலம்

  • அடுக்ககங்களில் வாழும் பலர் இயற்கை தரும் இன்பத்தை எண்ணி ஏங்குகிறார்கள்
  • ‘வீடு’ என்பது எப்படி இருக்க வேண்டும் என்று பாரதியார் கற்பனை செய்கிறார்.
  • இயற்கைச் சூழலை உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்த்துகிறார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • காணி = நில அளவைக் குறிக்கும் சொல்
  • மாடங்கள் = மாளிகையின் அடுக்குகள்
  • சித்தம் = உள்ளம்

பாடல் பொருள்

  • காணி அளவு நிலம் வேண்டும்.
  • அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும்.
  • அழகான தூண்களையும் தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும்.
  • நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும்.
  • இளநீரும் கீற்றும் தரும் தென்னைமரங்கள் வேண்டும்.
6TH TAMIL காணி நிலம்
6TH TAMIL காணி நிலம்

பாரதியார் ஆசிரியர் குறிப்பு

  • இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.
  • அவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
  • இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
  • எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
  • தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
  • மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
  • நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
  • பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.

 

 

 

 

 

 

Leave a Reply