7TH TAMIL பேசும் ஓவியங்கள்

7TH TAMIL பேசும் ஓவியங்கள்

7TH TAMIL பேசும் ஓவியங்கள்

7TH TAMIL பேசும் ஓவியங்கள்

  • ஆயகலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்று ஓவியக்கலை
  • காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் ஓவியத்திற்கு உண்டு.
  • ஒரு கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஓர் ஓவியத்தால் மிக நுட்பமாகப் புரிய வைத்துவிட முடியும்.
  • அதனால்தான் ஓவியத்தை நுண்கலைகளுள் முதன்மையான ஒன்றாகக் கருதுகின்றனர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

குகை ஓவியம்

7TH TAMIL பேசும் ஓவியங்கள்
7TH TAMIL பேசும் ஓவியங்கள்
  • பழங்கால மனிதர்கள் முதலில் குகைகளில் தான் ஓவியங்களை வரைந்தனர்.
  • செய்திகளை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்காக ஓவியங்கள் வரையப்பட்டன.
  • பழங்கால ஓவியங்கள் பெரும்பாலும் “கோட்டோவிங்கள்” ஆக இருந்தன.
  • குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்டவை = மண் மற்றும் கல் துகள்கள்.

சுவர் ஓவியம்

7TH TAMIL பேசும் ஓவியங்கள்
7TH TAMIL பேசும் ஓவியங்கள்
  • மனிதர்கள் வீடு கட்டி வாழத் துவங்கியது முதல் சுவர் ஓவியங்கள் உருவாகத் துவங்கின.
  • சித்தன்னவாசல் ஓவியங்கள் “சுவர் ஓவியங்கள்” வகையை சார்ந்தது ஆகும்.
  • தஞ்சை பெரியகொவிளில் சுவர் ஓவியங்கள் நிறைய உள்ளன.
  • தஞ்சை பெரியகொவிளில் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

துணி ஓவியம்

  • ஓவியம் வரையப் பயன்படும் துணியை எவ்வாறு அழைத்தனர் = “எழினி, திரைச்சீலை, கிழி, படாம்”.
  • சீவகசிந்தாமணி காப்பியத்தில் “குணமாலை” என்னும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியைச் சீவகன் துணியில் வரைந்ததாக கூறப்பட்டுள்ளது.
  • துணி ஓவியங்களை தற்காலத்தில் “கலம்காரி ஓவியங்கள்” என்று அழைக்கின்றனர்.

ஓலைச்சுவடி ஓவியங்கள்

7TH TAMIL பேசும் ஓவியங்கள்
7TH TAMIL பேசும் ஓவியங்கள்
  • ஓலைச்சுவடியில் வரையப்படும் ஓவியங்கள் = கோட்டோவியங்கள், வண்ணப்பூச்சு ஓவியங்கள்.
  • ஓலைச்சுவடி ஓவியங்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் காணலாம்.

செப்பேட்டு ஓவியம்

  • முற்காலத்தில் அரசர்களின் ஆணைகளையும், அரசு ஆவணங்களையும் செப்பேட்டில் பொறிப்பர்.
  • உளி கொண்டு வரைக்கோடுகளாக வரையப்படும் ஓவியங்கள் = செப்பேட்டு ஓவியங்கள்.
  • நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குகள் போன்ற ஓவியங்கள் இடம்பெறுவது = செப்பேட்டு ஓவியங்கள்.

தந்த ஓவியங்கள்

7TH TAMIL பேசும் ஓவியங்கள்
7TH TAMIL பேசும் ஓவியங்கள்
  • யானையின் தந்தங்கள் மீது பலவகை நீர் வண்ணங்களை பயன்படுத்தி வரையப்படும் ஓவியங்கள் இது.
  • கேரளாவில் இவ்வகை ஓவியங்கள் அதிகம் காணப்படுகிறது.

கண்ணாடி ஓவியங்கள்

  • பலவகையான உருவங்கள், இயற்கை காட்சிகளை வரைய கண்ணாடி ஓவியங்கள் பயன்படுகின்றன.
  • தஞ்சாவூரில் கண்ணாடி ஓவியர்கள் அதிகளவில் உள்ளனர்.

தாள் ஓவியங்கள்

  • தற்கால ஓவியங்கள் இது.
  • கோட்டோவியங்கள், வண்ண ஓவியங்கள், நவீன ஓவியங்கள் என பலவகை ஓவியங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது.
  • தற்காலத்தில் ஓவியங்கள் வரைய பயன்படுபவை = கரிக்கோல், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம்.

கருத்துப்பட ஓவியங்கள்

  • கருத்துப்பட ஓவியங்களை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் = பாரதியார்.
  • பாரதியார் தனது “இந்தியா” இதழில் முதன் முதலில் கருத்துப்பட ஓவியங்களை அறிமுகம் செய்தார்.
  • கருத்துப்பட ஓவியங்களின் மற்றொரு வடிவம் = கேலிச்சித்திரம்.

கேலிச்சித்திரம் என்றால் என்ன

7TH TAMIL பேசும் ஓவியங்கள்
7TH TAMIL பேசும் ஓவியங்கள்
  • மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதையே “கேலிச்சித்திரம்” என்பர்.
  • கேலிச்சித்திரங்களை அறிமுகம் செய்தவர் = பாரதியார்.

நவீன ஓவியங்கள்

  • புதுமையான பார்வையில் புதுமையான கருத்துக்களை வெளிப்படுத்த நவீன ஓவியங்கள் பயன்படுகின்றன.
  • பார்வையாளர்களின் மனப்பான்மைக்கு ஏற்பப் பொருள் கொள்ளும் வகையில் கோடுகளாகவும் கிறுக்கல்களாகவும் வரையப்படுகின்றன நவீன ஓவியங்கள்.

சங்க இலக்கியங்களில் புனையா ஓவியங்கள்

  • “புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = நெடுநல்வாடை.
  • “புனையா ஓவியம் புறம் போந்தன்ன” என்ற டிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை.
7TH TAMIL பேசும் ஓவியங்கள்
7TH TAMIL பேசும் ஓவியங்கள்

இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்

  • ஓவிய மண்டபத்தில் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.
  • “இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = பரிபாடல்.
  • ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறும் செய்தி இடம்பெற்ற நூல் = பரிபாடல்.

ஓவியத்தின் வேறு பெயர்கள்

  • ஓவியத்தின் வேறு பெயர்கள் = ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி.

ஓவியம் வரைபவரின் வேறு பெயர்கள்

  • ஓவியம் வரைபவரின் வேறு பெயர்கள் = கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர்.

ஓவியக் கூடத்தின் வேறு பெயர்கள்

  • ஓவியக் கூடத்தின் வேறு பெயர்கள் = எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம், சித்திர சபை.

இராஜா இரவிவர்மா

  • ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் இராஜா இரவிவர்மா.
  • இவரது ஓவியமுறைகள் பிற்காலத்தில் நாட்காட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

நாட்காட்டி ஓவியங்களின் முன்னோடி

  • நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் = கொண்டையராஜு.
  • நாட்காட்டி ஓவியங்களைப் பசார் பெயிண்டிங் என்றும் அழைப்பர்.
  • பசார் பெயிண்டிங் என்று அழைக்கப்படுவது = நாட்காட்டி ஓவியங்கள்.

 

 

 

 

Leave a Reply